Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரஜோதிக்கு பின் சபரிமலையில் ... சபரிமலை நடை அடைப்பு: திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்பட்டது சபரிமலை நடை அடைப்பு: திருவாபரணங்கள் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் நாளை நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நாளை நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
02:01

சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நாளை (ஜன.,20) காலை அடைக்கப்படுகிறது.

சபரிமலையில் டிச., 30-ல் தொடங்கிய மகரஜோதி கால பூஜைகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஜன.,14ல் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. அதன் பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து தினமும் இரவு 9:00 மணிக்கு 18-ம் படிக்கு முன் சுவாமி எழுந்தருளினார். நேற்று சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணியுடன் நெய்யபிேஷகம் நிறைவு பெற்றது. இன்று காலை முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும் நெய்யபிேஷகம் கிடையாது. இரவு 9:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். இதன் பின்னர் நடை அடைக்கப்படும்.

நாளை காலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் பந்தளம் மன்னர் பிரதிநிதி சங்கர்வர்மா சன்னதி முன்பு வந்து தரிசனம் நடத்துவார். அவருக்கு பிரசாதம் கொடுத்த பின்னர் மேல்சாந்தி பரமேஸ்வரம் நம்பூதிரி நடை அடைத்து அவருடன் 18-ம் படிக்கு கீழே வருவார். கோயில் சாவி மற்றும் இந்த ஆண்டுக்கான வருமானம் என்று கூறி பண முடிப்பையும் ஒப்படைப்பார். அதை பெற்றுக்கொண்ட மன்னர் பிரதிநிதி மீண்டும் அதை மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் பந்தளம் புறப்படுவார். இந்த நிகழ்வுடன் இந்தஆண்டுக்கான மகரஜோதி சீசன் நிறைவு பெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar