பதிவு செய்த நாள்
26
ஜூலை
2021
10:07
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா தீர்த்தவாரி, கொடியிறக்கத்துடன் நிறைவடைந்தது.
இக்கோயிலில் அழகர் கோயிலைப் போன்று ஜூலை 16ல் கொடியேற்றத்துடன் ஆடி பிரம்மோற்ஸவ விழா துவங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமாள் அன்ன, சிம்ம, சேஷ, கருட, அனுமன், யானை, குதிரை வாகனங்களில் கோயில் வளாகத்திலேயே அருள்பாலித்தார்.நிறைவு நாளான நேற்று கோயில் வசந்தமண்டபம் முன்பு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்குப் பின் தீர்த்தவாரி மூர்த்தியுடன், அர்ச்சகர் தீர்த்தவாரி உற்ஸவம் கண்டருளினார். அப்போது 12 வகையான நைவேத்தியம் படைக்கப்பட்டது.பின்னர் கோயில் வளாகத்தில் பிரபந்தம், வேதபாராயணம், பாகவதர்கள் பாடல் இசைத்தனர். மேலும் மேள, தாளம், சங்கு, சேகண்டி இசையுடன் பெருமாள்வலம் வந்தார். சிறப்பு தீபாராதனைக்குப் பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.தொடர்ந்து மாலை கருடனுக்கு சிறப்பு அபிேஷகம் நிறைவடைந்து, கருடக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவடைந்தது.