Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஆசார்ய அபிஷேக முறை
படலம் 24: ஆசார்ய அபிஷேக முறை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2012
03:06

24வது படலத்தில் ஆசார்ய அபிஷேக முறை கூறப்படுகிறது. முதலில் எந்த கர்மாவால் ஆசார்ய தன்மை ஏற்படுகிறதோ அப்பேர்ப்பட்ட ஆசார்ய அபிஷேக விதியானது கூறப்படுகிறது. என்று பிரதிக்ஞை செய்யப்படுகின்றது ஆர்யாவர்த்த தேசத்தில் உண்டானவரும் நல்ல அழகுடன் கூடிய ஸ்ரீமான்களை தேசிகனாக உண்டாவது பெருந்தன்மையாகும் என கூறி ஆர்யாவர்த்த தேசத்தில் லக்ஷணம் கூறப்படுகிறது. எங்கு நல்ல ஆசாரமுடைய பிராம்மணர்கள் தபஸ்விகள், முனிவர்கள் வசிக்கிறார்களோ எங்கு வேதங்களும் தேவர்களும் கொண்டாடப்படுகிறார்களோ அதுவே ஆர்யாவர்த்தமாகும். விந்திய மலையின் சமுத்திர மத்தியில் இருக்கும் தேசம் ஆர்யாவர்த்த மென்று கூறப்படுகிறது. பிறகு க. முதல் எட்டு எண்ணிக்கையில் விருப்பப்பட்ட தேசம் ஆர்யாவிருத்தம் என கூறி ககாரம் முதலிய தேசங்களின் அளவு கூறப்படுகிறது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்கள் அவரவர் அனுஷ்டானங்களில் மட்டும் உரியவர்கள் ஆவர்கள். ஆதிசைவ குலத்தில் ஜனித்தவர்கள் மட்டுமே ஸ்தாபனம் முதலிய கர்மாக்களின் உயர்ந்தவர்கள் என கூறி ஸ்தாபனம் முதலிய கர்மாக்களின் உயர்ந்தவர்கள் என கூறி ஸ்தாபனம் முதலிய கார்யங்கள் விளக்கப்படுகிறது. பிராம்மணர் முதலிய நான்கு வர்ணத்தவர்களுக்கு எந்தஎந்த கார்யங்களில் அதிகாரம் என்று விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்ய அபிஷேக விஷயத்தில் தள்ளுபடி செய்யப்படும் அதிகாரிகளின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய அபிஷேக விதி கூறப்படுகிறது. அங்குரார்ப்பணத்துடன் நல்ல லக்னத்துடன் கூடிய தினத்தில் செய்யவும் என்று காலம் கூறப்படுகிறது. 

பிறகு இரண்டு வேதிகைகளுடன் கூடிய மண்டபம் அமைக்கும் முறை நன்கு சிவபூஜை ஹோம லக்ஷணம் விடுபட்ட கிரியையுடன் கூடிய சிஷ்ய விஷயத்தில் தீட்சை செய்யும் விஷயம் அந்தர்பலி, பஹிர்பலி செய்யும் வரை ஆகிய விசேஷ கார்யங்கள் செய்யவேண்டும் என்பதாக விளக்கப்படுகிறது. பிறகு சுத்தி செய்யும் விஷயத்தில் உபயோகிக்க வேண்டிய பொருள்களின் விளக்கம் மண்டபத்தில் கும்பஸ்தான முறை கூறப்படுகிறது. அங்கு கும்ப லக்ஷணம் கூறியபடி 9,5 குடமோ ஸ்தாபிக்க வேண்டும் அல்லது ஒரு கும்பமோ வைக்க வேண்டும் கும்பங்களின் பூஜை செய்ய வேண்டிய தேவதைகளும் பூஜை முறையும் கூறப்படுகின்றன தென்பாகம் உள்ள வேதிகையில் கும்பஸ்தாபனம் வடக்கு பாகம் உள்ள வேதிகையில் சிஷ்யனை அமர சொல்லவும். சந்தனம், புஷ்பம் இவைகளால் பூஜிக்க வேண்டும். ஆர்த்தி எடுக்கும் முறை என்பதான கிரியா விசேஷங்கள் விளக்கப்படுகிறது. பிறகு ஆசார்யனால் சிஷ்யனுக்கு தலைப்பாகை முதலியவைகளை அளக்கும் முறையும் அரச சின்னங்களாகிய குடை, சாமரம் முதலியவைகளை கொடுக்கும் முறைகளையும் கூறப்படுகிறது. ஆசார்யனால் ஹே தேசிகரே இன்று முதல் தீட்சை சிவாகம இலக்கணம் முதலிய கார்யங்களை முறைப்படி செய்வாயாக என உத்தரவு பிறப்பித்த முறையாக அவ்வாறே இவன் உன்னுடைய அனுக்ரஹத்தால் இடையூறு இன்றி அதிகாரம் செய்யட்டும் என்று ஸ்வாமியிடம் தெரிவிக்கும் முறையும் கூறப்படுகிறது. பிறகு அங்கு செய்ய வேண்டிய ஹோம முறையும் விளக்கப்படுகிறது. ஆசார்யனால் சிஷ்யனுக்கு தன் அதிகாரத்தை ஸமர்ப்பணம் செய்வது, பிராயச்சித்த ஹோமவிதி என்பதான அபிஷேகத்திற்கு பிறகு செய்ய வேண்டிய விசேஷ பூஜைகள் விளக்கப்படுகின்றன. பின்பு இந்த முறையாலேயே ஸாதக அபிஷேகமும் கூறப்படுகிறது. ஆனால் அங்கு சாத்யமான மந்திரத்தால் பூஜிக்கப்பட்ட கடங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும் என்று சாதகாபிஷேக விதி அதிகமாக சுருக்கமாக காணப்படுகிறது. பிறகு புத்ரகன், ஸமயி, மஹேஸ்வரன் பரிசாரகன் இவைகளின் லட்சணம் கூறப்பட்டுள்ளது. அதில் பரிசாரகர்கள் லிங்க அர்ச்சனையில் யோக்யர்கள் இல்லை. இவ்வாறு தீட்சை முதலியவைகளில் யோக்யர் ஆவார்கள் என சொல்லப்படுகிறது. இருந்தாலும் சிவபிராம்மண குலத்தில் உண்டான மாஹேஸ்வரர்கள் சிருஷ்டி ஆரம்பத்தில் பரமேஸ்வரனால் தீட்சை செய்யப்பட்டவர்கள் அப்படி இருந்தும் என்னை அர்ச்சிப்பதற்காக அவர்களின் சக்தியின் பொருட்டு தீட்சை மறுபடியும் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. பின்பு அனுபவிக்கும் விஷயத்தில் பிரம்மசாரியோ, கிருஹஸ்தர்களுக்கு தேசிகன் ஆகிறான்.

பிறகு கிருஹஸ்தாஸ்ரம குரு ஸாந்தானிக குரு முண்டிவிரதி, விரதார்பகன் ஆதிசைவன் இவர்களின் அமைப்பு கூறப்படுகிறது. பின்பு எல்லா விரதங்களின் உத்தமமான ஆசார்ய விரதத்தின் அமைப்பு கூறப்படுகிறது. பிறகு ஆசார்ய, சாதக புத்ரக, ஸமயீ, இவர்களால் கர்மாக்களின் லக்ஷணம் கூறப்படுகிறது. நித்யநைமித்திக கர்மாக்களின் அதிகாரி நிரூபணம் அதில் ஆசார்ய ஸாதகனும் நித்ய நைமித்திக கர்மாக்களின் அதிகாரி நிரூபணம் அதில் ஆசார்ய சாதகனும் எல்லா கர்மாவிலும் நன்கு யோக்யமானவன் என்று கூறப்படுகிறது. லக்ஷம் ஸ்லோகம் அறிந்தவன் என்று குறித்து கூறப்படுகிற குருவின் அமைப்பு கூறப்படுகிறது. பின்பு நான்கு பிரிவை உடைய காமிகம் முதலிய ஆகமங்கள் சம்ஹிதை என்று சம்ஹிதா லட்சணம் கூறப்படுகிறது. பிறகு சைவம், பாசுபதம், சோம ஸித்தாந்தம், லாகுலம் என்று சைவம் நான்கு விதமாகும். இந்த நான்கு விதமான சைவ தந்திரம் மஹேஸ்வரனுடைய நான்கு முகத்திலிருந்து உண்டானதாகும். இந்த நான்கு கிரந்தங்களில் ஒன்றுக்கொன்று முன்னதானதாக சிறந்த குணத்தை உடையதாகும். இந்த நான்கு வித கிரந்தமும் வாம, தட்சிண சித்தாந்தபேதத்தினால் ஒவ்வொன்றும் மூன்று விதமாகும். அவைகளில் சித்தாந்தம் சிரேஷ்டமாகும். அந்த சித்தாந்தத்திலும் சைவ சித்தாந்தம் எல்லாவற்றிலும் உத்தமோத்தமாக கூறப்படுகிறது. பிறகு சித்தாந்த அதிமார்க்க, அத்யாத்ம வைதிக, லௌகீகம் முதலிய ஐந்து வகைகளில் ஒன்றுக்கொன்று உச்சநீச்ச பாவமும் அவைகளை கூறியவரும், அவைகளில் ஏற்பட்ட முறையும் லக்ஷணமும் விளக்கப்படுகிறது. அங்கே லௌகீக, வைதீக, அத்யாத்ம, அதிமார்க்க சித்தாந்தங்களுக்கு முறையாக பிரம்மா விஷ்ணுருத்திரன் ஈஸ்வரன் ஸதாசிவம் ஆகியவர்கள் ஐந்து காரணேஸ்வரர்கள் சொல்லப்பட்டவர்களாக கூறப்படுகிறது. பிறகு வாமம், எல்லா சாஸ்திரத்திலும், அதமம் வாமத்திலிருந்து தட்சிணம் உத்திரம், தட்சிணத்திலிருந்து கவுளம், சிரேஷ்டம் கவுளத்திலிருந்து மஹாகவுலிம் சிரேஷ்டம், பூர்வாம்ணாயம், சிரேஷ்டம், பூர்வாம்ணாயத்திலிருந்து சித்தாந்தம் உத்தமம் ஆகிறது என்று சித்தாந்தத்தின் உன்னத தன்மை விளக்கப்படுகிறது. இங்கு சித்தந்தாத்திலிருந்து உன்னத ஞானம் வேறு இல்லை என்று சாஸ்திரகுறிக்கோள் ஆகும் என கூறப்படுகிறது. பிறகு சித்தாந்தம் வேதசாரம் சித்தாந்தத்தில் கூறப்பட்டுள்ள ஆசார அனுஷ்டானம், வைதிக ஆசாரம் என கூறி வைதீக கர்மா சைவகர்மாக்களின் செயல்படும் முறையில் ஆதரிக்கும் முறை கூறப்படுகிறது.

பிறகு காமிகம் முதல் வாதுளம் வரையிலான 28 ஆகமங்களும் சிவனுடைய அங்கமாக விளக்கப்பட்டுள்ளது. இங்கு பூர்வ காமிகாகமத்தில் தந்திராவதார படலத்தில் காமிகம் பாதயுக்மம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படலத்திலோ காமிகம் ஊர்த்வ மகுடம் என கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் முரண்பாட்டிற்கு பரிகாரம் கூறவேண்டும் என்று முனி சிரேஷ்டர்களின் வேண்டுதலாகும். அங்கு ஸ்ருஷ்டி, ஸம்ஹார பேதத்தால் (இரண்டு விதமாக) போக மோக்ஷ ஸித்திக்காக ஞானமய சித்திக்காக ஞானமய மானது தியான பேதத்தால் இரண்டு விதமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. பிறகு மனுஷ்யர்களால் ரிஷி வாக்யமும், ரிஷிகளால் தேவவாக்யமும், தேவர்களால் பிரம்ம வாக்யமும், பிரம்மாவால் விஷ்ணு வாக்யமும் விஷ்ணுவால் சிவவாக்யமும் பாதிப்பதற்கு சக்தி இல்லை என கூறப்படுகிறது. காமிகம் முதல் வாதுளம் வரை 28 ஆகமங்களும் ஈசானம் முதலிய ஐந்து முகங்களில் இருந்து உண்டானது பற்றி விளக்கப்படுகிறது. உபபேதத்துடன் 28 ஆகம தந்திரங்களை எந்த குருவானவர் அறிகிறானோ அந்தகுரு சிவனாக ஆகிறான் என கூறப்படுகிறது. பிறகு விசேஷமான ஆசார்யனால் ஆரம்பிக்கப்பட்ட கார்யத்தில் ஹீனமான குருவிற்கு அதிகாரம் இல்லை ஹீனமான குருவால் தொடங்கப்பட்ட கார்யத்தில் விசேஷ குருவிற்கு அதிகாரம் உண்டு என்று கூறப்படுகிறது. விசேஷமான குருவிற்கு மரணாதி முதலிய சம்பவங்கள் ஏற்பட்டால் வேறு குருவை அடையும் பொழுதும் பெரும் இழப்பு ஏற்படும். அதனால் அரசன், அரசாங்கம் கிராமத்தை அதிகாரம் செய்பவன் இவர்களுக்கு பெரும் (நஷ்டம்) குற்றம் ஏற்படுமென கூறப்படுகிறது. உலக பிரஸித்தமான வித்தைகள் குருவிற்கு கொடுக்கப்பட்ட அணு அளவு திரவியமும் அரசனுக்கு, புகழ் ஸெளக்யம் இவைகளை அதிகமாக ஏற்படுத்துகிறது. அந்த குருவிற்கான தானாமானது உத்தமோத்தமமாகும். யாரால் குருவினுடைய திரவ்யம் அபகரிக்க படுகிறதோ, அவன் பாபி. மட்டமான மனிதனாக அறிய வேண்டும். அவன் எல்லோராலும் வெளியேற்றப்பட்டவனாகிறான் என கூறப்படுகிறது. இவ்வாறாக 24 வது படல கருத்து சுருக்கமாகும் !!

1. எந்த அபிஷேக கிரியையால் பூமியில் தேசிகனாக ஆகிறானோ. அந்த அபிஷேக விதியை கூறுகிறேன். அந்த தேசிகன் ஆர்யா வர்தோத்பவன். ஸ்ரீமான் ஸர்வலக்ஷணம் உடையவனாக வேண்டும் ஆகிறான்.

2. எங்க ஸதாசார ப்ராம்மணர்கள், யதிகள், தபோதனர்கள், தேவர்கள், இருக்கின்றார்களோ வேதங்களின் இருக்கின்றனவோ அந்த தேசம் ஆர்யாவர்த்தம் எனப்படும்.

3. இந்த பிரதேசமானது விந்தியகடலை மட்டும் மத்தியாக உள்ளதாக கூறவில்லை. பிரஸங்கமாக க என்ற எழுத்தை உடைய எட்டுதேசமும் ஆர்யாவர்த்தம் எனப்படுகிறது.

4. கர்நாடகம், கலிங்கம், கச்சத்தீவு, காஷ்மீர், கொங்கணம், கர்ஹாடம் (கோவா) குக்குடம், கங்கதேசம் என்று கூறப்பட்டுள்ளது.

5. பிரதிஷ்டா ஸ்தாபனாதிகளில் ஆதிசைவ குலஜாதிஸ்தர்கள் ச்ரேஷ்டர்கள், ப்ராம்மணாதி நான்கு வர்ணத்தவர்கள் ஸ்வகர்மானுஷ்டான யோக்யர்கள்.

6. எல்லா மனிதர்களின் தீøக்ஷ, பிரதிஷ்டை, உத்ஸவம், ஸ்நபனம், பிராயச்சித்தம், அபிஷேகம்.

7. வியாக்யானம் ஆகிய கர்மாக்களிலும் ஆத்மார்த்த பூஜை ஸர்வ தேவார்சனமான பரார்த்த பூஜைகளில் ஆதிசைவகுருவே சிறந்தவராவர்.

8. பிராம்மணாதி மூன்று வர்ணத்தவர்கள் தீøக்ஷ, ஸ்தாபனங்களில் பிராம்மணர், க்ஷத்ரியர்களுக்கும், க்ஷத்ரியர் சூத்ர வைச்யர்களுக்கும்

9. வைச்யன் சூத்ரனுக்கும், ஸ்வ ஜாதிகளுக்கும் தீøக்ஷயில் யோக்யனாகிறான். ஆத்மார்த்த இஷ்டமான சலலிங்க பிரதிஷ்டையில் பிராம்மணாதி மூவரும் யோக்யர்கள்.

10. சூத்ரனும் சூத்ர தீøக்ஷயிலும் ஆத்மார்த்த சலலிங்க பிரதிஷ்டையிலும் யோக்யனாவான் நைஷ்டிகன் பாணலிங்கமும் க்ஷணிகலிங்கமும் ஸ்தாபிக்கலாம்.

11. ஆசார்யன் கோளகன் கருணை உள்ளவனாயும் பரிவர்த்தம் செய்பவனாயும் இருக்கிறான். அவ்வாறே பாரவேத்தா (அண்ணனுக்கு முன் தான் விவாஹம் செய்து கொள்ளுபவன்) சம்பளம் பெற்று பூஜை செய்பவன். மறுபிறப்புள்ளவன்.

12. பக்ஷ்ய நிஷித்தத்தை பக்ஷிப்பவன், குண்டம், பஸ்மஅங்குரம் கத்தியை வைத்திருப்பவன் கருப்பு பல்லை உடையவன், ஆரூடன், தள்ளப்பட்டவன்.

13. சோம்பேறி வ்ருஷலன், வ்ராத்யன், வேச்யாபதி, அசத்து, சஸ்திரத்தை உடையவன் நபும்ஸகன், வ்யாதிஸ்கன், விகார நகமுடையவன்

14. துக்கமுடையவன், பிறர்மனைவியையுடையவன், வ்ருஷலீபதி, சித்திரகாரன், பாடுபவன், நாட்டியமாடுபவன் ஆகியவர்களை விட்டுவிட வேண்டும்.

15. வேறு தேசமுடையவன், அசுத்த புத்தி, தாந்திரிகள், பிறரை குறை கூறுபவன், பலநோயை உடையவன்.

16. பிறப்பு தீட்டையுடையவன், காமுகன், வைத்யன், குதர்கம் பேசுபவன், கெட்ட வார்த்தை பேசுபவன், பவுத்தாதி சாஸ்திர விருப்பமுடையவன், சன்யாஸி, விரதத்திலுள்ளவன்,

17. சபலபுத்தியையுடையவன், முட்டாளாக சஞ்சரிப்பவன், கூலிவாங்கி பிழைப்பவன் கப்பம் வாங்குதலில் விருப்பமுடையவன், நியாஸம், வைசேஷிகம்

18. ஸாங்கயம், பலவித பேத மாயாவாதம், ஆர்ஹதமதம், பவுத்தமதம், லோகாயத சாஸ்திரம், மீமாம்ஸை

19. மற்ற குதர்க மார்க்கங்கள், காபால மதம், பாஞ்சராத்ரம், ஸோம சித்தாந்தம், பூர்வாம்னாயம் பச்சிமாம்னாயம்

20. பைரவம், கவுலசாஸ்திரம் மற்ற அனாதரவான சாஸ்திரங்களில் ஈடுபாடுடையவன் சித்தபிரமேய ஜாலத்தில் நிரந்தரமான விருப்பமுடையவன்

21. காவ்ய நாடகத்தில் ஈடுபாடுள்ளவன் பரதநாட்யத்தில் விருப்பமுடையவன், காமசாஸ்திரத்தில் பயிற்சியுள்ளவன் பதவியை பறிப்பவன்

22. ஜ்யோதிடன், புராண ஹிதமான மனதை உடையவன் ஆகிய மேற்கூறிய விஷய புருஷார்த்தங்களில் ஈடுபாடுடையவனுக்கு தீக்ஷõ செய்விக்கும் முயற்சியை விட்டுவிட வேண்டும்.

23. காமிகாதி சிவக்ஞானத்தையும் வேதார்த்த ஞானத்தையும் அறியாமையால் யா ர் ஸமமாக எண்ணுகிறானோ அவனை பிரயத்னத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

24. சிவனால் கூறப்பட்ட ஸம்சித்த ப்ரமேயமான சைவசிந்தாந்த ஸம்சித்த ஞான, யோக கிரியை, சர்யைகளில்

25. எப்பொழுதும் விசாரம் செய்து, சிவாச்சார்யரை விட்டு வேறு இடங்களில் நியாஸாதிகளை செய்யும் துர்மதிஸ்தனை வர்ஜிக்க வேண்டும்.

26. நியாயமின்றி சிவத்ரவ்யாபஹாரியையும் கொலையாளி போலுள்ளவனையும் அல்ப வித்யா ஞானமுடையவனையும், பொறாமையுடைய வனையும். அழகில்லாதவனையும் விவர்ஜிக்க வேண்டும்.

27. ஜ்யோதிஷன், நாவிதன், சிந்திக்கும் அறிவு இல்லாதவன், ஸமானகோத்ர சம்பந்தமுடைய வனையும், பூ விழுந்த கண்ணை உடையவனையும் வர்ஜிக்க வேண்டும்.

28. மேற்கூறிய சுபலக்ஷணம் உடையவனை பகலில் நல்ல லக்ன உதயத்தில் அங்குரார்ப்பண பூர்வமாக ஆசார்யாபிஷேகம் செய்ய வேண்டும்.

29. கிழக்கு ஈசான்யம், மேற்கு, வடக்கு ஆகிய திக்கில் விதானத்தில் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில்

30. பாதிமுழ அளவுள்ள உயரமும், சதுரச்ரமாகவும் அர்த்தஹஸ்த சுற்றளவுள்ள இரண்டு வேதிகையும், நான்கு முழ விஸ்தாரமும் அதற்கு வடக்காக

31. நான்கு திக்கிலும், ஸ்வஸ்திக சின்னமும் அழகாக அமைத்து தீபமும் ஸ்தாபித்து பூமிபரிக்ரஹம் செய்து மண்டபத்தில் சிவனை பூஜித்து அக்னியிலும் பூஜிக்க வேண்டும்.

32. தீக்ஷõ ஸம்ஸ்காரத்தால் செய்யப்பட்ட க்ரியைகளை உடைய அந்தர்பலி பஹிர்பலி கொடுத்து மேற்படி இந்த விதானத்தை ஆச்ரயிக்க வேண்டும்.

33. மூஞ்சிப்பில் அன்னம், மண், விபூதி, தூர்வை கோமய கோளகம், வெண்கடுகு தயிர் இவைகளை நிமஜ்ஜனம் செய்து

34. ஒன்பது அல்லது ஐந்து தான்யங்களின் மேல் கடத்தையோ, கலசத்தையோ கூர்ச்சம் தேங்காய்

35. நூல் சுற்றி, தீர்த்தம் நிரப்பி சந்தனம் ரத்னம், ஸ்வர்ணம் இவைகளோடு கூடியதும் மாவிலை அரசிலை பலாச பத்ரத்துடனும் மாதுளம் பழத்துடன் கூடியதாக வைத்து

36. ஈசான மந்திரத்தாலும் ஒன்பது ஐந்து பவித்ரங்களால் வித்யேசர்களையும் பஞ்சபக்ஷத்தில் நிவ்ருத்யாதி கலைகளாலும் அபிமந்திரிக்க வேண்டும்.

37. ஸ்நபன விதிப்படி நூற்றி எட்டு கலசங்களை பூஜித்தோ அல்லது ஒரு கடத்தை சிவார்ச்சனமாக பூஜித்து

38. தட்சிண வேதிகையில் ஸ்தாபித்து வடக்கு வேதிகை சமீபம் சிசுவை ஸ்தாபிக்க வேண்டும். பத்ரபீடத்தில் சாங்கமாக சிவனை அதிஷ்டிதமாக

39. ஆஸனத்துடன் விரிவாக நன்கு பூஜித்து ஜலத்தால் சுத்தி செய்யப்பட்ட வர்ணமிட்ட சராவங்களால்

40. சுத்த நீரால் ஸ்நாபித்து தேசாந்தரத்திலிருந்து தயாரித்த நூல்கள் உத்தரீயம், மாலை (புஷ்பஹாரம்)

41. வெள்ள சந்தனம் பூசிய சரீரத்தையும், பஸ்மோத்தூளமாக அணிந்து இருப்பவனுமான சிஷ்யனை தென்பாகமுள்ள பத்ரபீடத்தில் அமர்த்த வேண்டும்.

42. கிழக்கு முகமாக (நின்று) இருந்து கந்த புஷ்பாதிகளால் பூஜிக்க வேண்டும். நல்ல திரிகளோடு கூடிய தான ஜ்வாலாமயமான தீபங்களால் ஆராதனை செய்து

43. பிறகு சிஷ்யனுக்கு தலைப்பாகை முதலியவைகளை கொடுக்க வேண்டும், கர்தரிக்கோல் என்ற கருவி, சிறிய மணி, ஸ்ருக்ஸ்ருவம்

44. தர்ப்பை புஸ்தகம் அக்ஷ (மாலை) ஸூத்ரம், கிரீடம், பாதுகை, சாமரம், குடை, யானை, பல்லக்கு முதலிய

45. ராஜாங்க சின்னத்தையும், உரியகாலத்தில் ச்ரத்தையுடன் கொடுக்க வேண்டும். தேசிகன் ஆரம்ப காலம் முதல் ச்ரத்தையோடும் ஆக்ஞையோடும்

46. தீøக்ஷ வ்யாக்யானங்களை அறிந்து பரீக்ஷித்து முறைப்படி செய்ய வேண்டும். அவ்வாறே தேவதேவனுக்கும் தேசிகனுக்கும் என்னால் செய்யப்பட்டதும்

47. உன்னுடைய அதிகாரத்தால் அவிக்னமான அதிகாரத்தை கொடு என்று விக்ஞாபித்து கொண்டு பிறகு குண்டசமீபம் சென்று

48. நிவ்ருத்யாதி கலைகளுக்கு தனித்தனியே ஆஹுதி செய்ய வேண்டும். அந்தந்த மந்த்ராஹுதியும் செய்து பூர்ணாஹுதி முடித்து சிஷ்யனின் வலக்கையில்

49. எரிந்த தர்ப்பையால் பஞ்சப்ரம்மஷடங்க மந்திரங்களால் கட்டைவிரல் முதலான விரல்களில் அடையாளம் செய்ய வேண்டும். சிவஹஸ்தம் ஸங்கல்பித்து தன் அதிகாரத்தை ஸமர்ப்பிக்க வேண்டும்.

50. அதற்காக விதிப்படி பிராயச்சித்தம் செய்ய வேண்டும். சிவாஸநம். அங்கமந்திரங்களாலும் தேவ நாமங்களாலும் பூஜித்து

51. அங்க மந்திரங்களால் தசாஹுதியும் சிவ மந்திரத்தால் தசாஹுதியும், சிவமந்திர பூர்ணஹுதி செய்து முடிவில் பகவானிடத்தில் மன்னித்தருளும்படி செய்ய வேண்டும்.

52. இந்த பிராகாரமாக சாதகனை அபிஷிக்க வேண்டும். ஸாத்ய மந்திரத்துடன் கூடிய கடங்களால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

53. தீக்ஷிதன் புத்ரகனாகவும் ஸம்ஸ்ரிக்கப்பட்டவன் ஸமயீயாகவும், ஸாமான்ய ஸமயீ மாஹேச்வரன் என்றும் கூறப்படுகிறான்.

54. எவன் ஜாதி உத்தாரண விஹீநநாக இருக்கிறானோ. அவன் ஸாமான்யஸமயீயாவான் அதிலும் விசேஷமாக சாக்ஷúஷ தீøக்ஷயுடன் யார் இருக்கிறானோ

55. அந்த சாக்ஷúஷ தீøக்ஷகளால் தீட்சிக்கப்பட்டவன் பரிசாரகன் என்ற பெயருடையவனாகிறான். லிங்கார்ச்சனைக்கு யோக்யமில்லாமல் இருக்கிறார்கள். தீக்ஷõகர்மாவில் ஈடுபடுவது கூறவேண்டியதில்லை.

56. சாபானுக்ரஹ கர்த்தாவாயிருந்தால் குரு முதலானவர்களையும் தீக்ஷிக்கலாம். சிவத்விஜ குல ஜாதீயர்களாயிருப்பின் மாஹேச்வரர்கள் எனப்படுவர்.

57. ஸ்ருஷ்டிக்கு முன்பு சிவனால் எல்லோரும் தீட்சிக்க பட்டவராகிறார்கள். சிவத்விஜர்களுக்கு என் பூஜைக்காக சுத்திக்காக தீøக்ஷ கூறப்பட்டுள்ளது.

58. øக்ஷ செய்தும் சரீரபந்த மாயிருப்பின் பிராயசித்தம் அனுஷ்டிக்கவும் யார் பலவிதத்தில் தீட்சிக்கபடுகிறானோ அவன் சீக்ரம் சிவனை அடைகிறான்.

59. பவுதீகன், பிரம்மச்சாரி, தேசிகன், கிரஹஸ்தர்களுக்கும் நைஷ்டிகாசாரத்தில் நைஷ்டிகனும் புக்தி முக்தியில் வரிசைக்ரமமாக இருக்கிறார்கள்.

60. புத்தி, முக்தி பிரஸித்திக்காக கிருகஸ்தனை குருவாக கூறுகிறார். எல்லோரையும் அனுக்ரஹிப்பவர் ஸாந்தானிக குருவாகிறார்.

61. அனுலோமக்ரமமாக தீøக்ஷ செய்யவும். பிரதிலோமமாக, தீøக்ஷ செய்யலாகாது. பத்னி ஸஹிதமாயும் நல்ல கேசமுடையவனையும் ஜடை, ருத்ராக்ஷம், தண்டயுதமாக வேண்டும்

62. கவுபீநம், ஒட்யானத்தையும் பரித்யக்தமாக யார் இருக்கிறானோ, அவன் கிருஹஸ்தனாகிறான். சிகைகள் இன்றியும் ஜடையுடன் கூடியதாகவுமோ

63. விரதராயும் பத்னீ ரஹிதராயும், பிக்ஷõன்னம் புசிப்பவராயும் இருக்கவேண்டும். அவன் விரதியாவான் விரதத்தை அனுஷ்டிக்க இயலாதவன் முறைப்படி விரதத்தை அனுஷ்டித்து

64. பிறகு விவாஹம் முடித்தவனாக இருப்பவன் விரதார்ப்பகன் எனப்படுகிறான். ஸ்ருஷ்டி முடிவு காலத்தில் எந்த கவுசிகாதிகள் இவனால் தீட்சிக்க பெற்றவர்களாக ஆனோர்களோ

65. (சிவனால்) அந்த குலோத்பவராக ஆகிறார்களோ, அவர்கள் சைவர்களாயும், ஸாந்தாநிகர்களாயும் ஆதிசைவர்களாயும் ஸர்வானுக்ரஹர்களாயும் இருக்கிறார்கள் என அறிய வேண்டும்.

66. அவர்களில் வர்ணாசார விரதர்கள், வர்ணாசார ரஹிதர்கள் என்று இருவகைப்படும். மூன்று பக்ஷம் கீழே படுத்து இருப்பவராயும், இரவில் சருவை புசிப்பவராயும்

67. மவுநியாகவும் மூன்றுகால ஸ்நானம் செய்பவராயும், சிவாக்னி குரு பூஜகராயும் தன் சக்தியால் ஸமூர்த்தியுடன் கூடியதாக உள்ள சிவனைஸாங்கமாக (பூஜித்து)

68. விரதங்களில் உத்தமமாக இருப்பது ஆசார்ய விரதமாகும். ஆசார்யன், ஸாதகன் புத்ரகன் ஸமயீ என ஆசார்யன் வகுக்கப்படுகிறான்.

69. நித்யம் லிங்காதிகளை பூஜிப்பதும் நித்யம், நைமித்திகத்தில் லிங்கபூஜைகள் கூறவில்லை. பிரதிதினமும் நன்கு அனுஷ்டிக்கப்படுவது நித்யமாகும்.

70. ஸ்நபனம், உத்ஸவம் சாந்த்யாதி கர்மா நைமித்திகமாகும். பிராயச்சித்தத்திலும் தன்நித்ய அனுஷ்டானத்திலும் நைமித்திகத்திலும் அதிகாரியாகிறான்.

71. ஆத்மார்த்த நைமித்தகத்தில் புத்ரகன் யோக்யனாகிறான். மற்ற கிரியைகளில் தகுதி இல்லாதவனாகிறான். ஆசார்யன், ஸாந்தானிகனும் நைமித்திகத்தில் யோக்யனாகிறான்.

72. ஆத்மார்த்திலும், பரார்த்திலும் ஸ்தாபனாதிகள் இல்லாத கார்யங்களிலும், ஆசார்ய அதிகாரமுள்ள எல்லா ஸ்தாபனாதி கிரியைகளிலும்

73. அதற்கென்று அங்கமான ஹோம கார்யங்களில் மேற்கூறிய இருவர் சாந்தாநிகர்கள் தேசிகாக்ஞையால் யோக்யனாக ஆகிறார்கள். ஸ்தாபனாதி அங்க பூதமான மங்களாங்குராதிகளில்

74. தேசிகாக்ஞை இருப்பின் அந்த இருவருக்கும் அதிகாரமுள்ளது என்கிறார். ஆசார்யன் எல்லா கிரியைக்கும் யோக்யராகிறார். ஸாந்தானிகளும் யோக்யனாகிறான்.

75. சாதகனும் அவ்வாறே இருந்து எல்லாகர்மாக்களிலும் யோக்யனாகிறார். மஹாசைவர்கள் தீக்ஷிதர்கள் நித்யகர்ம யோக்யராகிறார்கள்.

76. மஹாசைவாதிகளால் நைமித்திகம் செய்யப்பட்டால் தோஷ கல்பிதமாகும். லக்ஷ ஸ்லோகத்தை படித்தவனாயும் போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்க கூடியவரே குரு ச்ரேஷ்டர் ஆவார்.

77. ஐம்பதாயிரம் ஸ்லோகத்தை படித்தவன் மத்யமரென்றும் இருபத்தி ஐந்தாயிரம் ஸ்லோகத்தை படித்தவன் அதமம் என்று கூறப்பட்டு உள்ளது. ஸம்ஹிதா பாரகராகவோ லக்ஷõத்யாயி உபதேசகராகவோ இருக்கலாம்.

78. ஸம்ஹிதையானது நான்கு பாதத்தை உடைய காமிகம் முதலான க்ரந்தங்களாகும். சைவம் நான்கு வகைப்படும். அவை சைவம், பாசுபதம்.

79. சோம சித்தாந்தம், லாகுலம் என நான்கு வகைப்படும். இது பரமேஸ்வரனுடைய நான்கு முகங்களான தத்புருஷாதி முகத்திலிருந்து உண்டானதாகும்.

80. அந்த நான்கு பேதத்தில் ஒன்றுக்கொன்று முதன்மையான உயர்வுடையதாகும் ஒவ்வொன்றும் மூன்றுவிதமாகும்.

81. பலசித்தாந்தங்களில் சைவ சித்தாந்தம் என்கிற சித்தாந்தம் எல்லாவற்றிலும் உத்தமோத்தமமானதாகும்.

82. ஸித்தாந்தமென்பது மந்திர தந்திரமாகும். அதிமார்க்கம் அதமமானதாகும். அத்யாத்மம் மேற் சொன்னதிலிருந்து நீசம், அதிலிருந்து வைதிகமும் ஆகும்.

83. வைதீகத்திலிருந்து லவுகிதம் ஹீநமாகும். இவைகளை கூறியவர் பிரம்மாதி பஞ்சதேவதைகள் ஆகும். அந்த லவுகிகாதிகளின் பேதம் கூறப்படுகிறது.

84. ஸத்யோஜாதி மந்திரத்திலிருந்து உண்டானது அகிலார்த்தமான பிரம்மா உண்டானார். அந்த எல்லா பொருளையும் அறிந்த பிரம்மா ஞானத்திலிருந்து லவுகிக சாஸ்திரமானது, மனுஷ்யலோகத்தில் அவதரிக்கப்பட்டது.

85. சப்த சாஸ்திரம், அலங்கார சாஸ்திரம் நிருக்தம் சந்தஸ், கவுடில்யம், பரத சாஸ்திரம் ஜ்யோதிஷ சாஸ்திரம், வாத்ஸ்யாயனம் முதலியவைகள்

86. ஆயுள் சாஸ்திரம், தனுஸ்சாஸ்திரம், வ்யவசாய சாஸ்திரம், லோகாயதம், ஸாங்க்யம் ஆர்ஹதமதம்,

87. மீமாம்ஸை, தண்டநீதி, வார்த்தாத்யம், லவுகிக மதம், வாமதேவ மந்திரோத்பவமானதாகும். விஷ்ணு இரண்டாவது காரணேசர் ஆவர்.

88. அவரால் வைதிகம் கூறப்பட்டு உள்ளது. அவை அஷ்டாதச புராணம், தர்மசாஸ்திரம், வேதாந்தம், பாஞ்சராத்ரம், பவுத்தம் ஆகியவைகளாகும்.

89. அகோரமந்திரத்திலிருந்து ருத்ரன் அவதரித்து அத்யாத்ம சாஸ்திரத்தை இயற்றினார். நியாயம் வைசேஷிகம், ஸாங்க்யம் ஸேஸ்வரம் இவற்றை இயற்றினார்.

90. தத்புருஷ மந்திரத்திலிருந்து ஈச்வரன் உற்பத்தியாகி அதிமார்க்கத்தை இயற்றினார். பஞ்சார்த்தம், லாகுலம், பாசுபதம், ஆகியவையாகும்.

91. பகவான் சதாசிவர் மந்திர தந்திர பாலனம் செய்கிறார். ரிக்வேதம், யஜூர்வேதம், சாமவேதம், அதர்வண வேதங்கள் தத்புருஷாதி முகத்திலிருந்து உற்பத்தியானதாகும்.

92. பச்சிமமுக சாஸ்திரத்திலிருந்து வாமமுக சாஸ்திரமும், வாமமுகசாஸ்திரத்தில் இருந்து தட்சிணமுக சாஸ்திரமும், தட்சிணமுக சாஸ்திரத்திலிருந்து கவுலகம் அதிலிருந்து மஹா கவுலம் ச்ரேஷ்டமாகும்.

93. அதில்இருந்து பூர்வமுக சாஸ்திரம் சிரேஷ்டம், அதிலிருந்து சித்தாந்தம் உத்தமம், சித்தாந்தத்திலிருந்து உன்னதமான ஞானம் சாஸ்திரத்தில் நிச்சயமாக இல்லை.

94. மற்ற தந்த்ர சாஸ்திரங்களில் யார் முக்தர்களோ, ஸிந்தாந்தத்தில் பசுக்களாகிறார். வேதசாரமே ஸிந்தாந்தமாகும். மற்ற வேதங்கள் தள்ளப்பட்டதாகும்.

95. ஸித்தாந்த விஹிதமான ஆசாரம் வைதிகா சாரமாகும். கர்ப்பாதானாதிகர்மா, சிராத்தங்கள் செய்வித்தல் வரையிலுள்ள கர்மாக்கள்

96. வைதீக கர்மப்படி ஆசரிக்கவும் (அல்லது) சைவானுஷ்டானப்படியாவது ஆசரிக்க வேண்டும். அவனுக்கு ஜாதகர்மாதி கிரியையும் தீøக்ஷயும் செய்யப்பட வேண்டும்.

97. சமய தீøக்ஷயோடு கூடின ஸ்த்ரீயாயிருப்பின் தீøக்ஷயுடன் கூடிய புருஷனோடு விவஹாமாயிருந்தால் தீøக்ஷயுடன் கர்பாதான கிரியை செய்யப்படவேண்டும்.

98. அவ்வாறே பும்ஸவனாதி கிரியையும் சைவ முறைப்படி செய்ய வேண்டும். அவன் புத்ரனுக்கு ஜாககர் மாதி கிரியை செய்யப்படவேண்டும்.

99. புருஷார்த்த பிரஸித்திக்காக அவனுக்கும் கிரியைகள் செய்யப்படவேண்டும். வைதிகாதிகளின் ஆரம்பத்திலோ முடிவிலோ லவுகிகாதிகளை செய்ய வேண்டும்.

100. பார்யை தீøக்ஷவிஹீநமாயிருப்பின் அவளுக்கும் புத்திரனுக்கும் பர்த்தா தீக்ஷிதனாக இருப்பின் வைதீகாதி கிரியைகளை அனுஷ்டிக்க வேண்டும்.

101. கூறப்பட்டுள்ள அனுலோம ஜாதிகளுக்கு வைதீக கிரியை இஷ்டமில்லை. நல்லபிறப்புடையவனையும் ஜ்யோதிஷனையும் விட்டுவிட்டு வைதீக கிரியைசெய்யவேண்டும்.

102. எல்லா கர்மாக்களுடனும் சைவத்தில் கேவலசைவியாகும், ஸ்ருதி ஸ்ம்ருதிகளை முதற்கொண்டு எந்த அனுஷ்டானங்களை உண்டோ அவையாவன

103. அவச்யமானவைகளில் சவுசம் ஸ்நானம் ஆசமனம் ஸந்தியாவந்தனம், தர்ப்பணம், ஹோம கர்மா இவைகளிலும்

104. கர்ப்பா தானங்களை முதற்கொண்டு சரீரதஹணம், ஸ்ராத்த கர்மா, அஷ்டகாகரணம், நித்ய நைமித்திகைகளிலும்

105. வேதாத்யயன ஸம்ஸ்காரம் சோமயாகம் இவைகளில் த்விஜர்களுக்கு எது விதிக்கப்பட்டு உள்ளதோ அந்த வேதாத்யயனாதிகளிலும்

106. அந்த எல்லா கர்மாவும் வைதீக கர்மப்படி செய்யலாம். செய்யாமலும் இருக்கலாம். அனுஷ்டானம் அனுஷ்டிக்க வேண்டும். சைவகர்ம விரோதியாக எந்த கர்மாவையும் அதற்கு

107. மாறுதலாக இருப்பின் த்யாஜ்யம் செய்யவும், சைவானுஷ்டானத்தை பரித்யாகம் செய்ய கூடாது. சைவத்துக்கு விரோதமில்லாத வைதிககார்ய மெல்லாம் அனுஷ்டிக்கலாம்.

108. சைவம் வைதிகமாகவும், வைதிகம் சைவமாகவும் ஆகும். வைதீகத்திலிருந்து வெளிப்பட்டது சைவமில்லை. சைவத்திலிருந்தே சைவம் உண்டானதாகும்.

109. அவ்வாறே வைதீகத்திலிருந்து சிரேஷ்டம், சைவம், சைவத்திலிருந்து உத்தமம் எதுவும் இல்லை. காமிகாதி கிரந்தங்கள் சித்தாந்தமாகும் அதிலிருந்து மிக உயர்ந்தது ஏதுமில்லை.

110. சைவம் மூல பூதமாகும். சதுர்வேதம் அதிலிருந்து உண்டானவைகளாகும். அவ்வாறே வேத சாரமென்ற வாக்யத்தால் வைதிகம் எனப்படுகிறது.

111. எல்லா இடத்திலும் அர்த்தத்துடன் கூடியதான சைவசாஸ்திரம் கூறப்பட்டுள்ளது. எல்லா காமிகாதிகளிலும் சிவதேஹத்வமாக கூறப்படுகிறது.

112. அந்த சிவதேஹம் இரு விதங்களாகும். ஸ்ருஷ்டி, ஸம்ஹாரம் எனப்படும் காமிகாதி வாதுளம் வரையில் வாதுளம் முதல் காமிகம் வரையிலும் ஆகி கூறப்பட்டுள்ளது.

113. காமிகம் மேல் மகுடமும் யோகஜாகமம் தத்புருஷ வடிவ மகுடமும், சிந்த்யாகமம் அகோர மகுடம் காரணாகமம் வாமதேவ முக மகுடம்

114. அஜிதாகமம் ஸத்யோஜாத முகத்தின் மகுடமும் ஆகும். தீப்தாகமம் அதேபோல் ஈசான வக்த்ரம், சூக்ஷ்மாகமம் தத்புருஷ முகமும் ஸஹஸ்ராகமம் தட்சிணமுகமும் ஸஹஸ்ராகமம் தட்சிண முகமும்

115. அம்சுமானாகமம், வாமதேவமுகமும், சுப்ரபேதாகமம் ஸத்யோஜாத முகமும் ஆகிறது. மேலும் விஜயாகமம் காதாகவும், நிச்வாஸாகமம் கழுத்து பாகமாகவும்

116. ஸ்வாயம்புவாகமம் ஹ்ருதயம், அனலாகமம், நாபியாகும், வீராகமம் இடுப்பு பிரேதசமாகும், ரவுரவாகமம் ப்ருஷ்டபாகமாகும்.

117. மகுடாகமம் வலது துடை பிரதேசம், விமலாகமம் இடது துடை, சந்திரக்ஞானாகமம் இடது துடையின் நுனிபாகம் பிம்பாகம் வலது துடையின் நுனிபாகமாகும்.

118. ப்ரோத்கீதாகமம் வலது ஜானுபாகம் லலிதாகமம் இடது ஜானுபாகம் சித்தாகமம் வலது முழந்தாளாகும், சந்தானாகமம் இடதுமுழந்தாளாகும்.

119. வலது முழந்தாளின் நுனிபாகம் சார்வோக்தாகமம், இடது முழந்தாளின் நுனிபாகம் பாரமேஸ்வராகமம், கிரணம் வலது பாத தளபாகம், வாதுளாகமம், வாகபாத தளமாகும்.

120. ஸ்ருஷ்டி பேதமாக சிவன் கூறப்பட்டுள்ளது. ஸம்ஹார பேதமாக வேறுபட்டதாக கூறப்பட்டுள்ளது. ரிஷிகள் கூறினார்கள். தந்த்ராவதாரபடலத்தில் முன்பு காமிகம் பாதயுக்மம்

121. என்று கூறியதெல்லாம் பரஸ்பர விரோதமாக உள்ளதே! என்று கேட்கிறார்கள் ஈச்வரன் கூறுகிறார்: உங்களுக்காக அவதரிக்கப்பட்டவைகளை பலவிதமாக கூறப்பட்டுள்ளது.

122. எனக்கு எல்லா இடத்திலும் மகுடம், நேத்ரம் அவ்வாறே பாதம் ஹஸ்தம் த்யான முறைப்படியாகும்.

123. ஸ்ருஷ்டி ஸம்ஹாரமார்கமாக என் தேஹம் விபேதாக கூறப்படுகிறது. போக மோக்ஷ பிரசித்தக்காக எனக்கு ஞான தேஹமாக இருக்கிறது.

124. உருவமில்லாததும், ஞானமும், ஸங்கரமானதும் அதை உபாசிப்பதில் இருந்து பரஸ்பர விரோதமென்று மதியீனர்களால் கூறப்படுகிறது.

125. எந்த ஈச்வர வாக்ய முண்டோ அது பூஜித வாக்யமாக உத்தமர்களால் எண்ணப்படுவதாகும். புருஷர்கள், ரிஷிகள் இவர்களின் வாக்யம் தெய்வீக வார்த்தையற்றதாகும்.

126. தேவர்களால் பிரம்மவாக்யம் பாதிக்கப்படுவதில்லை. பிரம்மாவாக்யம் விஷ்ணுவாக்யத்தால் பாதிக்கப்படுவதில்லை. விஷ்ணுவால் சிவவாக்யம் பாதிக்கப்படுவதில்லை.

127. எல்லாவற்றிலும் மேன்மேலும் விசேஷமாக கூறப்பட்டுள்ளது. காமிகம் முதல் அஜிதாகமம் வரை ஈசான வக்த்ரத்திலிருந்து ஏற்பட்டவைகளாகும்.

128. தீப்தாகமம் முதல் சுப்ரபேதாகமம் வரையிலுள்ள ஆகமங்கள் தத்புருஷமுகத்திலிருந்து உண்டானவைகளாகும். விஜயாகமத்திலிருந்து வீரதந்தரம் வரை ஐந்தும் அகோர வக்த்ரத்திலிருந்து உண்டானதாகும்.

129. ரவுவத்திலிருந்து முகபிம் பாகமம் வரை வாமதேவமுகோத்பவமாகும். பிரோத்கீதம் முதல் எட்டு ஆகமம் ஸத்ய வக்த்ரத்திலிருந்து உண்டானதாகும்.

130. தந்த்ராவதார படலத்தில் ஸத்யாதி சப்தங்களால் ஈசானதிகளாக அறிய வேண்டும். இருபத்திஎட்டு ஆகம தந்திரம், உபாகமத்தையும் எவன் அறிகிறானோ

131. அவரே குருவாகவும், சிவனாகவும், ஆகிறார். அவரை முயற்சியோடு அறியவும் மற்ற குருவால் ஆரம்பமானதாயிருப்பினும் அவரே அதிகார தன்மையை அடைகிறார்.

132. விசிஷ்டகுருவால் ஆரம்பிக்கப்பட்ட கார்யத்தில் ஹீநருக்கு அதிகாரித்வமில்லை. ஹீநரால் ஆரம்பிக்கப்பட்ட கர்மாவில் விசிஷ்டனுக்கு தான் அதிகாரமாகும் என்கிறார்.

133. விசிஷ்டர் மரணாதி ஸம்பவத்தில் வேறான குரு பிரவேசிக்கலாம். விசிஷ்டர் இருக்கும் பக்ஷத்தில் பலாத்காரமாக அறியாமையால் பிறரிடம் பிரவேசிக்கக் கூடாது.

134. அவ்வாறு பிரவேசித்தால் பெரிய குற்றமும் அவனுக்கு பலவித சேர்க்கைகளும், குருடு ஊமைத்தன்மையும் ஏற்படும். அதனால் ராஜாதோஷ வானாகவும் ராஜ்யத்திற்கு பயமும் ஏற்படும்.

135. கிரியை கர்த்தாவிற்கும், செய்விப்பவனுக்கும், கிராமத்திற்கும் தோஷமேற்படும் லோக பிரஸித்திக்கும் ஞானத்திற்காக குருவிடம் மந்திரம் ஸ்வீகரித்து

136. திரவ்யத்தையும், நல்ல சுகம் எல்லா உலகத்திற்கு சமமான புகழ் இவைகளை செய்கிற ராஜாவானவன், உத்தமோத்தமான ராஜ்யதானம் செய்ய வேண்டும்.

137. சிவன் சொத்தை (பணம்) எவன் எடுக்கிறானோ, அவன் பாபீ கெட்ட புத்தியுடையவன், ஈனஜாதியுடையவன் எல்லோராலும் தள்ளப்பட்டவன் என அறிய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிகாகம மஹாதந்திரத்தில் ஆசார்யாபிஷேக முறையாகிற இருபத்தி நான்காவது படலமாகும்.

24.அ. ஞான தீக்ஷõமுறை

1. அந்தணர்களே! ஞானதீøக்ஷயை கூறுகிறேன். நல்லகிழமை, நல்லதினம், பக்ஷம், நல்ல முஹூர்த்தத்தில் விசேஷமாக

2. தனிமையாக, ஜனங்களில்லா இடத்தில், நடு நிசி ஆரம்பத்தில், நல்ல ஆசிரியன், நல்ல சீடர்களுக்கு விசேஷமாக அறிவூட்ட வேண்டும். (உபதேசிக்கவும்)

3. சிவன் கோயில், குருவின் இருப்பிடம், சக்திபீடம், மடம், வீடு, தூய்மையான இடம், முதலிய இடங்களில், நன்கு அமர்ந்த கோலமாகவும், ஐந்து கோத்ரத்திலுதித்தவராயும்:

4. இருந்துகொண்டு தர்பாஸனம், புலித்தோல், கூர்மாஸனத்தில், பீட மத்தியிலோ ஸத்குரு வாஸஸ் தலத்தில் க்ஞானத்தை நினைத்து வஸிக்க வேண்டும்.

5. ஸ்நான உபசாரங்கள், பட்டு, ஆபரணங்கள், சந்தனபுஷ்பமிவைகளால் யோகபீடமத்தியில் பூஜித்து

6. பாயஸம், அப்பம், தாம்பூலம் இவைகளை நிவேதித்து, குருபாதங்களை, பதினாறு விதமான உபசாரங்களால் பூஜிக்க வேண்டும்.

7. உயர்ந்த ஆசிரியர் விசேஷமாக க்ஞானதீøக்ஷயை செய்ய வேண்டும். சரீரம், பொருள், ப்ராணன் இவற்றை ஸத்குருவிடம் ஸமர்பித்து விட வேண்டும்.

8. வெட்கமின்றி ஸாஷ்டாங்கமாக குருவின் ஸன்னதியில் நமஸ்கரிக்கவும் நல்ல சீடனுக்கு விசேஷஞானம் போதிக்க வேண்டும்.

9. சந்தனம், புஷ்பத்துடன் கூடிய கையை சிஷ்யனின் தலையில் ஸ்தாபித்து சிவகரார்பணம் செய்க. சிஷ்யனால் பூஜிக்கப்பட்ட பாதத்தை சிஷ்யனின் தலையின் மத்தியில் ஸ்தாபிக்க வேண்டும்.

10. அதன் பிறகு ஸத்பாவ க்ஞானத்தை சிஷ்யனுக்கு போதிக்க வேண்டும். முதலில் தத்வரூபம் இரண்டு தத்வதர்சனம்.

11. மூன்றாவது தத்வசுத்தி, நான்காவது ஆத்ம லக்ஷணம், ஐந்தாவது ஆத்மதர்சனம் ஆறாவது ஆத்ம சோதனம்.

12. ஏழாவது சிவ ரூபம், எட்டாவது சிவதர்சனம், ஒன்பதாவதாக சிவயோகம், பத்தாவது சிவபோகமாகும்.

13. மூன்று மூன்று பேதங்களால் நான்கு விதமாக பதி, பசு, பாசம் என்று மூன்றை விளக்கி குருவின் சொல்லின் செயலாலேயே ஜீவன் முக்திபிரகாசமேற்படுகிறது.

14. இவ்வாறு பத்துபொருள் உள்ளதாக க்ஞான மார்கத்திற்கு விதிக்கப்படுகிறது.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar