பதிவு செய்த நாள்
05
மே
2014
10:05
கீழக்கரை : உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயில் சித்திரை திருவிழா நேற்று (மே 4ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. உத்தரகோசமங்கை மங்களநாத சுவாமி கோயிலில் நேற்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடந்தது. பின், தீபாராதனைகள் முடிந்து காலை 10.45 மணிக்கு அம்பாள் சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக நான்கு ரத வீதிகளில் கொடி பட்டம் வீதி உலா வந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மே 11ல், மதியம் 3மணிக்கு திருக்கல்யாணம், மே12ல், மாலை 4.30 மணிக்கு தேரோட்டம், மே 13ல், தீர்த்தோத்ஸவம், மே 14ல், மங்கை பெருமாள் குதிரை வாகனத்தில் கோவிந்தன் கோயில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினமும் இரவு ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. திவான் மகேந்திரன், கோயில் அலுவலர் சுவாமிநாதன், ஊராட்சி தலைவர் நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேஷ்கார் ஸ்ரீதர் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.