நத்தம்: நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரத்திலுள்ள பக்தர்கள் கலந்துகொண்டு பைரவரை தரிசித்தனர்.