பதிவு செய்த நாள்
12
ஜன
2021
07:01
திருப்போரூர் : காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை ஒட்டி, சிறுதாவூர் ஊராட்சியில் நடவு செய்யப்பட்ட, 600 அத்திமரக்கன்றுகள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அத்தி வரதர் வைபவம், 2019, ஜூலை, 1 முதல், ஆகஸ்ட், 17ம் தேதி வரை, 48 நாட்கள் நடைபெற்றது.இந்த வைபவத்திற்கு, பல மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து, கோடிக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அத்தி வரதரை தரிசித்தனர்.விழா முடிந்த பின், அத்தி வரதர் உற்சவத்தை சிறப்பிக்கும் விதத்தில், திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 600 அத்தி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்த மரக்கன்றுகளை பாதுகாக்க, சுற்றி இரும்பு வேலி, ஆழ்துளை கிணறு மற்றும் மினி டேங்க் அமைத்து, மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.முறையான பராமரிப்பால், தற்போது அவை நன்கு வளர்ந்து, அத்தி வரதர் வைபவத்தை நினைவூட்டுகின்றன.