பதிவு செய்த நாள்
18
ஆக
2012
10:08
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மாஷி மலையில் ஆவணி அமாவாசையை முன்னிட்டு மஹா சித்தர்கள் வேள்வி கோபூஜை நடந்தது.உலக மக்கள் நலன் கருதி உலக அமைதிக்காகவும், ஜீவகாருண்ய சிந்தனை ஓங்க, மும்மாரி மழை பொழிய, உலக மக்களின் நல்வாழ்விற்காக, அரசு சுபிட்ஷமான ஆட்சி செய்ய கலியுகத்தை காக்கும் ஸ்ரீகாகபுசுண்டர் மகிரிஷின் தலைமையில் தாய் திரௌபதி ஈஸ்வரி பிறந்த மண்ணில் பிரமரிஷிமலை அடிவாரத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் அமாவாசை தொடங்கி முதல் மூன்று நாட்கள் பதிவிரதை ஸ்ரீமண்டோதரி பூஜை நடைபெற்று 51 நாட்களும் கோ பூஜை தொடர்ந்து செய்வது வழக்கம்.
இதன்படி எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் உலக மகாசித்தர்கள் அறக்கட்டளை நிறுவனர் அன்னை ராஜ்குமார் சுவாமிகள் தலைமையில், மகாதீப ஆராதனையும் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சித்தர்கள் வேள்வி, சூரிய உதயத்தில் கோ பூஜையும் நடந்தது.இதைத்தொடர்ந்து சாதுக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் டாக்டர் ராஜாசிதம்பரம், டாக்டர் நவீதாலட்சுமி, திட்டக்குடி ராஜன், எளம்பலூர் பஞ்., தலைவர் ராமசாமி, துணை தலைவர் பெருமாள் ஆகியோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை டிரஸ்ட் இயக்குநர் ரோகினி மற்றும் இளம் தவயோகிகள் செய்திருந்தனர்.