வில்லியனூர்: வில்லியனூர் புனித லூர்து மாதா ஆலயத்தில், ஆடம்பர தேர்பவனி நடந்தது. வில்லியனூரில் புனித லூர்து மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய, 137 வது ஆண்டு பெருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றுத்துடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும், காலை 5:30 மணிக்கு திருப்பலியும், மாலையில் தேர்பவனியும் நடந்து வந்தது. முக்கிய விழாவான ஆடம்பர தேர்பவனி நேற்று நடந்தது. மாலை 7:30 மணிக்கு, கூட்டு திருப்பலி நடந்தது. வைர கிரீடத்தால் அலங்கரிக்கப்பட்ட மாதா, தேரில் எழுந்தருள முக்கிய வீதிகள் வழியாக ஆடம்பர தேர்பவனி நடந்தது. விழாவில் பேராயர் அந்தோணி ஆனந்தராயர், விருத்தாசலம் பங்கு தந்தை பிச்சை முத்து அடிகளார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.