பதிவு செய்த நாள்
06
பிப்
2013
12:02
சென்னை: ஆண்டவ பெருமாள் என்ற படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் செந்தில் உள்ளிட்ட, 10 பேர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: இம்மாதம், 22ம் தேதி வெளிவரவுள்ள, கடவுள் சம்மந்தமாக கதை அம்சம் இல்லாத, "ஆண்டவ பெருமாள் என்ற காதல் திரைப்படத்துக்கு, இந்து கடவுளின் பெயரை வைத்து கொச்சைப்படுத்தியுள்ளனர். இதுபோன்ற தலைப்புகளுக்கு, தணிக்கை குழுவினர் அனுமதி தரக்கூடாது. இதனால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த படத்தின் தலைப்பை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வருங்காலங்களில், இதுபோன்ற காதல் திரைப்படங்களுக்கு, கடவுள் பெயர்களை தலைப்பாக வைத்தால், அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராடுவோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.