* பேசுவது வெள்ளி என்றால், மவுனம் காப்பது தங்கம். * பசித்தவருக்கு உணவு அளிப்பவனை சொர்க்கம் தேடி வரும். * ஏழைக்கு தானம் செய்வதை விட, அதிக நன்மை மனைவிக்கு செலவு செய்வதில் உண்டு. * கடன் கொடுக்கல் வாங்கலில் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். * பணவசதி இருந்தும் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லதல்ல. * இரக்கமற்ற கஞ்சன் சொர்க்கம் நுழைய மாட்டான். * ஆசைகள், தேவைகளைக் குறைத்தால் சுதந்திரமாக வாழலாம். * கொடுத்த வாக்குறுதியை பாதுகாக்காதவன் நல்ல மனிதன் அல்ல. * உங்களுடைய பாவங்களை இறைவன் மன்னிப்பான். ஆனால் உங்களுடைய கடன் திருப்பித் தராவிட்டால் மன்னிக்க மாட்டான். * உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அதனதன் அளவு முறையுடன் தான் படைக்கப்பட்டுள்ளது. * குடும்பத்திற்காக செலவழித்தால் தர்மத்தின் நன்மையை இறைவன் அளிக்கிறான். பொன்மொழிகள்