பார்த்தசாரதி கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2014 05:04
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்தனர்.