திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீப தூணிற்கு போலீஸ் பாதுகாப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 04:12
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீப தூணிற்கு மூங்கில் தடுப்புகள் அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழாவின் உச்சநிகழ்ச்சியாக டிச. 6ல் மலைமேல் உச்சிப் பிள்ளையார் மண்டபம் அருகேயுள்ள மண்டபத்தின் மேல் மஹா தீபம் ஏற்றப்படுகிறது. மலை உச்சியிலுள்ள தீபத்தூணில் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற பல்வேறு ஹிந்து அமைப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். மலை மீதுள்ள தீபத்தூணிற்கு மூங்கில் தடுப்புகள் அமைத்து சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்ட்டுக்கு 3 போலீசார் வீதம் நாள் ஒன்றுக்கு மூன்று ஷிப்ட்டுகளில் 9 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தீப கொப்பரை: டிச. 6ல் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரை கோயில் கம்பத்தடி மண்டபத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. டிச. 6 காலையில் பூஜை முடிந்து மலைமேல் கொண்டு செல்லப்படும். அந்த கொப்பரையில் 300 லிட்டர் நெய் ஊற்றி, 150 மீட்டர் காடா துணியை திரியாக்கி வைத்து, திரியின் மேல் 5 கிலோ சூடம் வைத்து மஹா தீபம் ஏற்றப்படும்.