பதிவு செய்த நாள்
13
ஜூலை
2013
10:07
சிவகங்கை: சிவகங்கை, பிள்ளையவயல் காளியம்மன் கோயிலில் 59ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, பெண்கள் பூத்தட்டு ஏந்தி வந்து, அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர். இங்கு, ஜூலை 5ல் காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.8ம் நாளான நேற்று, காலை 10.30 மணிக்கு, அம் மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அன்று மாலை 4 மணிக்கு, சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அம்மன் காட்சி அளித்தார். நகரின் பல்வேறு வீதிகளில் இருந்து,பெண்கள் பூத்தட்டு ஏந்திவந்து, அம்மனுக்கு பூக் களால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, கோயில் முன் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், பிள்ளை தொட்டி கட்டுதல் போன்ற நேர்த்திகளை செலுத்தினர். இரவு, ஓலையால் வேயப்பட்ட தேரில், அம்மன் திருவீதி உலா வந்தார். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, நகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டு போட்டிகள் நடந்தன. அபிஷேகத்தை பரம்பரை பூசாரி பூமிநாதன் செய்திருந்தார். கோயில் நிர்வாக அலுவலர் இளையராஜா ஏற்பாடுகளை செய்தி ருந்தார். பல்வேறு அமைப்புகள் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது.