Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதல் பக்கம் » தகவல்கள்
பாகிஸ்தானின் இந்து கோவில்களை சீரமைக்கக்கோரி லாகூர் கோர்ட்டில் மனு!
செப்டம்பர் 01,2012
அ-
+
Temple images

லாகூர்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோவில்களை சீரமைக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு செய்யப்பட்டுள்ளது.இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, ஏராளமான இந்து கோவில்கள், பாகிஸ்தானில் பராமரிக்கப்படாமல் உள்ளன. மாபியா கும்பல்கள் கோவில் நிலங்களை ஆக்ரமித்துள்ளன. இந்தியாவில் இருந்த, பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானில் பெரும்பாலான கோவில்கள், தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள கோவில்கள், சிதிலமடைந்து காணப்படுகின்றன. பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாழடைந்த கோவில்களை சீரமைக்கவும், மாபியா கும்பல்களிடமிருந்து கோவில் நிலங்களை மீட்டு தரும் படியும் கோரி, ஜாவீத் இக்பால் என்ற வழக்கறிஞர், லாகூர் உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

Share  
Bookmark and Share

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2013 www.dinamalar.com. All rights reserved.