பதிவு செய்த நாள்
14
ஜூலை
2012
10:07
சிவகங்கை: சிவகங்கையில் பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயில் 58ம் ஆண்டு பூச்சொரிதல் விழா காப்பு கட்டுதலுடன் கடந்த 6ந்தேதி துவங்கியது. தொடர்ந்து பல்வேறு அலங்காரத்தில் அம்மன் தினமும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை 10 முதல் 12 மணி வரை அம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது.திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு மேல் அம்மனுக்கு சந்தன காப்பு, பூச்சொரிதல் நடந்தது.தொடர்ந்து இரவில் அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், குழந்தைகளுக்கு மொட்டையிடுதல், பிள்ளைத் தொட்டில் கட்டுதல் உள்பட பல்வேறு நேர்த்திக் கடன்கள் செலுத்தப்பட்டன.விழாவிற்காக வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்திருந்தனர். ஆங்காங்கே கரகாட்டம், இசைக்கச்சேரி உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஜெகநாதன்,குழுவினர் செய்திருந்தனர். விழாவில் கலையரசன், மணிகண்டன், பாக்கியம், ஞானசேகரன், ராதாகிருஷ்ணன், முத்துக்கிருஷ்ணன்,பாண்டி,நயினாமுகமது, பாலாஜி, செல்வராஜ், ராஜேஸ்வரி, அழகர்சாமி, மகேஷ்வரி,ராமலிங்கம், பாலசுப்பிரமணியன்,செந்தில், நாகேந்திரன், அண்ணாமலை , அசோக், ராஜாராம், சண்முகநாதன், ஜெயக்குமார், ராமநாதன், சிவக்குமார், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.