பேரக்குழந்தைகளுக்கு எப்போதும் அறிவுரை சொல்வாள் பாட்டி ஒருத்தி. அதை விரும்பாத அவர்கள், கிளி ஒன்றை வளர்த்து பாட்டியை கேலி செய்ய வைத்தனர். ‘நீ ஒரு பைத்தியம்’ என பாட்டியைக் கண்டதும் சொல்லி வந்தது அந்தக் கிளி. மனஉளைச்சலுக்கு ஆளான பாட்டி ஒருமுறை பாதிரியார் ஒருவரைக் காணச் சென்றாள். அங்கேயும் ஒரு கிளி இருந்தது. அது அங்கு நடக்கும் பிரார்த்தனையை கேட்டு, ‘‘ஆமென்.. ஆமென்’’ என்றது. நம் வீட்டுக் கிளியும் இங்கிருந்தால் நல்ல புத்தி வரும் என நினைத்தாள். மறுநாளே பாதிரியார் வீட்டு கிளியின் அருகில் தன் கிளியை விட்டாள். பிறவிக்குணம் மாறுமா? ‘‘நீ ஒரு பைத்தியம், நீ ஒரு பைத்தியம்’’ என வீட்டுக்கிளி சொல்ல ‘‘ஆமென்...ஆமென்.’’ என்றது பாதிரியாரின் கிளி. அதைக் கேட்டு வருந்தினாள் பாட்டி. ஆனாலும் அவள் குழந்தைகளுக்கு அறிவுரை சொல்வதை கைவிடவில்லை. ‘‘விமர்சிக்கிறார்கள் என்பதற்காக பிறருக்கு நல்லதைச் சொல்லாமல் இருக்க வேண்டாம்.