ஆறடி உயரத்தில் கூப்பிய கரங்களிடையே சிவலிங்கத்தை ஏந்தியவாறு நின்ற திருவடிவினராக அனுமன் அருள்பாலிக்கும் தலம், கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கூகலூர். இவர் அதிசய ஆஞ்சநேயர் என்றழைக்கப்படுகிறார். உடல்நிலை சரியில்லாதவர்கள் மகப்பேறு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு சனிக்கிழமை இங்கே வந்து வடைமாலை சாத்தி இவரை வழிபட்டால் நற்பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.