பதிவு செய்த நாள்
07
டிச
2022
04:12
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, ஈஷா யோகா மையம் முழுவதும், தீப ஒளியால் ஜொலித்தது. கார்த்திகை தீபத்திருநாள், கோவில்களிலும், வீடுகளிலும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவை ஈஷா யோகா மையத்தில் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாடப்பட்டது. இதில், கார்த்திகை தீபத்திருநாளையொட்டி, ஈஷாவில் உள்ள தியான லிங்கத்தில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு விளக்கு ஏற்றினார். ஈஷாவில் உள்ள தியான லிங்கம், சூரிய குண்ட மண்டபம், லிங்க பைரவி உள்ளிட்ட இடங்களில் ஆயிரக்கணக்கில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. ஆதியோகியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் விளக்குகளை ஏற்றினர். இதனால், கார்த்திகை தீபத்திருநாளில், ஒட்டுமொத்த ஈஷாவும் தீபாவளியில் ஜொலித்தது.