காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் பிரமோற்சவ தெப்ப திருவிழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2014 11:04
காரைக்கால்: காரைக்கால் கைலாசநாதர் கோவில் பங்குனி உத்திர பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து 5 மற்றும் 6ம் தேதி பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது. 7ம் தேதி அஷ்டதிக் பலி பூஜையுடன் கைலாசநாதர் யானை வாகனத்திலும், 8ம் தேதி வெள்ளி ரிஷபவாகனத்திலும் வீதி உலா நடந்தது. 10ம் தேதி திருக்கல்யாணம், 12ம் தேதி தேர் திருவிழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு தெப்ப திருவிழா நடந்தது. இதில், சுந்தராம்பாள் சமேதராக கைலாசநாதர் தெப்பத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜன்வீரசாõமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.