பதிவு செய்த நாள்
12
அக்
2012
10:10
பழநி: பழநி கோயில் உண்டியல் வசூல், ஒரு கோடியே 26 லட்ச ரூபாயை எட்டியது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், உண்டியல் வசூல் எண்ணும் பணி, மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. ரொக்கம் ஒரு கோடியே, 25 லட்சத்து 63 ஆயிரத்து 690 ரூபாய் இருந்தது. தங்கத்திலான வேல், நாணயம்,செயின், மோதிரம், வெள்ளியிலான வேல், ஊஞ்சல், உருவம் போன்றவை காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. தங்கம் 425 கிராம், வெள்ளி மூன்றாயிரத்து 876 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 611 இருந்தன. வெளிநாட்டு நாணயங்கள், கைக்கடிகாரம், பரிவட்டம் போன்றவை, உண்டியலில் செலுத்தப்பட்டு இருந்தன. இந்த வசூல், 22 நாட்களில் கிடைத்தது.