வெற்றிக்காணிக்கை என்ற பெயரில் உடலுக்கு ஊறுவிளைவித்து கொள்ள வேண்டாம்: ஸ்டாலின் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04மே 2021 02:05
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் பொதுவக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் மனைவி வனிதா, 32. இவர் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெற்றி பெற்று, முதல்வராக வேண்டுமென பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வேண்டியுள்ளார். தொடர்ந்து தி.மு.க., வெற்றி பெற்றதையடுத்து தனது வேண்டுதலின்படி, பரமக்குடி முத்தாலம்மன் கோயில் வாசலில் கத்தியால் தனது நாக்கை அறுத்துக் கொண்டார். இதனையடுத்து, திமுக வெற்றி பெற்றதற்காக நேர்த்திக்கடன் என்ற பெயரில் திமுக தொண்டர்கள் உடலுக்கு ஊறுவிளைவித்து கொள்ள வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.