பதிவு செய்த நாள்
23
நவ
2020
08:11
நாமக்கல் : தமிழ் மாதம் முதல் ஞாயிற்று கிழமையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன.
நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால், 18 அடி உயரத்தில் உருவான ஆஞ்சநேயர், நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அங்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை மற்றும் தமிழ், ஆங்கில, தெலுங்கு வருட பிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, தீபாவளி, பொங்கல் உள்ளிட விழாக்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதன்படி, நேற்று கார்த்திகை மாத முதல் ஞாயிறு அன்று, அபி ேஷகம் செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 11:00 மணிக்கு பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபி ேஷகம் நடந்தது.மதியம், 1:00 மணிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக, பக்தர்கள் சமூக இடைவெளியுடனும், முக கவசம் அணிந்தபடியும், வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே, பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.