சங்கடஹர சதுர்த்தியன்று படித்தால் விநாயகர் அருள் கிடைக்கும்
பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ் உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்? உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும் தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும் கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத் தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம் ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப் போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன் ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன் உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப் பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச் சந்திகளில் தோத்திரஞ் செயினும் சகல கரும சித்தி பெறும் சிந்தை மகிழச் சுகம் பெறும் எண் தினம் உச்சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர் எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். திங்கள் இரண்டு தினந்தோறும் திகழ ஒருபான் முறையோதில் தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொரு முறைமை பொங்கும் உழுவலால் கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப்பினர் மறைந்தார்.