கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கையில் ரூ 7 லட்சம் வசூலானது. கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கை மற்றும் நேர்ச்சை செலுத்துவதற்காக 17 உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை திறந்து, பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது. இதில் உண்டியல் மூலம் 7 லட்சத்து 16 ஆயிரத்து 177 ரூபாய் வசூலாகியுள்ளது. இது தவிர தங்கம் 4.30 கிராம், வெள்ளி 66 கிராம், மலேசியரிங்கட் 143 ஆகியவையும் கிடைத்தது. பணியில் தேவசம்போர்டு இணைஆணையர் ஞானசேகர், தலைமையில் கண்காணிப்பாளர் ஸ்ரீமூலவெங்கடேசன், முதுநிலை கண்காணிப்பாளர் இங்கர்சால், ஆய்வாளர் சாரதா, உதவி ஆணையர் பொன்சுவாமிநாதன், கோயில் மேனேஜர் சோணசலம் ஆகியோர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணியில் கொட்டாரம், விவேகானந்தகேந்திர என்.எஸ்.எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.