கிராமக்கோயில் பூஜாரிகள் உண்ணாவிரதம் இருக்க முடிவு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08செப் 2012 10:09
திருநெல்வேலி:தமிழகத்தில் கிராம பூஜாரிகள் நலவாரியத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 10ம் தேதிமாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்ட நடத்த உள்ளதாக விஸ்வ இந்து பரிஷத் வழிகாட்டி வேதாந்தம்ஜி தெரிவித்தார்.விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வழிகாட்டி வேதாந்தம்ஜி நேற்று, நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழக கிராமகோயில் பூஜாரிகளுக்காக அரசின் நலவாரியம் தற்போது கலைக்கப்பட்டுள்ளது. இந்த நல வாரியம் செயல்பட்டால் பூஜாரிகளுக்கு மாத உதவித்தொகையும் ஓய்வூதியமும்,குடும்பத்தினருக்கு பிற உதவிகளும் கிடைத்துவந்தது. ஆனால் தற்போது அவை நிறுத்தப்பட்டுள்ளது. நல வாரியம் செயல்பட்ட போது முந்தைய முதல்வர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஜெ.,ஆகிய இருவரும் கிராம பூஜாரிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளனர்.எனவே, மீண்டும் நலவாரியத்தை செயல்படுத்த வலியுறுத்தி வரும் அக்டோபர் 10ல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் தோறும் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகிறது. கோயில்களில் சுவாமி தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க கூடாது. கட்டணம் வசூலிப்பது ஆகம விதிகளுக்கு விரோதமானதாகும். நெல்லை மாவட்டம் உவரியில் காரிசாஸ்தா கோயில் நிலத்தில் தனியார் நிறுவனம்தோரியம் மணல் அள்ளியதை கண்டிக்கிறோம். அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.இவ்வாறு வேதாந்தம்ஜி தெரிவித்தார். பேட்டியின் போது வி.எச்.பி.,தமிழக செயல் தலைவர் கிரிஜா சேஷாத்ரி, கோட்டா பொறுப்பாளர் மாரியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.