Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகரஜோதிக்கு பின் சபரிமலையில் ... சபரிமலை நடை அடைப்பு: திருவாபரணங்கள் பந்தளத்துக்கு புறப்பட்டது சபரிமலை நடை அடைப்பு: திருவாபரணங்கள் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் நாளை நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நாளை நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

19 ஜன
2022
02:01

சபரிமலை: மகரவிளக்கு கால பூஜைகள் முடிந்து சபரிமலை நடை நாளை (ஜன.,20) காலை அடைக்கப்படுகிறது.

சபரிமலையில் டிச., 30-ல் தொடங்கிய மகரஜோதி கால பூஜைகள் நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஜன.,14ல் பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. அதன் பின்னர் மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் இருந்து தினமும் இரவு 9:00 மணிக்கு 18-ம் படிக்கு முன் சுவாமி எழுந்தருளினார். நேற்று சரங்குத்திக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 10:30 மணியுடன் நெய்யபிேஷகம் நிறைவு பெற்றது. இன்று காலை முதல் வழக்கம் போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டாலும் நெய்யபிேஷகம் கிடையாது. இரவு 9:00 மணிக்கு மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் குருதி பூஜை நடைபெறும். இதன் பின்னர் நடை அடைக்கப்படும்.

நாளை காலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் பந்தளம் மன்னர் பிரதிநிதி சங்கர்வர்மா சன்னதி முன்பு வந்து தரிசனம் நடத்துவார். அவருக்கு பிரசாதம் கொடுத்த பின்னர் மேல்சாந்தி பரமேஸ்வரம் நம்பூதிரி நடை அடைத்து அவருடன் 18-ம் படிக்கு கீழே வருவார். கோயில் சாவி மற்றும் இந்த ஆண்டுக்கான வருமானம் என்று கூறி பண முடிப்பையும் ஒப்படைப்பார். அதை பெற்றுக்கொண்ட மன்னர் பிரதிநிதி மீண்டும் அதை மேல்சாந்தியிடம் கொடுத்து வரும் நாட்களிலும் பூஜைகள் தவறாமல் நடத்த வேண்டும் என்று கூறி திருவாபரணங்களுடன் பந்தளம் புறப்படுவார். இந்த நிகழ்வுடன் இந்தஆண்டுக்கான மகரஜோதி சீசன் நிறைவு பெறும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar