பதிவு செய்த நாள்
03
செப்
2012
10:09
ஷீரடி: மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலுக்கு, பக்தர்கள் தங்கள் காணிக்கையாக தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை வழங்குகின்றனர். காணிக்கையாகப் பெற்ற இந்த தங்கம், வெள்ளி நகைகளை ஏலம் விட, கோவில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, கோவில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரி கிஷோர் மோரே கூறுகையில், "கோவில் அறக்கட்டளை வசம், 280 கிலோ தங்கமும், 3,000 கிலோ வெள்ளியும் உள்ளன. இதில், 37 கிலோ தங்கமும், 516 கிலோ வெள்ளியும் உருக்குவதற்காக மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள், அடுத்த மாதம் ஏலம் விடப்படும், என்றார்.