பதிவு செய்த நாள்
31
மே
2014
12:05
சென்னிமலை: சென்னிமலை மலை மீதுள்ள ஸ்ரீசுப்பிரமணிய ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா, ஜூலை, ஏழாம் தேதி நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், மலை மீதுள்ள சென்னிமலை சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், வரலாற்று சிறப்பு மிக்க, புராதன கோவிலாகும். இங்கு, ஐந்து நிலை ராஜகோபுரம் உட்பட, ஆறு கோடி ரூபாய் மதிப்பிலான, திருப்பணிகள் கடந்த, சில ஆண்டாக நடந்து வருகிறது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த, ஜூலை, ஏழாம் தேதி காலை, ஒன்பது முதல், 10.30 மணிக்குள் நடத்த, அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்துவது குறித்த ஆ÷ லாசனை கூட்டம், காங்கேயம் எம்.எல்.ஏ., நடராஜ் தலைமையில் நடந்தது. மாவட்ட கவுன்சிலர் கோபாலகிருஷ்ண ன், யூனியன் தலைவர் கருப்புசாமி, டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜம்பு என்ற சண்முகசுந்தரம், துணை தலைவர் தெய்வசிகாமணி, மற்றும் பூந்துறை, வெள்ளோடு, நசியனூர், எழுமாத்தூர் ஆகிய நான்கு நாட்டுகவுண்டர்கள், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் யூ.ஆர்.சி., கனகசபாபதி, வக்கீல் பழனிசாமி, முருகன் அடிமை சுப்புசாமி, வேட்டுவபாளையம் பூசாரியார் பொன்னுசாமி, உட்பட பலர் பங்கேற்றனர்.
எம்.எல்.ஏ., நடராஜ் பேசியதாவது: கும்பாபிஷேக விழா, சிறப்பாக நடத்தவும், பல திருப்பணிகள் நடக்கவும் உபயதாரர்கள் முன்வர வேண்டும். கும்பாபிஷேகத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இதற்கும் தேவையான பொருட்களை, உபயதாரர்கள் வழங்க வேண்டும். கும்பாபிஷேகம் அன்று, ஹெலிகாப்டர் மூலம், மலர் தூவவும், கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வரும், அனைவருக்கும் சிறப்பாக, அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். வருகிற ஜூன் முதல் தேதி, காலை யாகசாலை அமைக்க சிறப்பு பூஜை நடத்துவது என்றும், யாகசாலையில், 66 யாக குண்டங்கள் அமைக்கவும், இதில் பூஜைக்காக, 150க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் பங்கேற்க செய்ய முடிவு செய்தனர்.