பதிவு செய்த நாள்
24
அக்
2021
05:10
பல்லடம்: சுக்கம்பாளையத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பக்தர்களின் கோவிந்தா கோஷம் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. பல்லடம் அடுத்த, சுக்கம்பாளையம் கிராமம் ஊஞ்சப்பாளையத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது. அக்., 23 அன்று கணபதி ஹோமம், பூர்ணாகுதி, முளைப்பாரி எடுத்தல், தீர்த்த குடம் கொண்டு வருதல், முதல் கால வேள்வி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று இரண்டாம் கால வேள்வி, திருப்பள்ளி எழுச்சி, ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. காலை, 8.00 மணிக்கு, பூஜிக்கப்பட்ட தீர்த்த கலசங்கள் எடுத்து வரப்பட்டு, விநாயகர், ராகு கேது, ஆஞ்சநேயர், ஆதிசேஷன், மற்றும் கருடாழ்வாருக்கும் அதையடுத்து மூலவர் ஸ்ரீசீனிவாச பெருமாளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. பேரூர் சந்தானம் ஐயங்கார், மற்றும் காட்டூர் சென்றாய பெருமாள் கோவில் பட்டாச்சார்யார் ரவி ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீநிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.