Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » தெற்கு வாயில் பூஜாமுறை
படலம் 2 : தெற்கு வாயில் பூஜாமுறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2012
04:06

இரண்டாவது படலத்தில் தட்சிண திவாரார்ச்சனை விதி கூறப்படுகிறது. அதில் முதலாவதாக தட்சிண திவாரார்ச்சனையின் உத்தமோத்தமம் மத்யமம் அதமம் என்று மூன்று விதமாக ஆகும். பிம்பம் தட்சிணாபிமுகமாயிருப்பின் உத்தமோத்தம பூஜை செய்ய வேண்டும், முகலிங்கம், தட்சிணாபிமுகமாயிருப்பின் மத்யம பூஜை, லிங்கம் தட்சிணாபிமுகமாயிருப்பின் அதம பூஜை செய்ய வேண்டும் என்று பூஜையின் மூன்று விதி கூறப்பட்டுள்ளது. பிம்பங்களில் நடராஜரை தட்சிணாபிமுகபிம்பம் ச்ரேஷ்டம் எனப்படுகிறது.  அவ்யக்த லிங்கம் மோக்ஷத்தையும், வ்யக்த பிம்பம் ஐஸ்வர்த்தையும், மிஸ்ரமான முகலிங்கம் புத்தி முக்தியையும் அளிக்கும் என்பதாக பூஜாபலம் நிரூபிக்கப்படுகிறது.

ஆசார்யன் சவுசாசமன, ஸ்நான, ஸந்த்யோபாஸநம் செய்து, தட்சிணத்வாரமடைந்து சிவார்க்ய ஹஸ்தராக த்வாரத்தை அஸ்த்ர மந்திரத்தால் ப்ரோட்சித்து த்வாரபாலர்களை பூஜிக்க வேண்டும். என கூறி த்வார தேவதார்ச்சனை பிரகாரம் கூறப்படுகிறது. பிறகு தட்சிணாபிமுகலிங்கத்திற்கு அர்ச்சனை விதி நிரூபிக்கப்படுகிறது. அதில் கர்ப்பாவரண, வித்யேசாவரண, கணேசாவரண லோகேசாவரண, அஸ்த்ராவரண பூஜையில் விசேஷம் பிரதி பாதிக்கப்படுகிறது. அதில் லோஹஜம், சைலஜம், மிருண்மயம், தாதுஜம்ரத்னஜம், சித்ரஹீநசிலாபிம்பம் இவைகளில் மூலலிங்க பூஜைபோல் செய்ய வேண்டும். ரத்னஜம்லோஹஜம், பக்வம்ருண்மயபேரம் இவைகளுக்கு இஷ்டமான தினத்தில் பேரசுத்தி செய்ய வேண்டும், பிம்பம் தூசியுடன் இருந்தால் வஸ்த்ரத்தால் துடைக்க வேண்டும், புண்ய தினங்களில் ஸ்நபனம் செய்யவேண்டுமென சொல்லப்படுகிறது. பிம்ப அர்ச்சனை விஷயத்தில் ஆஸன கல்பனம் வித்யாதேஹ கல்பன விதிக்கான விசேஷம் கூறப்படுகிறது. பிரதிமை விஷயத்தில் விசேஷமாக கலாந்யாஸம் கூறப்படுகிறது. பிரதிமை லக்ஷணபப்படி அவைகளின் தியானம் செய்யவேண்டுமென சூசிக்கப்படுகிறது.

பிறகு ஆவாஹன ஸ்தாபன, ஸன்னிதான, ஸந்திரோதனங்களில் விசேஷ அனுஷ்டானம் கூறப்படுகிறது. அவ்வாறே பாத்யாசமநார்க்ய பிரதாந விஷயத்தில் செய்யப்படுகிற விசேஷம் நிரூபிக்கப்படுகிறது. பாத்யாதி விஷயத்தில் கூறப்பட்டுள்ள எல்லா த்ரவ்யமும் உள்ளது சிரேஷ்டமாகும். ஒரு த்ரவ்ய ஹீநம் மத்யமம் இருத்ரவ்ய ஹீநம் கந்யஸம் மூன்று த்ரவ்ய ஹீநம் நீசமாகும். புஷ்பதூபதீபநைவேத்ய தாம்பூலங்கள் மூலமந்திரத்தால் கொடுக்கப்படவேண்டும். காலக்ரமப்படி பலிஹோம நித்யோத்ஸவ நிருத்தங்கள் செய்யவேண்டும் என சூசிக்கப்படுகிறது. பிறகு உத்தமோத்தம மத்யமாதம பூஜைகளின் காலம் பிரதி பாதிக்கப்படுகிறது. லிங்க விஷய, பிரதிமா விஷயத்தில், கர்ஷணாதி பிரதிஷ்டாந்தமான எல்லா கர்மாவும், அவ்வாறே ஸம்வத்ஸரோத்ஸவ, பவித்ராரோஹந மாஸார்சந அங்குரார்ப்பண நித்யார்ச்சநாதிகள், இந்த தந்திரத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே ஆலோசித்து செய்ய வேண்டும். இவ்வாறான பிரகாரமாக நன்றாக கவனித்து தேசிகோத்தமன் உத்தராபி முகலிங்காதி பூஜைகள் செய்யவேண்டுமென கூறப்படுகிறது. முடிவில் ஸ்வாமிக்கு எந்த திக்கில் முகமுள்ளதோ அந்த திக்கே ஈசனுக்கு பூர்வம் என்று நிச்சயிக்கப்பட்டுள்ளது. அந்த திசையில் வசத்தால் மற்ற திசைக்கள் கல்பிக்கவும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டாம்படல கருத்து தொகுப்பாகும்.

1. தெற்கு திவார பூஜையை கூறுகிறேன். அந்த பூஜை மூன்று விதமாகும். லிங்கம், பிம்பம் அல்லது முகலிங்கம் இவைகளில் பூஜிக்கலாம்.

2. பிம்பம் தெற்கு முகமாக இருந்தால் உத்தமமாகும். முகலிங்கம் தெற்குமுகமாக இருந்தால் மத்யமம். மூலலிங்கம் தெற்கு முகமாக இருப்பது அதமமாகும்.

3. பிம்பத்திற்கும் முகலிங்கத்திற்கும் தெற்கு திவாரபூஜையும், நடராஜமூர்த்திக்கும் தெற்கு திவார பூஜை விசேஷமாக கூறப்படுகிறது.

4. லிங்கம் மேற்கு முகமாக இருப்பது உயர்ந்ததாகும். பிம்பத்திற்கு தெற்கு திவாரபூஜை உயர்ந்ததாக கூறப்படுகிறது. அவ்யக்த லிங்கம் மோக்ஷத்தை கொடுப்பதாகவும் வியக்தமான பிம்பங்கள் ஐஸ்வர்யத்தை கொடுப்பதாக வேண்டும்.

5. முகலிங்கம் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுப்பதாகவும் அறிந்து பூஜிக்க வேண்டும். ஆசார்யன் சரீர சுத்தி, அசமனம், ஸ்நானம் ஸந்தியாவந்தனாதிகளையும் செய்து

6. சிவ அர்க்யத்துடன் தெற்கு திவாரத்தை அடைந்து அதன் வாயிலை அஸ்திரமந்திரத்தினால் பிரோக்ஷித்து முறையாக திவார தேவதைகளை பூஜிக்க வேண்டும்.

7. விநாயகர், ஸரஸ்வதியை மேல்பாகத்தில், வலது பக்கம் கங்கை, நந்தியையும் இடது பக்கத்தில் யமுனையும் மஹாகாளரையும் முறைப்படி சந்தனாதிகளால் பூஜிக்க வேண்டும்.

8. (கற்பகிருகத்தில்) உள்ளே நுழைந்து வாஸ்து பிரம்மாவை, பூஜித்து ஆசார்யன் கிழக்கு முகமாக ஸ்வதந்திர முதலான ஆறு குணங்களையும் உடைய பரமேஸ்வரனை பூஜிக்க வேண்டும்.

9. லிங்க பூஜை விஷயத்தில் முன்பு போல் ஈசான திக்கில் ஈசானத்தையும், தத்புருஷத்தையோ, அகோரத்தையோ தெற்கில் பூஜிக்க வேண்டும்.

10. அகோரத்தையோ ஸத்யோஜாதத்தையோ மேற்கில் பூஜிக்க வேண்டும். ஸத்யோ ஜாதத்தையோ வாம தேவத்தையோ வடக்கில் பூஜிக்க வேண்டும்.

11. தத்புருஷத்தையோ வாமதேவத்தையோ கிழக்கில் பூஜிக்க வேண்டும். ஆக்னேய திக்கில் ஈசானத்தையும் கிழக்கு திக்கில் மனோன்மணியையும் பூஜிக்க வேண்டும்.

12. நைருதி, வாயு, ஆக்னேயம், ஈசானம் ஆகிய திசைகளில் முறையாக ஹ்ருதயாதி மந்திரங்களை பூஜிக்க வேண்டும். அல்லது முன்பு போலவே பூஜிக்க வேண்டும். அஷ்ட வித்யேச்வரர்களை தெற்கு முதலான திக்கில் பூஜிக்க வேண்டும்.

13. கண தேவதைகளை கிழக்கு திக்கிலோ முன் கூறியபடியே பூஜிக்க வேண்டும். கிழக்கு திக்கு முதற்கொண்டு இந்திரன் முதலானவர்களையும் வஜ்ரம் முதலிய தசாயுதங் களையும் பூஜிக்க வேண்டும்.

14. தெற்கு பாகத்தில் விருஷபத்தையும் பலிபீடம் கொடி, முதலியவைகளை முன்பு போல் ஸ்தாபிக்க வேண்டும். முன்பு கூறியபடியே செய்ய வேண்டும்.

15. லிங்கத்தை பூஜிக்கும் விஷயத்தில் இவ்வாறான முறையாகும். பிம்ப உருவ அர்ச்சனை சுருக்கமாக கூறப்படுகிறது. முனிவர்களே கேளுங்கள்.

16. உலோகம், கற்சிலை, மண்ணினால் ஆனது தாது பொருள் ரத்தினங்கள், இவைகளால் ஆன பிம்பத்தாலும் சித்திரங்கள் வரையப்படாத இடத்திலும் கற்சிலையிலும் மூலலிங்க பூஜை செய்ய வேண்டும்.

17. ரத்தின பிம்பம், உலோக பிம்பம், சுட்டமண், இவைகளால் ஆன பிம்பத்திற்கும் விருப்பப்பட்ட தினத்தில் புழுதிகளுடன் கூடியவைகளை பிம்ப சுத்தி செய்ய வேண்டும்.

18. வேஷ்டியால் துடைத்து நல்ல தினத்தில் ஸ்நபனம் செய்ய வேண்டும். மற்ற வகைகளுக்கு அர்ச்சனை செய்யும் முறை மணிகளால் ஆன லிங்கம் பீடம்

19. அல்லது பாணலிங்கத்திலோ கண்ணாடி முதலிய பொருட்களிலோ அர்ச்சனை செய்ய வேண்டும். ஆதாரசக்தி அனந்தன், தர்மன் முதலிய நான்கும்

20. நான்கு யுக ஆசனங்கள் அதச்சதனம், ஊர்த்வச்சதனம் பத்மத்தின் கர்ணிகைகளில் வாமம் முதலான ஒன்பது சக்திகளும் சூர்ய மண்டலம் முதலியவைகளையும் அதன் அதிபர்களையும்.

21. பூஜித்து பிம்ப ஹ்ருதயத்தில் வித்யா தேஹத்தையும், நேத்ரத்தையும் பூஜிக்க வேண்டும். சகளபிம்பத்தின் சிரசில் ஈசானத்தையும் முகத்தில் தத்புருஷனையும் ஸ்மரிக்க வேண்டும்.

22. மற்றவகைகள் சிவலிங்க அர்ச்சனை முறைக்கு சமமானதாகும். பிம்பங்களின் கலாநியாஸம் விசேஷமாக கூறப்பட்டது.

23. பிம்ப லக்ஷணம் கூறப்பட்டு தியானமும் விளக்கப்படுகிறது. ஹ்ருதய பீஜமான ஹாம் என்ற மந்திரத்திற்கு ஐந்தாவது வர்ணமான ஹூம் என்ற இடத்தில் ஆறாவது பீஜமான ஹளம் என்பதை வைத்து ஓம் ஹாம் ஹூம் ஹளம் என்ற பீஜாக்ஷரத்தையும்

24. மூன்று மாத்திரை உடையதாக பிம்பத்தில் சேர்க்க வேண்டும். இவ்வாறு ஆன மந்திரத்தை சொல்லி பிம்ப ஹ்ருதயத்தில் ஆவாஹிக்க வேண்டும்

25. நியாஸம் முறைப்படி செய்து ஸ்தாபித்து ஸந்நிதானம் ஸந்நிரோதனம் இவைகளை செய்து ஹ்ருதய மந்திரத்தால் பாதங்களில் பாத்யம் ஸமர்ப்பிக்க வேண்டும்.

26. பாத்ய திரவ்யங்கள் வெண்கடுகு, சந்தனம், விளாமிச்சைவேர், அருகம்புல் இவைகளுடன் ஏலக்காய், கிராம்பு, பச்சகற்பூரம், ஜாதிக்காய் இவைகள்

27. ஆசமன திரவ்யங்களை தத்புருஷ முகத்தில் கொடுக்க வேண்டும். பால், வெண்கடுகு, நெல்லிமுல்லி, எள், நெல், அக்ஷதை இவைகளுடனும்

28. தர்ப்பை, புஷ்பம், யவை, கடுகு, நெல், அரிசி இந்த திரவ்யங்களுடன் கூடியது அர்க்யமாகும். அந்த அர்க்யத்தை சிரசில் கொடுக்க வேண்டும்.

29. நெல், அரிசி இவைகளுடன் கூடியதும் ஆசமன திரவ்யமாகும். பாத்யாதிகளில் ஐந்தையும் சகளமூர்த்தி நிஷ்களமூர்த்தி

30. சகள நிஷ்கள மூர்த்தி இவைகளின் பூஜையிலும் ஸ்நபன பூஜையிலும் ஹோமத்திலும் பவித்ர உத்ஸவத்திலும் செய்ய வேண்டியதாக கூறப்பட்டுள்ளது.

31. எல்லா திரவ்யத்துடன் கூடிய பாத்யம் முதலான ஜலமானது உத்தமமாகும். ஒரு திரவ்யம் குறைந்த பாத்யம் மத்யமமாகும். இரு திரவ்யங்கள் குறைந்த பாத்யஜலம் அதமமாகும்.

32. மூன்று பொருள் குறைந்த பாத்யம் முதலான ஜலமானது அதமத்திற்கு அதமமாகும். இந்த முறைகள் எல்லா திவார பூஜைக்கும் உகந்ததாகும். சந்தனம் புஷ்பம் தூபம் தீபம் நைவேத்யம் இவைகளையும்

33. தாம்பூலத்தையும், மூலமந்திரத்தினால் பரமேஸ்வரனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். உரிய நேரத்தில் பலி, ஹோமம், உத்ஸவம், நாட்டியம் இவைகளை

34. ஏழரை நாழிகைக்குள் ஸந்த்யா பூஜை ஸ்நபன பூஜை பலிநைவேத்யம், அக்னிகார்யம், நித்ய உத்ஸவம், சுத்த நிருத்தம் இவைகளை செய்ய வேண்டும். மூன்று இரண்டு இவைகளால் குறைந்ததும் ஐந்து இரண்டு இவைகளால் குறைந்ததுமான நேரங்களில் பூஜையில் அங்கங்களையும் ஐந்து ஏழரை நாழிகைகளிலோ பூஜை செய்ய வேண்டும்.

35. உத்தமோத்தம பூஜையானது ஆறு மணி நேரத்திலும், மத்யம பூஜையானது பத்து நாழிகைக்குள்ளும் அதம பூஜையானது ஏழரை நாழகைக்குள்ளுமாகும்.

36. பூஜையின் இடைவெளி காலத்தை எட்டு பாகமாகவோ ஒன்பது பாகமாகவோ பிரித்து பூஜை செய்ய வேண்டும். உழுதல் முறை முதல் பிரதிஷ்டை முறை உள்ள கார்யம் ஸம்வத்ஸரோத்ஸவம்.

37. பவித்ர உத்ஸவம், மாதபூஜை, அங்குரார்பணம் நித்யார்ச்சனை முதலியவைகள் இந்த ஆகமத்தில் கூறப்பட்டுள்ளது.

38. இவைகளை நன்கு குறிப்பு அறிந்து ஸகளம், நிஷ்களம், சகளநிஷ்களம் ஆகிய மூர்த்திகளுக்கு பூஜை முறைகளை செய்ய வேண்டும். இந்த முறைப்படியே ஆசார்யன் நன்கு கவனித்து.

39. வடக்கு முகமுள்ள பிம்பங்களுக்கும் பூஜைகளை செய்ய வேண்டும். கிழக்கு திக்கு பாகத்தில் நடுவிலும், வியக்தலிங்கபூஜை விபரமாக கூறப்பட்டுள்ளது.

40. மிகுதியாக கூறுவானேன். எவ்வாறு எந்த மூர்த்தியின் சரீரமும் முகமும் உள்ளதோ அந்த மூர்த்தியின் திசையை கிழக்காக நிச்சயிக்கப்பட வேண்டும். பிராம்மண உத்தமர்களே.

41. இந்த முறைப்படியே திசைகளை அறிந்தவர்களால் மற்ற திசைகளை கற்பிக்க வேண்டும்.

இவ்வாறாக தெற்கு திவார பூஜையாகிய இரண்டாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar