பழநி மலைக்கோயிலில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்ற நிலையில் நேற்று ஜன.24, 25 ல் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதில் (ஜன.25) நேற்று எண்ணிக்கையில் காணிக்கையாக 203 கிராம் தங்கமும், 5 ஆயிரத்து 357 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ 1 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 690 மற்றும் 44 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. இரு நாட்களும் சேர்த்து 470 கிராம் தங்கமும், 16 ஆயிரத்து 608 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் ரூ 3 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரத்து 440 மற்றும் 119 வெளிநாட்டு கரன்சிகள் காணிக்கையாக கிடைத்துள்ளது. உண்டியல் எண்ணிக்கையில் இணை ஆணையர் நடராஜன், கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை வெங்கட்ரமண சுவாமி கோயில் உதவி ஆணையர், செயல் அலுவலர் நந்தகுமார், மதுரை ஹிந்து அறநிலையத்துறை துணை ஆணையர் பொன் சுவாமிநாதம் உட்பட அலுவலர்கள், பணியாளர்கள், ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.