Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நந்தவனங்கள் பரமபதவாசல்
முதல் பக்கம் » ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள்
நெய்க்கிணறுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2022
06:08

பால். நெய்:
ஸ்ரீரங்கம் கோயிலிலே பாலும் நெய்யும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக பெருமாள் கோயிலிலே விளக்குக்கும், தளிகைக்கும் எண்ணை எதையும் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. மாறாக

அமுதுபடிகளுக்கும், விளக்குகளுக்கும் சுத்தமான பசுநெய்யே பயன்படுகிறது. அதனால்தான் பெருமாள் கோயிலுக்குள் புகுந்த உடனே நறுமனம் கமழும் நெய்வாசம் வந்து நம்மைச் சூழ்ந்து கொள்கிறது.

ஸ்ரீரங்கம் கோயிலிலே தயாராகும் அனைத்து பட்சணங்களும் நெய்யிலேயே தயாரவதும் தனிச்சிறப்பு. இக்கோயிலில் அதிக அளவில் நெய்யை சேமித்துவைக்க இரண்டு பிரமாண்ட தொட்டிகள் உள்ளது வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும். நெய்க்கிணறு என்றே அழைக்கப்படும் இந்த பிரமாண்ட தொட்டிகள் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள தங்கக் கொடிமரத்தின் கிழக்கில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தின் தென்கிழக்கு மூலையில் இன்றும் உள்ளன. இந்த நெய்க் கிணற்றை காணும்போது, அந்நாளில் ஸ்ரீரங்கத்தில் பாலும்,நெய்யும் குறைவின்றிக் கிடைத்ததை அறியலாம்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆதிசேஷனான பாம்பனை மேல்தான் பள்ளி கொண்டுள்ளார். இந்த ஆதிசேஷனுக்கு மிகவும் பிடித்தது பால்தான். அதனால்தான் தினமும், இரவு நேர அரவணைப் பூஜையின்போது, பெருமாளுக்கு அரவணையும், ஆதிசேஷனுக்கு பாலும் அமுது செய்விக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகின்றன. இதுதவிர மாலையில் நடைபெறும் ஷீரான்ன பூஜையின் போதும் பெருமாள் பால்சாதம் தான் அமுது செய்கிறார். இதிலிருந்தே ஸ்ரீரங்கம் கோயிலில் பாலுக்கும், நெய்க்கும் எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்பது தெளிவாகிறது.

 
மேலும் ஸ்ரீரங்கம் கோயிலின் சிறப்புகள் »
temple news
ஸ்ரீரங்கம் பெரியபெருமாளின் கருவறையில் உற்சவர் நம்பெருமாளின் இரு புறங்களிலும் ஸ்ரீதேவி,பூமாதேவி ... மேலும்
 
temple news
உற்சவர் அழகிய மணவாளன் வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்த காலத்தில், அவர் எங்கிருக்கிறார் என்பது ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் பெரியகோயில் உற்சவர் சுமார் 2 அடி உயரத்தில் காட்சியளிக்கிறார். பஞ்சலோகத்திலான இந்த ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் கோயில் மூலவர் பெரியபெருமாள் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். சுண்ணாம்புக்காரை ... மேலும்
 
temple news
இக்கோயில் தாயார் படிதாண்டா பத்தினியாவார், இவர் எக்காலத்திலும் சன்னதி ஆரியப்படாள் வாசலை விட்டு வெளியே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar