Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » காம்யலிங்க பிரதிஷ்டா முறை
படலம் 37: காம்யலிங்க பிரதிஷ்டா முறை
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
04:06

37வது படலத்தில் விருப்பத்தை பூர்த்தி செய்யும் லிங்கம் அமைக்கும் முறை விளக்கப்படுகிறது. அதில் இலக்கண பூர்வமாக காம்யலிங்க பிரதிஷ்டையை கூறுகிறேன் என்று கூறுகிறார். பிறகு விருப்பங்கள் பயனை அடையும் படியாகவே கூறப்படுகின்றன. பயன்கள் பலவிதமாக காணப்படுகின்றன. இந்த சித்திகளின் கடை நிலை, நடுநிலை, உயர்ந்த நிலை, மிகவும் உயர்ந்த நிலை என்பதாக நான்கு பிரிவுகள் உள்ளன. அந்த நான்கு விதமான பிரிவுகளில் ஒவ்வொன்றும் உயர்ந்த தன்மை முதலியதாக மூன்று விதம் ஆகும். இவைகளில் பயன்களின் பிரிவுகளால் பலன் காணப்படுவது காணப்படாதது. உயர்ந்தது, தாழ்ந்தது என இருவிதமாகும் என கூறப்படுகிறது. முன்பு கூறப்பட்ட சித்தி பிரிவுகளின் பயன்களுடைய அமைப்பு சுருக்கமாக கூறப்படுகிறது. அதில் அரச தன்மை கடைநிலை சித்தி பிரிவாகும். பல சித்திகளில் மத்யம சித்தி பிரிவுகளாக கூறப்படுகிறது. தேவத்தன்மை உயர்ந்த சித்தி பிரிவாக எண்ணப்படுகிறது. தேவர்களின் சமானமாக இருக்கும் தன்மை மிகவும் உயர்ந்த சித்தி பிரிவாக கூறப்படுகிறது. தேவத் தன்மை என்கிற சித்தி பேதமானது வித்யேசத்வம் ருத்ரத்வம், விஷ்ணுத்வம், பிரும்மத்வம், முதலான பிரிவுகள் பலவிதமாக ஆகும். இவ்வாறாக அணிமாதி எட்டு சித்திகளும், சக்ரவர்த்தி தன்மையும் சித்திகளில் உயர்ந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு குளிகம், மை, பாதாளம், கத்தி, மணி இவைகளால் சித்திக்கக் கூடியவைகள் மத்யமமாகும். அபமிருத்யு, ஜயம், உச்சாடனம், வச்யம் முதலியவைகள் அதமம் என கூறப்படுகிறது. மாயா கார்யத்தில் இந்த தேகத்தினால் எது அனுபவிக்கப் படுகிறதோ அது காணப்படும் தன்மையாகும். இது வேறு சரீரத்தில் அனுபவிக்கப்படுகிறதோ அது காணப்படாத தன்மை என கூறப்படுகிறது. இவ்வாறு மாயா கார்யத்தில் வேறு இடத்தில் எந்த தேவர்களுக்கும் தலைவன் முதலான ருத்திரஸ்தானத்தில் நன்மை ஏற்படுகிறதோ அது அபரமாகும். எந்த நந்த்யாதி பத ஸ்தானத்தில் சுகம் ஏற்படுகிறதோ அது பரம் என்று பயனின் தன்மை நிரூபிக்கப்படுகிறது. பிறகு சித்தியும், மோட்சமும் லிங்கத்தை ஆஸ்ரயித்து பூஜிக்காமல் கிடைப்பதில்லை. விஷ்ணு முதலிய தேவர்கள், வசுக்கள், ருத்திரர்கள், முனிவர்கள் முறைப்படி இவர்கள் லிங்கத்தை ஆராதிப்பதால், விருப்பப்பட்ட பயனை அடைந்தார்கள்.

ஆகையால் ஆசார்யன், ஸாதகனும், உரிய லிங்கத்தை அடைந்து அவை பூஜிப்பதால் நற்கதியை அடைவான். தன்னால் செய்ய இயலாதவர்களின் நன்மைக்காகவோ, ஆசார்யன் சித்தியை ஸாதிக்கவும் ஆசார்யன் லிங்கத்திற்காக கருங்கல் முதலிய பொருள்களை தயார் செய்து கர்மாவை அனுசரித்து லிங்கத்தை ஏற்படுத்தவும் அந்த திரவ்யங்களும் சிலை, மண், உலோகம், மரம், இரத்னம், க்ஷணிகம் என்று பொருள்களாக பலவிதமாக ஆகும். அந்த எல்லா திரவ்யங்களையும் கூறுகிறேன் எனக் கூறி கருங்கல் முதலிய திரவ்யங்களை நிரூபிக்கிறார். திரவ்யங்களும் பிராம்ணர் முதலிய ஜாதியை அனுசரித்தும் பயனை அனுசரித்தும், ஆறு கர்மம் முதலியவைகளை அனுசரித்தும் கூறப்படுகின்றன. திரவ்ய இலக்கணம் கூறப்பட்ட பிறகு காம்ய லிங்கங்களின் இலக்கணம் கூறப்படுகிறது. என கூறி முதலில் லிங்கங்களின் விஷயத்தில் அளவு கூறப்படுகிறது. இங்கு ஆலயம் கர்ப்பக்கிரஹம் இவைகளின் அளவாலும் அங்குலம் என்ற அளவாலும் கையின் அளவாலும் லிங்கம் அமைக்கும் முறை நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்கங்களின் இலக்கணம் கூறப்படுகிறது. இங்கு வஜ்ரம் முதலிய தசாயுதத்துடன் கூடிய சிரசை உடையதான ஆன லிங்கங்கள் அவ்வாறே ஸித்தி லிங்கம், ஸஹஸ்ர லிங்கம், 108 லிங்கம், தாரா லிங்கம், இவைகளின் விளக்கம் கூறப்படுகிறது. பிறகு லிங்கத்தின் சிரசின் சுற்றுதல் என்ற அளவு முறை கூறுகிறேன் என்று கூறி புண்டரீகன், விசாலம் விருத்தம், சத்துருமர்தனம், குக்குடாண்டம், விஷுமஸ்தகம், த்ரபுஷாகிருதி, சத்ரசீர்ஷம் முதலிய தலையின் சுற்று வட்டவிதி நிரூபிக்கப்படுகிறது. பிறகு லிங்கங்களின் இலக்கண அமைப்பு முறை கூறப்படுகிறது. இங்கு தலையில் வச்சரம், முதலிய ஆயுதங்களின் இலக்கண முறையும் கூறப்படுகிறது. தலை சுற்று வட்ட இலக்கண முறை கூறும் விஷயத்தில் அந்தந்த பயன்களும் விளக்கப்படுகின்றன. மணி, முத்து, பவழம் முதலிய லிங்கங்களும் பாண லிங்கத்திலும், உலோகஜ லிங்கத்திலும் அந்த பிரகாசத்தின் லக்ஷணமே இலக்கணமாகும். ஆகையால் இந்த லிங்கங்களின் விஷயத்தில் இலக்கண குறிப்பு தேவையில்லை என கூறப்படுகிறது.

பிறகு பீடம், ஆவடையார் இவைகளின் இலக்கணம் கூறப்படுகிறது. அதில் ஐந்தரம், ஆக்னேயம், யாம்யம், ராக்ஷசம், வாருணம், வாயவ்யம், யாக்ஷம், ஐசம், பிராம்மம், வைஷ்ணவம் என்று பெண்பாலாக, பத்து வித ஆவடையாரின் லக்ஷணம் கூறப்படுகிறது. பிறகு வச்ஜரலிங்கத்தில் கருங்கல் லிங்கத்தில் ஆஸ்மி, பிருதிவி, லிங்கத்தில் பார்த்திவ மரலிங்கத்தில் தாருஜா, தாது லிங்கத்தில் தாது சாம்பவி, ரத்ன லிங்கத்தில் ரத்னஜா என்றும் ஆவடையார் ஆனது உத்தமம் ஆகும், அல்லது உத்தமமான உலோகங்களால் செய்ய வேண்டும் என கூறப்படுகிறது. சலலிங்கத்திலும் ரத்ன லிங்கத்திலும் பாசிபயறு அளவானதோ பர்வம் என்ற அளவு உடையதாகவோ, பிண்டிகை யானது சுபத்தை கொடுக்கக் கூடியது என கூறப்படுகிறது. பிறகு கார்யத்தை அனுசரித்து ஆவடையார் அமைக்கும் விஷயத்தில் விசேஷம் கூறப்படுகிறது. இவ்வாறு அவ்யத்த லிங்கம் கூறப்பட்டு அவ்யக்த, வ்யக்தலிங்கம் கூறுகிறேன் என்று பிரதிக்ஞை செய்து முகலிங்க விஷயத்தில் ஒன்று, இரண்டு மூன்று நான்கு, ஐந்து முக லிங்கங்கள் இலக்கணத்துடன் கூடியதாக நிரூபிக்கப்படுகின்றன. பிறகு வ்யக்தாவ்யத்தமான முகலிங்க லக்ஷணம் கூறப்பட்டு வ்யக்த லிங்கம் கூறுகிறேன் என கூறி சதாசிவ மூர்த்திகளின் இலக்கணம் மிக விரிவாக விளக்கப்படுகிறது. இங்கு முடிவில் ஞான மயமான ஸதாசிவரை இவ்வாறாக தியானிக்கவும் என அறிவிக்கப்படுகிறது. பிறகு கண்ட மூர்த்தியின் இலக்கணம் வர்ணிக்கப்படுகிறது. பிறகு கண்ட மூர்த்தியின் இலக்ஷணமானது 10 கை, 16 கை 18 கை, 20 கை இவ்வாறாக நான்கு விதமாக நிரூபிக்கப்படுகிறது. பிறகு கால ருத்திரன், வாமருத்திரன், அகோர ருத்திரன், புஜங்கேச ருத்திரன் ஸர்வ காமததேவன், திரிசூல சூத்திரன், அர்த்தநாரீஸ்வரர், ஹரிஹரார்த்த மூர்த்தி, நீலருத்திரன், பீமருத்திரன், ஸர்வ, ஸர்வ ருத்திரன், பவருத் திரன் இவர்களின் இலக்கணம் கூறப்படுகிறது. பிறகு 11 ருத்திரர்களின் இலக்கணம் கூறப்படுகிறது. பின்பு கபாலீசன் முதலிய ருத்திரர்களின் இலக்கணம் கூறப்படுகிறது. இவ்வாறாக வ்யக்தமான லிங்கத்தின் உருவம் செய்யும் முறை ஆகும். பிறகு முன்பு கூறப்பட்ட அவ்யக்த, வ்யக்தாவ்யக்த, வ்யக்தம் முதலிய லிங்கங்களின் பிரதிஷ்டை சுருக்கமாக கூறப்படுகிறது. பிறகு மூல மந்திர விஷயத்தில் விசேஷமான அறிவிப்பு கூறப்படுகிறது. பிறகு பிரதிஷ்டை காலம் முதல் கும்பாபிஷேகம் வரையிலான செய்ய வேண்டிய கிரியைகள் பெயரால் விளக்கப்படுகிறது. ஆனால் அவைகளின் கிரியை விளக்கப்படவில்லை. முகலிங்க விஷயத்தில் அதன் அத்யாய மார்க்கத்தினாலோ எல்லா கார்யமும் அனுஷ்டிக்கும் என கூறி மூல மந்திர விஷயத்தில் வேறு விசேஷம் கூறப்படுகிறது. பிறகு ஸ்வாயம்புவம் முதலிய லிங்கங்களை அபிசாரம் முதலிய கர்மாவிற்கு பூஜிக்கக் கூடாது என கூறப்படுகிறது. சாந்திகம், பவுஷ்டிதம் ஆகிய கர்மாக்களுக்கே ஆராதிப்பதற்கும் உபயோகிக்கவும் என கூறப்படுகிறது. இவ்வாறு 37 வது படலத்தின் கருத்து சுருக்கமாகும்.

1. லக்ஷணத்துடன் கூடிய காம்யலிங்க பிரதிஷ்டையை கூறுகிறேன். காம்யங்கள் என்பது ஸித்திகளாகும், ஸித்திகள் பலவிதமாகும்.

2. சிரேஷ்டம், ஜேஷ்டம், மத்யமம், அதமம் என நான்கு விதமாகும். ஒவ்வொன்றும் உத்தமாதி பேதமாக மூன்று விதமாகும்.

3. கண்ணுக்கு புலப்படுபவன, புலப்படாதவன எனவும் பரம், அபரம் என்றும் இருவகைப்படும். அரசத்தன்மை அதமம், மத்யமம், பலசித்திகளும் ஆகும்.

4. உத்தமம் தேவர்கள் பதம், சிரேஷ்டம் தெய்வசமானமாகும். தெய்வசமானம் ஒவ்வொன்றும் பலவாறாகவும் வித்யேசர் முதலான பேதங்களாக ஆகும் என கூறப்படுகிறது.

5. வித்யேசத்வம், ருத்ரத்வம் ப்ருஹ்மத்வம், விஷ்ணு பதம் என்று தைவத்வம் சிரேஷ்டம் எனப்படுகிறது.

6. அணிமாதி ஸித்திகள், சக்ரவர்த்தி பதம், அணிமாதி சித்திகளும் ஜ்யேஷ்டம் எனப்படும். இந்த முதன்மை யானவைகள் சித்திகளின் சிரேஷ்டமானதாகும்.

7. குளிகை, மை, பாதாளபிரவேசம், கட்கம், கண்டாதிகளால் ஏற்படக்கூடிய பலன் மத்யமம், அபம்ருத்யுஹரணம், உச்சாடனம், வச்யகர்மங்கள் அதமம்

8. இந்த சித்திகளால் எந்த சரீரத்தில் பல சித்தி தெரிகிறதோ மாயா கார்யத்தில் வேறு சரீரத்தில் தெரிந்தாலும்

9. மாயா கார்யமான ருத்ரஸ்தானத்தில் அமரேசாதி எந்த சுகம் உண்டோ அது அபரம், பரமானது அனந்தாதி பதஸ்திதியாகும்.

10. லிங்க பூஜையின்றி முக்தியோ ஸித்தியோ அடைய முடியாது. சிவலிங்க பூஜையின்றி சித்தி, முக்தி அடைய விரும்புகின்றவர்கள்

11. மூடர்களாகிறார்கள், பெரியதான ஸம்ஸார சாகரத்தை எவ்வாறு தாண்டுவார்கள். பகவானுடைய அபீஷ்ட பலமடைந்தவர்கள் சித்தர்கள், தேவர்களாவார்கள்.

12. கலங்கிய சிந்தனையுடைய மூடர்களுக்கு ரத்ன லிங்க பூஜையால் என்ன பலன், ஆகையால் லிங்க பூஜையிலிருந்து ஸித்தி கிடைக்கும் யுக்தமான லிங்கபூஜை செய்ய வேண்டும்.

13. விஷ்ணு முதலானோர், வஸூக்கள் ருத்ரர்கள், முனிவர்கள் தபஸ்விகள் முதலானோர் விதிப்படி லிங்கபூஜை செய்து விரும்பிய பயனை அடைந்தார்கள்.

14. ஸ்வாயம்புவமோ முநிவர்களால் கணங்களாலும் விபுதர்களாலும் ஸித்தர்களாலும் வித்யாதரர்களாலும் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் பயன்கள் தரக்கூடியதாகும். மானுஷ்யர்களால் ஸ்தாபிக்கப்பட்டவை சிறந்ததல்ல.

15. ஆசார்யனோ கீழே கூறும் முறைப்படி எல்லா இலக்கணங்களோடு கூடியதாக தானாகவே சாஸ்திரம், காலம் தேசத்தை நன்கு பார்த்து ஸ்தாபித்து

16. ஆசார்யரோ மற்றும் உதவி செய்பவராலோ தன்னால் பிரதிஷ்டை செய்ய இயலாத அரசர்களின் நன்மைக்காக தான் பிரார்த்திக்க வேண்டும்.

17. ஆசார்யன் நான்கு வர்ணத்தவரின் நலனுக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும். தனக்கும் அந்யருக்கும், கர்த்தாவுக்கும், நன்மை செய்பவர் உத்தமதேசிகராவர்.

18. லிங்க நிர்மாணத்திற்காக லோஹரத்னங்கள் கிடைக்கும் மலைக்கு தன் செயலுக்கு உகந்த நிலையில் கல் முதலிய திரவ்யங்களை உரிய முறையில் எடுத்துவர வேண்டும்.

19. அந்தத்ரவ்யங்கள் கற்சிலை ம்ருத், லோஹ, தாரு, ரத்ன, க்ஷணீக வஸ்துக்களாக பலவாறாக கூறப்படுகிறது.

20. நான்கு வர்ணத்தாருக்கும் முறையே வெள்ளை, சிவப்பு, மஞ்சள், கருப்பு வர்ணமென நான்கு விதமாக சிலைகள் பற்றி கூறப்படுகிறது. நான்கு வர்ணத்தவர்களுக்கும் நெல்லிமுல்லி நிறமான கருப்பு ஏற்றதாகும்.

21. நான்கு வர்ணலிங்கமும் விப்ரருக்கும், மூன்று வர்ணங்கள் க்ஷத்ரியர்களுக்கும், இரண்டு வர்ணங்கள் வைச்யர்களுக்கும் ஓர் வர்ணம் நான்காம் வர்ணத்தவர்க்கென்று முறையாக பூமியின் சிலை லக்ஷணம் கூறப்பட்டுள்ளன.

22. அந்தந்த பூமியிலுண்டான மண்ணையே லிங்கத்திற்காக கூறப்பட்டுள்ளது. அந்தந்த லிங்கத்திற்கு ஏற்றாற்போல பலன்களும் சொல்லப்படுகின்றன.

23. (அந்தந்த) நான்கு வர்ண ம்ருத்லிங்க பலன் அரசத்தன்மையானதாகும். ஸ்வர்ண லிங்கம் செல்வத்தை தரும், வெள்ளி லிங்கம் ராஜ்யத்தை தரும்.

24. இரும்பு லிங்கம் மரணம் அளிக்கும், வெண்கல லிங்கம் மயக்கத்தை தரும், பித்தளை லிங்கம் இடமாற்றத்தை தரும், ஈயலிங்கம் புத்ர விருத்தியை அளிக்கும்.

25. தாமிர லிங்கம் வளர்ச்சியைத் தரும், வெள்ளீயம் நோயை போக்கும். இவ்வாறு உலோக லிங்க பலன்கள் ஆகும். ரத்ன லிங்க பலன்பற்றி கூறுகிறேன்.

26. வைர லிங்கம் அரச பலனை கொடுக்கும், முத்து லிங்கம் ஆரோக்யத்தை கொடுக்கும், இந்திர நீல லிங்கம் எல்லா விருப்பத்தையும் அளிக்கும்.

27. மாணிக்க மயமான லிங்க பூஜையால் விஷ்ணு பதவியடைகிறான். வைடூர்ய லிங்கம் நோயழிவும், புஷ்பராகம் சவுபாக்யமும் தரும்.

28. மரகத லிங்கம் ஆரோக்யத்தை தரும், பவழ லிங்கம் வசீகரம் தரும், ராஜாவர்த லிங்கம் மஹாபோக பலன் தரும்.

29. நீலக்கல் லிங்கம் நாகேந்திர போகம், சங்குமய லிங்கம் சவுபாக்யம் ஆகும். காந்தக்கல் லிங்கம் சூலநோயை குணப்படுத்தவும், சத்ருவை வீழ்த்த மணல் லிங்கமும்

30. தான்ய லிங்கம் பயிர் விருத்தியையும், சூர்ய காந்த லிங்கத்தால் ஆரோக்யமும், சந்திர காந்த லிங்கம் ம்ருத்யு ஜயத்தையும், பத்மராக லிங்கம் ஐச்வர்யத்தையும் கொடுக்கும்.

31. ஸ்படிக லிங்கத்தால் ஸர்வ ஸித்தியும் பூமியிலுள்ள (பவழ) லிங்கத்தால் ஸித்திகளும் பாதரஸ லிங்கம் நல்ல பலனைத் தரும், காந்த லிங்கம் நல்ல பலனைத் தரும்.

32. மந்த்ர ஜாதி ஸம்ஸ்காரலிங்கம் க்ஷüத்ர ஸித்தி பலனையும் மற்ற உயர்ந்த மணி ஜாதிகளால் பூஜித்த லிங்க பலன், பல நினைக்க இயலாத பலமாகும்.

33. இவ்வாறு ரத்ன லிங்க பலன்கூறி மர வகைலிங்க பலன் கூறுகிறேன். ஐஸ்வர்ய பலனை சாரமுள்ள வ்ருக்ஷலிங்க பூஜையாலும், பாலுள்ள விருக்ஷ லிங்க பூஜை ஆயுளையும்

34. மதுரமான வாசனை குணமுள்ள வ்ருக்ஷலிங்கம் ஞான சவுபாக்யமும் சிவப்பு சந்தன லிங்கம் அசோகம் சிம்சுப மரலிங்கம் பில்வ லிங்கம்

35. எல்லா துக்கமில்லாததும், பிசாச மரலிங்கம் சத்ருக்களை அழிக்கக்கூடியதாகும். ஸாதக நக்ஷத்ர வசத்தால் ஏற்பட்டுள்ள (தாரு) மரலிங்கம் அமைக்க வேண்டும்.

36. நெல்லி விருஷம், அத்தி, நாவல், கருங்காலி, கருப்பு அர்ஜுன மரம், காட்டு வாழை, அரச மரம்

37. புன்னாக மரம், ஆலமரம், புரசு, அரளிமரம், முல்லைமரம், பில்வம், அர்ஜுன மரம், இலவ மரம், மகிழ மரம்,

38. மறுக்காரை. மருதமரம், அசோக மரம், பலாமரம், மாமரம், எருக்கு, கதம்பமரம், வன்னி, வேம்புமரம்

39. இலுப்ப மரம் இவைகள் அஸ்வினி நக்ஷத்திரம் முதல் இருபத்திஏழு மரங்களாகும். இந்த மரங்களால் லிங்கம் செய்ய வேண்டிய ஏற்பட்டால் சாந்தி ஹோமம் முதலியவை

40. செய்து லிங்கம் செய்யவும், இல்லாவிடில் மரண பயம் உண்டாகும், வெள்ளெருக்கு வேர்லிங்கம் வெற்றியை தரக்கூடியதாகும்.

41. சந்தன லிங்கம் ஸர்வ வச்யம், சிவப்பு சந்தன லிங்கம் செல்வம். (சரள) மேருமல்லி மரலிங்கம் எல்லாவற்றையும், கருங்காலி ரோக நாசத்தையும் தரும்.

42. ஏழிலைப்பாலை மரம், தேக்கு மரம், பாலுல்ள பழங்கள் தரும் மரங்களின் லிங்கங்கள் எல்லா வர்ணத்தாருக்கும் எல்லா விருப்பங்களையும் தரும்.

43. அத்தி மரலிங்கம் புஷ்டியையும், ஆலமரலிங்கம் சாந்தியையும், அரசு மரலிங்கம் வச்யத்தையும் கருங்காலிமர லிங்கம் ஆரோக்யத்தையும் தரவல்லதாகும்.

44. தாளி என்ற மரலிங்கம் சத்ருக்களை விரட்டும். மரத்தினால் லிங்கம் சொல்லப்பட்டு க்ஷணிகலிங்க பலன் கூறப்படுகிறது.

45. மணல் லிங்கம் மோக்ஷம், ஐஸ்வர்யத்தையும் கோமயம் நோயின்மையும் அன்ன லிங்கம் எல்லாவற்றையும் மாவு லிங்கம் புஷ்டியை தருவதாகும்.

46. வெல்லம் ப்ரீதிகரமும், பழம் இஷ்டார்த்த சித்தியும், நெய்லிங்கம் துக்கமுள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை தருவதாகும்.

47. வெண்ணை லிங்கம் சந்தோஷத்தையும், மண்மய லிங்கம் குணங்களையும் விபூதி லிங்கம் ஸர்வ வியாதி நிவாரணத்தையும் தரும்.

48. அவரவர் வர்ணத்துக்கு தக்கவாறு புஷ்பங்களின் லிங்கம் புஷ்டியை கொடுப்பதாகும், வில்வம் முதலிய பத்ர லிங்கம் சந்ததியை கொடுக்கும்.

49. அந்தந்த விதையிலிருந்து உண்டான லிங்கம் விசேஷமாக திருப்தி காரணமாக ஆகும். அரிசி முதலிய தான்ய லிங்கம், அந்தந்த த்ரவ்ய பலனை தரும்.

50. கிழங்கு, வேரால் ஆனலிங்கம் ப்ரம்ஹதத்வத்தை தரும், நெற்பொறி சத்துமாவால் நிர்மாணிக்கப்பட்ட லிங்கம் வியாதியை போக்கும்.

51. ஜல லிங்கம் பிராணிகளுக்கு சாந்தியைத் தரும், எழுதிய லிங்க படம் பல பலனைத் தரும்.

52. பச்ச கற்பூர சந்தனாதி லிங்க பூஜை முதுமையை நீக்கக் கூடியதாகும். இதுவரை பல்வேறு லிங்கங்களையும் அதன் பொருளையும் கூறப்பட்டன லக்ஷணமும் கூறப்படுகிறது.

53. ஆலய கருவறை அளவால் உயர்வு முதலான லிங்கம் அளவுள்ளதாக இருக்க வேண்டும். ஸித்திக்காக முக்யமாகவும் முக்திக்கும் ஒன்றானதாகவும் கூறப்பட்டுள்ளது.

54. எந்த லிங்கங்கள் கைஅளவு முதலாக விதிப்படி உள்ளதோ அவை மோக்ஷத்திற்கும் விதிப்படி வரிசையாக அளவுள்ள அந்த லிங்கங்கள் புத்திக்கும் ஆகும்.

55. லிங்கத்தை வடிவமைப்பதில் கர்ப்பக்ரஹ அளவில் பாதி அதமமாகும். ஐந்து, மூன்று அம்சம் உயர்ந்ததாகும். அதன் நடுவில் எட்டு பாகத்தில் ஒன்பது விதமான லிங்கத்தையும் வைக்கலாம்.

56. அதற்கு கீழே மூன்று மூன்றாக குறைந்ததால் இருக்கும் கற்பக் கிரஹத்தின் அளவு முப்பத்தாறு ஆகும்.

57. கருவறையை மூன்று, நான்கு ஒன்பது என்று பாகமாக பிரித்து ஆலயத்தில் த்வார அளவை விட்டுவிட்டு விசேஷமாக சதுரஸ்ர பீடம் அமைக்கவும்.

58. முன்பு கூறப்பட்ட லிங்கங்களுக்கு பிரமாணம் கூறப்பட்டுள்ளன. ஓர் அங்குலம் முதல் அங்குலம் அங்குலமாகப் பெருக்கி

59. மூன்று விதமான அங்கு அளவுகளால் நூற்றியெட்டு அங்குலம் வரை கூறப்பட்டுள்ளது. ஓர் கையளவு முதல் ஆறங்குல வ்ருத்தியாக

60. ஒன்பது அங்குல கைபிரமாணம் வரை ஹஸ்தமானப்படி லிங்கம் செய்யவும். ஓர் கைக்கு கீழ் அளவுள்ள லிங்கம் சைலலிங்கம் ஆலயத்திற்கு சிறப்பாக ஆகாது.

61. முக்கால் பாக அளவு மரலிங்கமும், உலோக லிங்கம் அரைபாக அளவாகும். ஓர் அங்குல அளவு முதல் விதஸ்தி என்ற அளவு வரை ரத்ன லிங்க அளவாகும்.

62. அந்தந்த செயலுக்கு ஏற்ற ஆயாதி என்ற கணக்குப்படி அளவுள்ள லிங்கம் மங்களத்தை தரும், உச்சாடநாதி விஷயங்களில் சைல லிங்கம் ஓர் முழத்தின் கீழ் இருக்க வேண்டும். (11 வகையான அளவுகளுள் ஒன்றை பின் பற்றி அளவிடுதல் ஆயாதி)

63. லிங்கத்தின் ஆயாமம் என்ற அளவில் ஒரு பாகத்தில் நான்கில் ஒரு பங்கு விஸ்தாரமும் மூன்று கண்ட பாகமும் ஸமமாக செய்து எல்லா சித்தி லிங்கத்தின் விஷயத்திலும் ஏற்க வேண்டும்.

64. கீழ்பகுதி சதுஸ்ரம், நடுவில் அஷ்டாஸ்ரம் மேலே வட்டவடிரமாக இருக்க வேண்டும். அரை நிலவு வடிவமாக தலைப்பகுதி இருக்க வேண்டும்.

65. பூர்வ திக்கில் இஷ்டசித்திக்காக வஜ்ர சிரோ லிங்கமாக பாவிக்கவும். வஜ்ரசரீரத்தை தூணுடன் சேர்த்துவிட்டு

66. லிங்கத்தின் மேல் ருத்திர பாகத்தில் ஐந்து அம்சங்களால் நாற்கோணம், எண்கோணமும் முன்புள்ள வட்டவடிவத்தில் ஏழுகோணம் அமைக்க வேண்டும்.

67. ஆக்னேய பீடத்தில் வன்னி திக்கில் தன் ஸித்தியை பொருட்டு லிங்கத்தை சக்திரூப பிண்டிகையோடு ஸ்தாபிக்க (சக்தி சின்னத்தோடு)

68. ஆக்னே பாக லிங்கத்தால் உக்ரசாந்தி, தேஜஸ், அசுரர் முதலிய சத்ரு நாசம் எதிரியின் வேகத்தை குறைத்தல் முதலியவை ஏற்படும்.

69. ஒன்பது அம்சத்தில் ஐந்து அம்சத்தில் முன்னும் பின்னும் பக்கத்தில் இரண்டு மூன்றால் பிரதான கைகளும் வலது கையில் வ்ருத்தாகாரமாக அக்னி பாகத்தில் விடுபட்டதாகவும்

70. வலது பாகத்தில் தன் சித்திக்காக யாம்ய பீடத்தில் ஸ்தாபிக்கவும். விதியோடு லிங்கத்தின் தலையில் தண்டம் போல் ஸ்தாபிக்க வேண்டும்.

71. குரு தண்டமாக தட்சிண பாகத்தில் (வலது) ஸ்தாபிக்க பவுருஷம், ஆயுள்விருத்தி நரகத்தின் தென் பாகத்தில் இருக்கும் சத்ருக்களுக்கு நாசம்

72. வைசூரி, கலக்கம் நோயை சந்தேகமின்றி அளிக்கிறார். நீளத்தின் இருபத்திரண்டு அம்சத்தில் ஐந்து அம்சங்களால் சதுரச்ரம்

73. அஷ்டாச்சரம், வ்ருத்தம், தசாச்ர ஸஹிதமாக அந்த திக்சாதன ஸித்திக்காக ராக்ஷஸ பீடத்தில் ஸ்தாபிக்க வேண்டும்.

74. பிண்டிகையில் கத்தி சின்னமிட்டதாகவும் கத்தியை அடையாளமுள்ள பாணத்தையும் ஸ்தாபிக்கவும், சத்ருக்ஷயமும் கீல பேதங்களால் சத்ரு வித்வேஷமும், மோஹனஸித்தியும் அடைவான்.

75. ராக்ஷஸ ஸைன்ய நாசம் மயக்கமும் ராக்ஷசர்களுக்கு மாரி பீடையை பிரவர்திப்பதும் விதிப்படி மந்திரத்துடன் கூடிய பூஜையால் கிடைக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

76. உயரத்தின் பதினான்கு பாகத்தில் நான்கோணம் பிரம்ம பாகமும், பிறகு சதுரச்ரம் வ்ருத்த ரூபமாக லிங்கமானது இளம் சூர்யகாந்தியுடன் கூடிய தலையுள்ள லிங்கத்தை

77. மேற்கு திக்கில் ஸ்தாபித்து அந்த திசைத்தலைவன் தன்மையை அடைகிறான். அந்த மேற்கு திசையின் பொருட்டு பாச சின்ன மஸ்தகம் அமைக்க வேண்டும்.

78. பிரதிஷ்டை செய்தால் உயர்ந்த அமைதியையும் ஆரோக்யம் செல்வச் செழிப்பு நல்ல அழகுத் தன்மை, நோயின்மையையும் சவுபாக்யத்தையும் சந்தேகமின்றி அடைகிறான்.

79. நீளத்தில் இருபத்தி நான்கு அம்சத்தில் ஏழுபாக விஸ்தாரத்தில் ஒன்பது பங்கிலும் மூன்று பங்கிலும் மத்தியில் ஆறுபாக, ஆறுபாக வ்ருத்தியால்

80. அதன் ஊர்த்வத்தில் வ்ருத்தம் அமைத்து, ருத்ராம்சத்தில் த்ராபுஷம் என்ற சின்னம் சிரஸ் அமைத்து வாயுதிக்ஸ்வாம்ய பலனை அடைய வாயு திக்கில் ஸ்தாபிக்க வேண்டும்.

81. த்வஜ சின்னமுடைய த்வஜ சிரோயுக்தமாக லிங்கம் அமைக்கவும், மந்திரக்ஞன் அந்த லிங்க பூஜையால் உச்சாடன, உத்வேக, விப்ரம ஸித்திகளை அடைகிறான்.

82. சத்ருக்களுக்கு மிகவும் துன்பத்தை ஏற்படுத்தவும், அவர்களை அழிப்பதையும் சந்தேகமின்றி செய்கிறார். முன்பு கூறப்பட்டுள்ள வாருண லிங்கத்தை ஊர்த்வ சிரசையுடைய வடக்கு திசையின் (யக்ஷம்) என்ற

83. லிங்கத்தை யக்ஷ திக்கில் வடக்குதிக்ஸ்வாம்ய பலனை அடைய பிரதிஷ்டித்து கதைசின்னமுடையதாக வடக்கில் லிங்கத்தை ஸ்தாபிக்க வேண்டும்.

84. ஸ்வர்ண ப்ராப்தி சுகமும், மிக உயர்ந்த பயனும் ஜயம், தைர்யம், ராஜ்யப்ராப்தி, ப்ரபுத்தன்மையையும் அடைகிறான்.

85. மந்திரஸாந்நித்யத்தை ஸந்தேகமின்றி அடைகிறான். உயரத்தின் பாதியில் ருத்ரன் போல் அமைத்து ஆறு பாகங்களால் பத்மம் அமைத்து

86. பதினாறு அம்சத்தில் எட்டுபாகம் அழகான பக்கங்களால் இரண்டு பாக அதிகரிப்பால் எண்கோணத்தையும் வட்ட வடிவத்தை நடுவில் மூன்று பாகம், உயர்ந்ததாக ருத்ரபாகத்தையும் அமைக்க வேண்டும்.

87. கோழி முட்டையை ஒத்த சிரசையுடைய ஈசான பீடத்தில் லிங்கம் அமைத்து அந்த திசைத்தலைமைப் பலனை அடைய சூலசிரோயுதமாக லிங்கம் அமைக்க வேண்டும்.

88. சூலத்தை ஈசான திக்கில் ஸ்தாபித்தால் பூமியின் அரசபதவியை அடைகிறான். ஞான விக்ஞான மோக்ஷத்திற்காக யோகீசத்தன்மையை தரக்கூடியதாகும்.

89. சிவானுக்ரகத்தால் சவுபாக்கியத்தையும் அதேபோல் ஸாம்ராஜ்ய சித்தியையும் அடைகிறான். உயரத்தின் ஒன்பது பாகத்தில் ஐந்தம்சத்தில் சதுரஸ்ரம் அமைக்க

90. அஷ்டாச்ரமும் முன்போல் விருத்தமும் குடை சின்ன சிரோயுதமாக ப்ரம்மதிக்கில் (ஈசான தட்சிணம்) ஸ்தாபித்து பிரம்ம பதவித்தன்மையை அடைகிறான்.

91. தாமரை சிரஸ்ஸாக பத்ம சின்னத்துடன் பத்மாங்க பீடத்தில் பிரதிஷ்டிக்கவும், ஸாம்ராஜ்ய பலசாதனமும் தேவத்தன்மையையும் அடைகிறான்.

92. இருபத்தி நான்கு பாக லிங்க உயரத்தில் ஐந்து பாக சதுரஸ்ரமும் முன்புபோல் உள்ள நடுவில் வட்ட வடிவத்தில் நீளவட்டமாக தலைபாகத்தை வைத்து

93. காரூட பீடத்தில் அந்த திசைத்தலைவத் தன்மை பலனையடைய ஸ்தாபித்து சக்ராங்கத்தின் சக்ரமஸ்தக லிங்கத்தை

94. ஸ்தாபித்து பாதாள ஸித்தியையும் ரஸாயன ஸித்தியையும் அடைகிறான். லிங்காயாமத்தின் நவாம்சமான ப்ரும்மாம்சத்தில் மூன்று பாகத்திலிருந்து ஏற்படும்.

95. முன்பு கூறப்பட்ட அகலத்தால் விஷ்ணுவையும் சிவனையுமாக இணைத்து செய்வது குற்றக் கூட்டங்களை விடுவிக்கும் ஸித்திலிங்கம் என கூறப்படுகிறது.

96. ஆப்யாதி, தேவலிங்கத்திலோ லோகபாலார்ச்சித லிங்கத்திலோ ஸஹஸ்ர லிங்கம் முன்பு கூறியபடி செய்யவேண்டும்.

97. இந்த லிங்க பிரதிஷ்டை எல்லா காமத்தையும் தரவல்லதாகும், நாவன்மையைத் தரவல்ல லக்ஷணமுடையதாகவும் ஆகும். அர்ச்சாம்சத்தில் (ருத்ரபாகத்தில்) நான்கு பாகத்தில், நீளத்தில் இருபத்தேழாக பிரிக்கப்பட்டு

98. விஷயத்தை அறிந்ததான ஸூத்ரங்களால் அஷ்டோத்ர சதலிங்கம் அமைக்கவும், முன்பு கூறப்பட்ட உயரங்களால் ஸமகண்டமான ஆட்யாதி லிங்கங்களை கல்பிக்க வேண்டும்.

99. குடை, கோழிமுட்டை, பிறை சந்திரன் நீள் வட்டம் போன்ற சிரஸ்ஸையுடையதாக தாராலிங்கம் ஒரு அம்சம், இரண்டு, மூன்று அம்ச கோணங்களால் அமைக்க வேண்டும்.

100. கார்ய சித்தி, புத்திர பாக்யமும் நகரங்களை அடைவது, விருப்ப பயனை அடைவது, இறக்கச் செய்வது, உச்சாடனம், வெருப்புத் தன்மையின் அமைதி வலிமை, பிறரை தன்வசப்படுத்துதல் ஆகியவை பலனாக ஆகும்.

101. வசீகரணம், ஆரோக்யம் விருப்பங்கள், வருத்திப்பது, பணம், சுகம், யக்ஷர், பைசாச, ராக்ஷஸர்களால்மோஹன நிலைநிருத்தல், கொல்லுதல்

102. ஸாதேச, ஈசாந பைரவலிங்க விஷயத்தில் ஆஸூரம் பவுருஷம், தேவத்வம், தேவராஜ்யத்வம், ஸர்வகாம பலனையும் அடைகிறான்.

103. இந்த ஓர் கோணம் முதலான லிங்கங்களில் பலன்களால் ருத்ரபதம் கிடைக்கும், இவ்வாறே கோண வேறுபாட்டளவால் பீடங்களும் ஏற்படுத்தலாம்.

104. லிங்கத்தின் லக்ஷணம் கூறப்பட்டு சிரோபாக அளவுகளை பிரித்து கூறுகிறார். ஒவ்வொருபாக அதிகரிப்பால் எட்டு அம்சத்தில் நான்கு பாகத்தில்

105. பலபேதமாக பத்மம் முதலான சிரோபாக வகைகள் உள்ளன. புண்டரீக சிரஸால் புகழ், தேஜஸ் அதிகமான லக்ஷ்மீகரம் இவைகளை

106. அடைகிறான். ஸ்ரீவத்ஸ சிரஸால் வெற்றி சத்ருவை நாசம் செய்யும் பலனடைகிறான். அந்த சிரோபாகத்தின் நான்கம்ச அதிகரிப்பால் கோழிமுட்டை வடிவசிரஸில்

107. ப்ரஜாதிபதியாகவும் ப்ரஜை வ்ருத்திகரத்தையும் ப்ரஜையையும் அடைகிறான். அந்த சிரோபாக மூன்று பாகத்தின் ஒரு பாகத்தினால் வட்டவடிவமான தலையை உடைய லிங்கம்

108. ஏழு லோக பதவியும், சவுபாக்யமும் ஆயுள் அபிவிருத்தியும் வட்டவடிவ சிரோலிங்க பலமாகும். ஆறுபாக விருத்தியால் ஏற்பட்ட சிரஸ் நீள்வட்ட வடிவமாகும்.

109. மேற்கூறிய லிங்கங்களால் ஸாத்யர்கள், ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள் உயர்ந்த ஐச்வர்யமடைந்தவர்களாகிறார்கள். ஸாதாரண விதியில் இந்த சிரோ லிங்கங்களை உத்தமர்கள் அர்ச்சிக்க வேண்டும்.

110. தன் அபிப்ராயப்படி சொத்தையடைந்து பிறகு குறைவில்லா சிவபதம் அடைகிறான். குடையாளமிட்ட லிங்க பலன்களைக் கூறி வஜ்ராதிகளைப் பற்றி கூறுகிறார்.

111. அர்சனாம்சத்தின் நான்கு பாகத்தில் வஜ்ரபாகம் அமைக்கவும், அர்சாம்சத்தில் பதினோரு பாகத்தில் மூன்றுபாக வட்டத்தில் சக்தி சின்னமாகும்.

112. எட்டாக பிரிக்கப்பட்டு ஒன்றரை அம்சத்தோடு ஆறம்சமாக மூறு பாகங்களால் தண்டமும் எட்டம்சத்தில் ஒன்றரை பாகவர்தநத்தால் கத்தி சிரசும் ஆகும்.

113. ஐந்து அம்சத்தில் பாசம், கொடியும் நான்கம்சத்தால் கதைசிரசும் ஒன்பது அம்சத்தில் ஒன்றரை பாகத்தில் மூன்று பாகத்தில் சூல சிரஸூம் கூறப்படுகிறது.

114. எட்டு, பத்து அம்சத்தில் ஓர் சுற்றுதலால் சக்ர பங்கஜ சிரசும் ஆகும். சிரோலக்ஷணம் கூறி லிங்க அமைப்பு முறை கூறப்படுகிறது.

115. அர்ச்சாம்சத்தின் ஒன்பது பாகத்தில் மூன்று பாகம் அடையாளம் செய்யவேண்டும். அடையாளம் செய்யப்பட்ட அரை பாகத்தில் இரண்டுபாக ரேகையும் அதன் நுனியில் கஜ நேத்திரமும் செய்விக்க

116. திக்ஸாம்யஸித்திக்காக வஜ்ராதி சின்னங்களை மூர்த்தத்தால் செய்யவேண்டும், வஜ்ரம், சக்தி, தண்டம், கட்கம், பாசம் த்வஜம்

117. கதை, திரிசூலம் சக்ரம் பத்மமென தசாயுதமாகும். பிருஹ்ம, விஷ்ணு முதலிய தேவர்களின் பதத்தை விரும்பும் த்விஜோத்தமர்கள்

118. அந்தந்த ஆயுதமடையாளமான பீடம், அந்தந்த ஆயுத சின்ன அடையாளமுள்ளதாக லிங்க அமைப்பு செய்யவேண்டும், ஒன்பதாக பிரிக்கப்பட்ட லிங்காம்சத்தில் ஒன்பதம்சத்தில் அடையாளம் செய்யவேண்டும்.

119. சத்ரு தேசத்தில் ஸ்தாபனம் செய்தால் தனக்கும், சத்ருவுக்கும் நாசமேற்படும், வேதையான இரண்டாவது நேத்ரத்தால் நேத்ரரோகாதிகள் ஏற்படும்.

120. மூன்றாவதாக அந்த முகத்தின் சூத்திரத்தினால் நொண்டித்தன்மையும் மரணமுமே ஏற்படும். நான்காவதாக கண்ட சூத்ரத்தினால் எதிரிகளின் உறவினர் அழிவார்கள்.

121. ஐந்தாவதாக ஐந்து பாகத்தினால் எதிரிகளின் வெற்றி ஏற்படும். ஆறாவது பாகத்தினால் புத்ரன் மனைவி நாசமடைவார்கள்.

122. ஹ்ருதய தேசத்தில் அமைப்பதால் ஹ்ருதய சூலரோஹமும், வயிற்று பகுதியில் அமைப்பதால் வயிற்று வலிமுதலான துன்பங்களும் ஏற்படுகின்றன. தொப்புள் பிரதேசத்தில் செய்வதால் எதிரிகளுக்கு பயமும் ஏற்படும்.

123. பூஜையின் ஒன்பதில் ஒருபாக அடையாள கோட்டின் பயன் முறைப்படி கூறப்பட்டது. இங்கு மூன்று பாகத்திலும் ஆறு பாகத்திலும்

124. யவத்தின் நான்கம்சமாக கிரமமாக குறைக்கவோ அதிகரிக்கவோ வேண்டும், பிரித்த தோஷ நிவிருத்திக்காக இவ்வாறு சின்னம் கல்பிக்க வேண்டும்.

125. லிங்கோச்சத்தில் இருபத்தி நான்காம்சத்தில் ஓர் அம்ச பாகம் அகல அளவு ஆகும். சிரோவர்த்தன அளவுபோல் சிகை அளவையும் செய்யவேண்டும்.

126. இந்த்ர திக்கில் கூர்மையான நுனியும், மெலிந்த மத்யமுமாக வஜ்ர சின்னம் ஆகும். பாதி விஷகம்பமும் (உயரமும்), உன்னத மஸ்தகமு முடையதாக சக்தி சின்னம் ஆகும்.

127. தெற்கில் தண்டநுனி ஸ்தானமும், பாசாக்ரமும் டங்கமும் நைருதியில் சக்தியையும் வடக்கில் கதை போன்றும்

128. ஈசான லிங்கத்தில் சூலாச்ரமும் வாயவ்ய லிங்கத்தில் த்வாஜாங்கித மஸ்தகமும் ஸாமான்ய விஷயத்தில் தன் விருப்பத்தையடைய லிங்க உருவமான லக்ஷணம் அமைக்க.

129. அடையாளத்தின் நடுவில் வஜ்ராயுதங்களுடை லக்ஷணம் செய்யவேண்டும், ஸ்தம்பநாதி கிரியைகளில் லோகபாலர்களால் பூஜிக்கப்பட்ட லிங்கம் அமைக்க வேண்டும்.

130. நவாம்சமான அர்ச்சனை அளவுபாகத்தில் ஏழாவதம்சத்தில் ஆயுத சின்னம் அமைப்பதை செய்யவேண்டும், சிவயோகிகளுக்கு மணி, முத்து பவழங்களால் லிங்கம் செய்ய வேண்டாம்.

131. பாணலிங்கத்திலும், உலோக லிங்க விஷயத்திலும் அதன் பிரகாச அமைப்பு நீளம், அகலம், கனமென்பதான அளவமைப்புகளால் குறைந்திருந்த போதிலும்

132. சுப லக்ஷண அடையாளமுள்ள லிங்கம் ஸர்வசித்தமாகும். பீடத்திற்கும் பிண்டிகைக்கும் லக்ஷணம் கூறப்படுகிறது.

133. லிங்க உயரத்திற்கு ஸமமாக பீடமும், அது எட்டுபாக அளவில் உயரத்துடன் கூடியதாகும். ஐந்திரம், ஆக்னேயம், யாம்யம் ராக்ஷஸம், வாருணம்

134. வாயுதிக், (யாக்ஷம்) வடக்கு, ஈசாநம், ப்ராமம், காருடம் என்று பீடத்தின் பெயர்கள் கூறப்படுகின்றன. பிண்டிகை மூன்று பாதத்தை யுடையதாகும்.

135. பிண்டிகையும் ஐந்த்ராதி பெயர்களையுடையாகும். பீடத்தின் வடிவத்தை கூறுகிறேன், சதுரச்ரம், யோநி, அர்த்த சந்திரன், முக்கோணம், வ்ருத்தம், ஷடஸ்ரம்.

136. பத்மம், அஷ்டாச்ரம், வ்ருத்தம் இவ்வாறு குண்டலக்ஷணப்படி அமைக்கவும். பதினெட்டு பாகத்தில் நான்கு அம்சமாக சுற்றிலும் வெளியில் தள்ளப்படுவதாலும்

137. இரண்டு குணம், வெளிக்கொணர்ந்ததாக திசைகளில் பீட அமைப்பின் பாதி அமைக்கவும். ஸபத்ரமான காரூட பீடம் பற்றி கூறுகிறேன். அவைகளின் பூஷணம் பற்றி கூறுகிறேன்.

138. கிழக்கு திசையில் பாதம்கண்டம் என்ற அமைப்பின்றி நாற்கோணமாக பீடம் அமைத்து அதே பாகத்தில் முறையாக ஒவ்வொன்று பாகமாக யோனி அமைத்து

139. பாஜ்ஜகதி என்ற அளவு கர்ணிகாகண்ட நிர்கமத்தால் இரண்டு பட்டிகை அமைத்து ஆக்னேயபீடம் அமைத்து பதினாறு அம்சத்தில் ஆக்னேய பிண்டிகை அமைக்க வேண்டும்.

140. லிங்க உயர ஒன்பது பாகத்தில் ஒன்று, இரண்டு, மூன்று என்ற அளவுகளாலா பாஜ்ஜகதி என்ற இடமும் கர்ணிகை, கண்டம், இரண்டு பட்டிகையும் அமைக்க வேண்டும்.

141. இதுபோல் யாம்யபீடம் அமைத்து அதன் மேல் யாம்யமாக பிண்டிகை அமைக்க, ராக்ஷஸதிக்கில் எட்டு பாகத்தில் ஒன்று, இரண்டு மூன்றம்சம்களால் முறையாக

142. பாஜ்ஜகதீ என்ற இடம் கர்ணிகா, கண்டம், ராக்ஷஸ லிங்கத்தில் இரண்டு பட்டிகை அமைத்து அதன்மேல் ராக்ஷஸ பிண்டிகை அமைக்கவும். பதினோரு பாகம் ஆன வாருண லிங்கத்தில்

143. ஒன்று, இரண்டு, ஒன்று, மூன்று பாகங்களால் பாஜ்ஜகதீ, கடம் என்ற அமைப்பை செய்யவும், மேற்கூறிய பாகத்திலிருந்து இரண்டு பட்டிகை அளவு வெளிக்கொணர்வதால் கர்ணிகா கண்டம் எனப்படுகிறது.

144. அதற்கு மேல் வருண சம்பந்த பிண்டிகையாகும். பதினான்கு பங்காக்கப்பட்ட வாயவ்ய லிங்க விஷயத்தில் ஒன்று, மூன்று, நான்கு, இரண்டு, இரண்டு ஒன்று ஆகிய பாகங்களால்

145. மேற்கூறியபடி உள்ள அளவுகள் பாஜ்ஜகதி என்ற கும்ப தண்டங்களாகும். ஒவ்வொரு பாக அளவினால் கண்டம் அமைத்து ஒரு பாகத்தை வெளியே செலுத்தி மூன்று பட்டிகையும் அமைத்து செய்வது வாயவ்ய பிண்டிகை ஆகும்.

146. வாருண லிங்கம் போல் யாக்ஷமும், பதினாறு பன்னிரெண்டு தளத்தால் ஜங்க கர்ணிகை அமைத்து கண்டத்தின்மேல் மாறுதலாக

147. (அஷ்டதள) எட்டுதளத்தோடுகூடிய பிண்டிகை அமைக்க, ஈசான லிங்கத்தை பதினோரு அம்சம் செய்து ஒவ்வோர் அம்சங்களால்

148. ஒன்று, மூன்று அம்சங்களாலும், பாஜ்ஜகதீ, கர்ணிகை, களம் அமைக்க, அதன் மேல் இரண்டு பட்டிகையும் அதன்மேல் ஈசான பிண்டிகையும் அமைக்க வேண்டும்.

149. முன்புள்ள அமைப்பின் இருப்பிடத்தை வட்ட வடிவங்களால் செய்வது பிராம்ம பீடம் என்றோ ராக்ஷஸ பீடம் என்றோ ஆகும். அதன்மேல் பிராம்மீ பீடமோ காருட பீடமோ அமைக்க வேண்டும்.

150. பங்கத்யம்சத்தில் மூன்று, இரண்டு ஒன்று, குணங்களால் பாதகும்ப கர்ணிகைகள், ஒரு பாகத்தால் கண்டம், இரண்டுபாக வெளிக்கொணர்வால் இரு பட்டிகை அமைக்க வேண்டும்.

151. பிறகு வைஷ்ணவ பீடலிங்க விஷயம், பிண்டிகாலக்ஷணம் கூறுகிறேன், இருமேகலையோடு ஆக்னேயீ, வைஷ்ணவீ ஐந்த்ரீ பிண்டிகையாகும்.

152. யாம்யா, ராக்ஷஸீ, குபேரலிங்க பீடம், ஈசாநம், ப்ராம்மீ பிண்டிகை த்ரிமேகலையும் வாயுபீடம் ஆறு மேகலையும் வாருணபீடம் ஐந்து மேகலையும் ஆகும்.

153. விஷ்ணு லிங்காம்ச பதினாற பாக உயரத்தில் பிண்டிகையும் பீடவிஸ்தாரமும் மீதிபீடம் சமானம், பள்ளத்தின் வெளிப்பாகம் மேகலையாகும்.

154. வஜ்ரத்தை அடையாளமாக உள்ள பீடம் வஜ்ரமாகும், பீடிகை வஜ்ஜிரியாகும் ஸஹஸ்ர லிங்கத்தினுடைய பீடமானது எல்லா அலங்காரத்துடன் கூடியதாக அமைக்க வேண்டும்.

155. கருங்கல் லிங்கத்திற்கு கருங்கல் பீடமும், மண்லிங்கத்திற்கு மண்பீடமுமாகும். மரலிங்கத்திற்கு மரபீடமும், உலோக லிங்கத்திற்கு உலோக பீடமுமாகும்.

156. ரத்னஜ லிங்கத்திற்கு ரத்ன பீடமும், உத்தமமான லோகத்தினாலாவது பீடம் அமைக்கவும். சலலிங்கத்தின் உயரம் பூஜாம்சத்தால் இருமடங்காகும்.

157. லிங்கத்தின் உயரமான பிண்டிகையும் அது லிங்கத்தை சுற்றியதாகவும் இருக்கவும், சூக்ஷ்ம லிங்கத்திற்கு ருத்ர பாகத்தை வ்ருத்தியாகவும் ஸ்தூல லிங்கத்தில் குறைவாக ருத்ரபாகம் செய்ய வேண்டும்.

158. விஷ்ணுவம்சமானது குறைப்பதாகவோ, அதிகரிப்பதாகவோ இல்லை. பிண்டிகையின் ஸமானத்திற்காக குறைத்தோ அதிகரித்தோ செய்யலாம்.

159. சல லிங்க விஷயத்தில் ரத்னஜாதிகளுக்கு மேற்கூறியபடியே ஆகும். பயறு அளவாகவோ, பர்வம் அளவாகவோ அழகாக பிண்டிகை அமைக்கவும். (விரலின் மூன்றில் ஒருபங்கு அளவு பர்வம் எனப்படும்)

160. பிண்டிகையுடன் கூடிய உயரம்தான் லிங்க ஸமான உயரமாகும், ஸூக்ஷ்ம லிங்க விஷயத்தில் எந்த குணமுண்டோ அந்த குணத்தால் பகவான் ஸந்தோஷமடைகிறான்.

161. எல்லா மனிதஜாதி லிங்கங்களுக்கும் பிரகாசஸான்நித்யத்திற்கு அளவுக் கொள்கை ஏற்றுக் கொண்டோ ஏற்றுக் கொள்ளாமலோ இருக்கலாம்.

162. இவ்வாறு மரத்தினாலும், ரத்னங்களாலும் மண் முதலியவைகளாலும் உலோகம் முதலியவற்றாலும் சந்தனம் ஆகிய பொருள்களாலும் லிங்கத்தை அமைத்துக்கொள்ளவும். மனஸ்சிலை விருப்பப் பயனுக்கு உதவாது.

163. முத்துவினால் செய்யப்பட்ட லிங்கம் நல்லவையையே கொடுக்கும், பாணலிங்கம் எல்லா பொருளையும் கொடுக்கும், வேறுமுறையாகவும் ஆற்றில் நீர்வீழ்ச்சியிலிருந்து கிடைக்கும் லிங்கத்தையும் பூஜிக்கலாம்.

164. எவ்வாறு மந்திரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் உள்ளதோ அது வரத்தை அளிக்கவல்லதாகும். ரவுத்ர லிங்கத்தில் கைஅளவின் கீழாக இரண்டம்சங்களால் பிரிக்கப்பட்ட பிண்டிகை அமைக்க.

165. கொடூரமான கார்யங்களின் பிண்டிகைக்கு அதிகமாகயவை அளவாக ரவுத்ரபாகம் அமைக்கவும். பிண்டிகை அளவு குறைவாக இருப்பின் அது எதிரியை அழிக்கவல்லதாகும், அதிகமாக இருப்பின்

166. உச்சாடனத்திலும் அமைக்கவும். அங்க ஹீநமாயிருந்தால் வ்யாதியை அதிகரிக்கும், குறைவான லக்ஷணங்களுடன் இருந்தால் பெண்களுக்கு நாசம் ஏற்படும், கர்மாவை பின்தொடர்ந்து பிண்டிகை அமைக்க வேண்டும்.

167. அவ்யத்தலிங்க விஷயம் கூறப்பட்டு வ்யக்தாவ்யக்தம் பற்றி கூறுகிறேன், ஸமலிங்கத்தில் சதுரம் எண்கோணம், வட்டவடிவமாக அமைக்க

168. முன்புகூறிய முகலிங்க விஷயத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஐந்தாக அமைக்கவும். ஐந்து முகத்தில் நான்கு திக்குகளிலும் ஒவ்வொன்றாகவும் நடுபாகத்தில் ஓர் முகத்தையும் அமைக்க வேண்டும்.

169. முன்பு கூறிய விதிப்படி ஒன்று, மூன்று நான்கு முகம் அமைக்கவும், இரண்டு முக லிங்கம் கிழக்குமுகம், மேற்கு முகமாகவும் கல்பிக்க வேண்டும்.

170. நான்கு திக்குகளிலும் ஒவ்வொன்றாக நான்கு முகமும், ஊர்த்வ பாகத்தில் ஐந்தாவது முகமும் அமைக்க, ஒவ்வொரு முகத்திலும் ஜடாமுடி பிரைசந்திரனுடன் கூடிய சிகையும் அமைக்க.

171. ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண், கை, கழுத்து பாகம் இவைகள் அமைக்க போகம், மோக்ஷ விருப்பத்திற்காக அழகாக அமைக்க வேண்டும்.

172. பலிபீடத்தை இரண்டு பாகமாக்கி லோகத்தால் நல்ல கெட்டியாக அமைக்கவும். வ்யக்தாவ்யக்தச லிங்கம் கூறப்பட்டு வ்யக்தலிங்கம் கூறப்படுகிறது.

173. குவிந்த பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவரும், ஸ்படிகத்தை ஒத்தஉருவை உடையவரும் ஐந்து முகமும் பத்துகையும், ஒவ்வொரு முகத்திலும் மூன்று கண் உடையவரும்

174. ஒவ்வொரு முகத்திலும் ஜடையுடன் கூடியவரும், ஜடையில் பிறை சந்திரனை தரித்தவரும் ஐந்து உடலும் இரண்டு பாதமுடையவராகவும் அமைக்கலாம்.

175. கிழக்கு முகம் அழகாகவும், அழகான கன்னமும், புன்சிரிப்பு உடையவராகவும் ஸ்வர்ண நிறமும் 2 கையை உடையவராக கல்பிக்க வேண்டும்.

176. கிழக்கு முகத்தில் வலதுகையில் அக்ஷமாலை, இடபாகத்தில் மாதுளம் பழம் உடையதாக அமைக்கவும், தெற்கு முகம் கருப்பான காந்தியும் பரந்த முகமும் பயங்கரமாகவும்

177. பாம்பினால் கட்டப்பட ஜடா முடியை உடையவரும், அழகான கன்னப் பரதேசத்தை உடையவரும் தொங்குகின்ற மீசை உடையவரும் திரிசூலம் மணியை தரித்த இருகையை உடையவராக அமைக்க வேண்டும்.

178. வடக்கில் உள்ள வாமதேவ முகம், மாதுளம்பூ நிறத்தை உடைய அதிக ஆபரணமுடைய வரும் பெண் உருவைப்போல் அழகை உடையவரும்

179. வலது கையில் நீலோத்பல புஷ்பத்தையும் அமைக்க. மேற்கு முகம், வெள்ளி போல் வெண்மையாகவும் பால வேஷராகவும் தாமரை போன்ற கண் உடையவராகவும்

180. அபய வரதத்துடன் தியானிப்பவர்போல் அமைக்கவும், ஐந்தாவது முகமானது ஸ்படிக காந்தியும் ஸாந்தமாயும் சிரித்த முகத்துடன்

181. கடகமுத்திரையை கையில் உடையதாக மேல்முகமான ஈசானமுகத்தை அமைக்கவும், முகத்தின் நிறத்தை அனுசரித்து முகங்களின் அமைப்பு கூறப்பட்டுள்ளது.

182. பல கலை தொகுப்புடன் கூடியதாகவும் அழகான அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டதாகவும் எல்லா விருப்பத்தை கொடுக்கக் கூடியதாகவும் அமைதியானவராகவும் முற்பத்தியிரண்டு இலக்கண அமைப்பை உடையவராகவும்

183. வாயில்படியை எதிர் நோக்கியதாகவும் ஈசான தேவரின் சரீரத்தை அமைக்கவும், அது போகத்தையும் மோக்ஷத்தையும் கொடுக்கவல்லதாகும், பிறகு கார்யத்தை அனுசரித்து

184. திவாரங்களையும் அஸ்த்ரங்களையும் அவைகளுக்கு உரிய நிறங்களை உடையதாக செய்யவும், பத்துதாள அளவினால் ஈசான சரீரத்தை அமைக்கவும்.

185. தத்புருஷன் முதலானவர்களின் சரீரங்களை ஈசான தேவ சரீரத்தின் பாதி அளவால் செய்யவும், மேற்கூரிய சரீர அமைப்புகளால் உடலுறுப்புகளின் மேல்பாகமாகவே இருக்க வேண்டும், சரீரத்தின் கீழ்பாகமாக அமைக்க கூடாது.

186. முன்பு கூறப்பட்ட உருவ அமைப்பு அளவு இவைகள் உள்ள ஐந்து சரீரங்களை உடையதாகவும், எப்படி பொருத்தமாய் இருக்குமோ அப்படியே நல்லவைகளை தரவல்லதாகவும் சதாசிவ தேவரை அமைக்க வேண்டும்.

187. அல்லது கீழ்கூறியபடி இவ்வாறாகவும் தியானிக்கலாம். அறிவு வடிவம் மேலே அழகான முகம் மூன்று கண் பத்துகை உடையவராகவும்

188. ஜடையை கிரீடமாகவும் பிறை சந்திரனை தரித்தவரும், பாம்பை பூணூலாக தரித்தவரும் புலித்தோலை ஆடையாக உடையவராகவும்

189. நர்த்தன ரூபமாகவும் எல்லா அபீஷ்டங்களை கொடுக்க கூடியதும், சிரித்த முகமுடைய வராகவும் ஸ்ரீகண்டரைப் பற்றி கூறப்பட்டு வேறு விதமாகவும் கூறப்படுகிறது.

190. மூன்று கண் பதினாறு கையும் இரண்டு பாதம் உடையவராகவும், ஜடையையே கிரீடமாக உடையவரும் சிரஸில் கருவூமத்தம்பூ உடையவராகவும்

191. பலவர்ண ஆடைகளை உடையவரும், ஜடைகளால் அலங்கரிக்கப்பட்டவரும் மேலே தூக்கிய வலது காலை உடையவராயும் அழகான ஆயுதங்களை உடையவராகவும்

192. சிரித்து வளைந்த முகம், இடது காலை உடையவரும் வ்ருஷபம், கொடி, கேடயம், முன்டசிரஸ், அக்னி, ரம்பம் போன்ற கத்தியும்

193. தோகை, யானை இவைகளை இடது கையிலும், எட்டுகைகளை உடையவராக ஸ்ரீகண்டர் கூறப்பட்டுள்ளது. பத்துகையில் திரிசூலம், நாக ஹஸ்தம், பரசு பாசம் இவைகளையும்

194. கதை, தீபம் உடுக்கையும், அபயஹஸ்தமும், நாகாபரணமுடையவரும், இரு குண்டல அலங்காரமும்

195. பாதத்தில் சலங்கையை தரித்தவராகவும், எல்லா லக்ஷணங்களுடன் கூடியவராகவும் ஸ்கந்தரையும் கவுரியையும் இடதுபாகம் உடையவராகவும்

196. இவ்வாறு ஊர்த்துவ தாண்ட மூர்த்தியை தியானிக்கவும், வேறுவித ரூபமாகவும் கூறப்படுகிறது. பலவித ஆயுதங்களோடு இருபது கை உடையவராகவோ

197. பலவித ஆயுதமுடைய பதினெட்டு கைஉடையவராகவும், வலது பாதம் இடது முழங்கால் பாகம் வரை தூக்கியதாகவும் இடதுபாதம்

198. சிறிது வளைந்ததாகவும், இடது கையோ, வலது கையோ நீட்டப்பட்டதாகவும் மற்றொருகை அபயமாகவோ இரண்டு கை மழு அக்னி உடையதாகவோ

199. மழுவின்றி சூலமோ, மற்றொரு கையில் உடுக்கையோ அக்னியின்றி மானையோ உடையவர் காலருத்ரராவர்.

200. மூன்று கண், நான்கு கை, கொடூர மானவரும் சிறிய கத்தியும் கபாலம் வரதம் அபயம் இவைகளை உடையவர் வாமருத்திரராவார்.

201. இந்த வாமருத்ர ரூபமே கத்தியின்றி சூலத்தோடு கூட பீமராகவும் பயத்தைப் போக்க கூடியவராகவும் இருப்பவர் அகோர ருத்திரராவார்.

202. மூன்று கண், நான்கு கை தித்திப் பல்லுடன் கூடிய முகம் மகர குண்டலத்துடன் ஜடையை மகுடமாக கூடியவரும்

203. வில்லும், அம்பும், மான், மழுவுடன் கூடியவராகவும் பூதசிரசின் மேல் இடது பாத தளமுடையவராகவும்

204. அல்லது பத்மபாதுகைகளை பக்த சிரஸின் மேல் வைத்திருப்பவராகவோ இடது பாகத்தில் கவுரியை உடையவரும், சந்திரப்ரபையை தரித்தவராகவும்

205. எல்லா அபீஷ்ட பலன்களை தருவதாக இருப்பவரும் புஜங்கேச ருத்ரராவார். மூன்று கண், இரண்டு கை, சாந்த முகம் சந்திரனை தரித்த ஜடையையும்

206. வரத, அபயத்துடன் கூடியவராகவும், இடதுபக்கம் பார்வதியோடு கூடியவராக அமர்ந்த கோலமாகவும், நின்ற கோலமாகவும் இருப்பவர் வரத்தை அளிக்க கூடியவராவர்.

207. இடது துடையில் அமர்ந்த தேவியோ இடதுபாக தோளில் அணைத்தவளாகவோ அம்பாளின் வலது தோள், ஈசன் (ஸ்கந்தத்தின்) தோளின் மேல் இருப்பதாகவோ

208. ஸ்வாமியின் கை தேவியின் இடுப்பை தொட்டுக் கொண்டோ இருப்பவர் ஸர்வகாமதராவர், கவுரியும் ஈச்வரனும் நான்கு கைகளுடனும்

209. கபாலம், சூலம், வரதம், அபயம் இவைகளோடு கூடியதும் மூன்று கண் இரு கண்ணாகவோ வளைந்த பாதம் உடையவராகவும்

210. வசீகரமான மூன்றுகண்களை உடையவர்களும் பாதத்தின் அடியில் பைரவரை உடையவராகவும் அந்த பைரவரும், ஒருமுகம் நான்கு முகம் ஐந்து முகம் உடையவராகவோ

211. பைரவர்களோடு இல்லாமலோ தாமரை யின் மேலுள்ளவர்களாகவோ இருப்பவர் பக்தர்களுக்கு காலாந்தகர் என்பவர் ஆகும்.

212. இவ்வாறு காலாந்த ருத்திரைகளை கூறி திரிசூலரும் ஸர்வஸித்தி தருமான அர்த்த நாரீஸ்வரைப் பற்றி வ்ருஷப வாஹனராகக் கூறுகிறார்.

213. இரண்டு கையையோ நான்கு கையையோ வரதம் அபயத்துடன் மான் மழுவுடன் கூடியதாகவோ அல்லது அழகான நெற்றிக்கண்ணை உடையவராகவோ

214. நெற்றிக்கண் இல்லாதவராகவும் இடது பாகத்தில் உள்ள உமாசரீரத்தோடு கூடியவர் அர்த்த நாரீஸ்வரர். ஹரிஹரார்த்த மூர்த்தியோவெனில் ஹரியோடு கூடியிருப்பவர் ஆவர்.

215. நான்கு கை, நான்கு முகம், மூன்று கண் சந்திர சேகரராகவும் சூலம் பங்கஜத்தையோ வரத அபயத்தையோ உடையவராக

216. கபாலம், சூலம் கூடியவராகவும் பத்தபத்மாஸனத்தில் நின்றிருப்பவரும் உக்ரமான பார்வையை உடையவருமாக இருப்பவர் நீலருத்ரர் ஆவார்.

217. மூன்று கண்ணும், நான்கு கையும், வரத அபயமும் மயில்தோகை சாமரத்துடன் கூடியவர் பீமருத்ரர் ஆவார்.

218. மான், அக்ஷமாலையுடன் கூடிய கையாகவோ, பழம் அபயகரமாகவோ வரதாபய கையாகவோ சாந்தரூபம் புன்சிரிப்பு முகமாகவும்

219. ஜடையை மகுடமாக தரித்தவரும், அமர்ந்த நிலையில் இருப்பவரும் விருப்பமான பலன்களை தரக்கூடியவர் ஸர்வசர்வருத்ரராவர் ஆவார்.

220. மூன்று கண் உடையவராகவும் வரதம், அபயம், கபாலம் சூலத்துடன் கூடியகை பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவர் ஸர்வருத்ரர் ஆவார்.

221. மான், சூலத்துடன் கூடிய கை, நான்குகை, பாசம், முண்டத்துடன் கூடியதாகவோ மழு, பாசத்தை தரித்தவராகவோ

222. வரதம், அபயம், பத்மாஸனத்தில் அமர்ந்திருப்பவராகவும், எல்லோருடைய ஸம்ஸார துக்கம் நாசம் செய்யக்கூடிய பவருத்ரர் என கூறப்பட்டுள்ளது.

223. கபாலம் சூலத்துடன் கூடிய கை, வரதம், அபயத்துடனும் உக்கிரமான தெத்திப் பல்லை உடையவரும் உக்ரமான பார்வையை உடையவர்கள் பதினோரு ருத்திரர்களுடைய லக்ஷணமாகும்.

224. அல்லது மான், மழு, வரதம் அபய ஹஸ்தத்துடன் வெண்மையான ரூபம் உடையவரும், வ்ருஷபத்தின் மேலோ அல்லது பத்மாஸனத்திலோ அமர்ந்திருப்பவர்களாகவும்

225. அந்தந்த திக்பாலக உருவங்களாக கபாலீசர் முதலிய ருத்ரர்கள் உள்ளனர். அந்தந்த திக்பாலக உருவங்களாகவும் பலவித ஆயுங்களோடும் கூடியவர் உக்ரர்கள் எனப்படுவார்கள்.

226. ருத்ர உருவம் உடையவர்கள் அந்தந்த திக்பாலர்களுடன் கூடியவராக இருக்கிறார்கள், அதிகப்படியாக கூறுவானேன், எந்த ருத்ர ரூபம் உடைய தேவர்கள் இருக்கிறார்களோ

227. அவர்கள் அமைதியான குணம் உடையவர்களும் மஹேஸ்வரர்கள் எனும் கூறப்படுகிறார்கள். இவ்வாறு ருத்ரர்களின் அமைப்பு முறை கூறப்பட்டு பிரதிஷ்டை கூறப்படுகிறது.

228. இவ்வாறு ஸ்வாமியின் பெயர் (வர்ணத்தோடும்) நிறத்தோடும் பிந்து, நாதத்தோடும் பதிமூன்றாவது எழுத்தான ஓ என்ற எழுத்துடன் கூடி (ஓங்காரத்துடன் கூடி) நான்காவது வேற்றுமையுடன்

229. மூலமந்திரத்தை கூறவும், ப்ரும்ம மந்திரம் அங்க மந்திரம் மேற்கூறியமந்திரங்களை அனுசரித்து கூறவும். ருத்திரன், ருத்ரமூர்த்தி, சாந்த மூர்த்தி இவர்களுக்கு ஈஸ்வர மந்திரமாகும்.

230. அல்லது முன்பு கூறப்பட்டுள்ள மந்திர முறைகளால் கூறவும், உரிய காலத்தில் அங்குரார்ப்பணம், ரத்ன நியாஸம் நயனோன்மீலனம்

231. பிம்ப சுத்தி, கிராம பிரதட்சிணம், ஜலாதி வாசம், மண்டப ஸம்ஸ்காரம் அந்த மண்டபத்தில் ஒன்பது ஐந்து ஒன்று என்ற எண்ணிக்கையால் குண்டம் அமைத்தல் முதலியவை செய்யவும்.

232. சில்பியை திருப்தி செய்து, பிராம்மணர்களுக்கு உணவு அளித்து வாஸ்து சாந்தி புண்யாக வாசனம் பிம்ப சுத்தி செய்து

233. ரக்ஷõபந்தனம், ஸ்தண்டில அமைப்பு, சயன அமைப்பு, சயனத்தில் பிம்பத்தை எழுந்தருளச் செய்தல், கும்பபூஜை நைவேத்யங்களை ஸமர்பித்தல்

234. தத்வ தத்வேஸ்வர, மூர்த்தி மூர்த்தீஸ்வர நியாஸம் செய்தல், புரசு, வில்வம், ஆல், அசுத்தி, போதிமரம், இவைகளின் சமித்துகளாலும்

235. நாயுருவி அரசு கருங்காலி ஆகியவைகளால் கிழக்கு முதலான குண்டங்களில் ஹோமம் செய்து பிரதான குண்டத்தில் புரசு சமித்தாலும் நெய், அன்னம், எள்ளு (திலம்) இவைகளாலும் ஹோமம் செய்யவேண்டும்.

236. இரண்டாவது நாள் பூர்ணாஹுதி செய்து குருதட்சிணை கொடுத்து மந்திரன்நியாஸம் முறைப்படி செய்து ஸ்நபனமும், நிறைய அன்னநிவேதனம் செய்ய வேண்டும்.

237. உத்ஸவத்திற்கு உரிய தேவர்களுக்கு பொதுமுறையான உத்ஸவத்தை செய்யவும். மற்ற எல்லா பூஜைகளையும் லிங்க ஸ்தாபன முறைப்படி செய்ய வேண்டும்.

238. முகலிங்க பிரதிஷ்டை அதற்கு உரிய முறைப்படி செய்யவும், எல்லா கார்யங்களிலும் அதற்காக கூறிய முறைப்படி செய்ய வேண்டும்.

239. தனிமையாக எவன் இஷ்டப்பட்ட மந்திரத்தை விருப்பப் பயனை உடைவதாக எண்ணி லிங்கத்தில் ஸ்தாபித்து தனக்கு விருப்பமான நக்ஷத்திரத்திற்கு பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.

240. ஸ்வாயம்புவம் முதலான லிங்கத்தை அடைந்து ஆபிசாரம் முதலான கர்மாவை செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் ஆபிசார பலன் செய்பவனையே சேரும், எப்பொழுதுமே அமைதியை தருவதாகவும், புஷ்டியை தரும், கார்யத்தையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு உத்தரகாமிக மஹாதந்திரத்தில் விருப்பத்திற்கேற்ற லிங்க பிரதிஷ்டை முறையாகிய முப்பத்தியேழாவது படலமாகும்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar