பதிவு செய்த நாள்
22
அக்
2022
12:10
அறியாமை இருளகற்றி பேரின்ப ஒளியேற்றும் உன்னதத் திருநாள் தீபாவளி. இந்த நன்னாள் முதற்கொண்டு வறுமையும் பசிப்பிணியும் விலகி, நம் இல்லமும் உள்ளமும் மகிழ்வுற.. அன்று அன்னபூரணியை மனதார வழிபட வேண்டும். இந்த தேவியின் அருளிருந்தால் நம் வீட்டில் அன்னத்துக்கு பஞ்சம் வராது. அன்னையின் அருளைப் பரிபூரணமாகப் பெற உதவும் அற்புதமான ஒரு ஸ்தோத்திரம் உண்டு.
நித்யானந்தகரீ வராபயகரீ ஸௌந்தர்யரத்னாகரீ
நிர்தூதாகிலகோரபாபநிகரீ ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ
ப்ராலேயாசலவம்ஸபாவகரீ காஸீபுராதீஸ்வரீ
பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ மாதான்னபூர்ணேஸ்வரீ
பொருள் : சாச்வதமான ஆனந்தத்தை உண்டுபண்ணுபவளும் வரத ஹஸ்தத்தையும் அபய ஹஸ்தத்தையும் உடையவளும், அழகுக் கடலாக இருப்பவளும் ஸகலமான பயத்தைத் தரும் பாபக் கூட்டங்களை நாசம் செய்பவளும், சாக்ஷாத் மகேஸ்வரியும், ஹிமாவானுடைய வம்சத்தைப் பரிசுத்தம் செய்பவளும், காசி நகரத்து நாயகியும் பக்தர்களுக்கு கிருபையாகிய ஊன்றுகோலைக் கொடுப்பவளுமான தாயே... அன்னபூரணியே... பிச்சையைக் கொடு.
ஜகத்குரு ஆதிசங்கரர் அருளிய அன்னபூரணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது, விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். அனுதினமும் இந்த ஸ்தோத்திரத்தைப் படித்து...
அன்னபூர்ணே ஸதாபூர்ணே ஸங்கரப்ராணவல்லபே
ஞானவைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம்தேஹி ச பார்வதி...
அதாவது... அன்னம் நிறைந்தவளே, எப்போதும் பூர்ணமாக இருப்பவளே, சங்கரனுடைய பிராண நாயகியே, ஹே பார்வதியே... ஞானம், வைராக்கியம் இவை உண்டாவதற்காக பிச்சைக் கொடு என்று அன்னையைத் தியானித்து வழிபட, சங்கடங்கள் யாவும் நீங்கி சர்வ மங்கலங்களும் நம் வீட்டில் உண்டாகும்.
தீபாவளிக் குளியலில் சொல்ல வேண்டிய மந்திரங்கள்!
‘தீபாவளி அன்று விடியற்காலை வேளையில் எண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராட வேண்டும்.’ என்று சாஸ்திரம் கூறுகிறது. இதனை ‘அபயங்கனம்’ என்பர். அதற்கு முன் கிழக்கு நோக்கி அமர்ந்து எண்ணெயை ஆண்கள் ஏழுதடவையும், பெண்கள் ஐந்து தடவையும் பூமியில் ‘பொட்டாக ’ வைத்து தலையில் தடவிக் கொண்டு வெந்நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும்.
கங்காதேவியை நினைத்து ஆண்கள் சொல்ல வேண்டிய சுலோகம்:
“அஸ்வத்தாமா பலா வ்யாஸோ
ஹனுமான்ச விபீஷண
க்ருப பரசு ராமஸ்ச
ஸப்தை தே சிரஞ்ஜீவன ”
கங்காதேவியை நினைத்து பெண்கள் சொல்ல வேண்டிய சுலோகம்:
“அகல்யா த்ரௌபதீதாரா
சீதா மந்தோ தரீததா
பஞ்சகன்யா: ஸ்மரேந்நித்யம்
மஹாபாதக நாசனம் ’
நதியில் நீராடும் போது சொல்ல வேண்டிய சுலோகம்:
கங்கேச யமுனேசைவ, கோதாவரி சரஸ்வதி நர்மதா சிந்து காவேரி ஜலேஸ்மின் சன்னதிம் குரு’
வீட்டில் வாளியிலிருந்து நீரினை சொம்பினால் எடுத்துக் குளிக்கும் போது கூட இந்த சுலோகத்தைச் சொல்லிக் குளிப்பது நல்லது. அன்று எல்லா நீரிலும் கங்கை ஆவிர்பவிக்கிறாள், நம் வீட்டுக் குழாயில் வரும் நீரிலும் தான்! தீபாவளி அன்று குளிக்கும் நீரில் ஆல், அத்தி, புரசு மா, விலங்கை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரப்பட்டைகளை ஊறவைத்து சிலர் நீரோடுவர். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இந்த வழக்கம் இன்றும் கிராமத்தில் உள்ளது.
தீபாவளி அன்று பூஜை செய்வதற்கு முன், தீபங்கள் ஏற்றும் போது
‘ஸுவர்ண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரி
ஸுதான்ய வ்ருத்திம் குருமே க்ரு ஹேஸ்வரி
கல்யாண வ்ருத்திம் குருமே க்ருஹேஸ்வரி
என்ற சுலோகத்தைச் சொல்லி தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
தீபாவளி அன்று மகாலட்சுமியை வழிபடும் போது:
‘ஓம் மகாலட்சுமி சவித்மஹே
ஸ்ரீவிஷ்ணு பத்னிச தீமஹி
தன்னோ: லக்ஷ்மி பிரசோதயாத்’
என்று 21 தடவைகள் போற்றி வழிபட்டால் செல்வச் செழிப்பு ஏற்படும்.
புத்தாடை அணியும் போது..
தீப தேவி மகா சக்தி சுபம் பவது மேசதா
ஓம் நமோ நாராயணாய வாசுதேவாய
ஓம் நமசிவாய ’
என்று மூன்று முறை சொன்ன பிறகு, புத்தாடைகள் அணிந்தால் மேன்மேலும் ஆடைகள் சேரும்.