பதிவு செய்த நாள்
04
ஆக
2012
11:08
சாத்தூர்: விருதுநகர், இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடிக் கடைசி வெள்ளி விழா, கொடியேற்றுடன் துவங்கியது. நேற்று காலை 10.30 மணிக்கு, காசிவிஸ்வநாத பட்டர் கொடியேற்றினார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தலைவர் வேலாயுதம், கோயில் உதவி ஆணையர்கள் மாரிமுத்து, தனபாலன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி, ஊராட்சித்தலைவர்கள் பவுன்ராஜ், முருகபூபதி, கண்ணன், கருப்பசாமி பங்கேற்றனர். பக்தர்கள் பொங்கல் வைத்தும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிப்பட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடிக்கடைசி வெள்ளி விழா, ஆக., 10 ல் நடைபெறுகிறது.