கொள்ளிடத்தில் 30 ஆண்டுகளுக்கு பின் நடராஜர் சுவாமி தீர்த்தவாரி உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஜூலை 2014 12:07
சிதம்பரம்: ஆடி பெருக்கையொட்டி 30 ஆண்டுகளுக்கு பின்னர் நடராஜர் சுவாமி கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடக்கிறது.சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமி (சந்திரசேகர சுவாமி) ஆடிப் பெருக்கு அன்று புறப்பாடு செய்து கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று, நடராஜர் கோவிலுக்கு சொந்தமான தீர்த்தவாரி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.ஆனால், இந்நிகழ்வு பல்வேறு காரணங்களால் கடந்த 30 ஆண்டுகளாக தடைபட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு பொதுதீட்சிதர்கள் சார்பில் வரும் 3ம் @ததி ஆடிப்பெருக்கு அன்று நடராஜர் சுவாமி புறப்பாடு செய்து தீர்த்தவாரி உற்சவம் கொள்ளிடம் ஆற்றில் நடக்கிறது.அன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்து, காலை 6:00 மணிக்கு அஸ்தரராஜருடன் நடராஜர் சுவாமி புறப்பாடாகி பக்தர்களுடன் சென்று, கொள்ளிடம் ஆற்றில் 10:30 மணிக்கு எழுந்தருளுகிறார்.பின்னர், நடராஜர் சுவாமி முன்னிலையில் அஸ்தரராஜருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்யப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் தீர்த்தவாரி நடக்கிறது. பின்னர் மகா தீபாராதனை நடந்து சுவாமி தீர்த்தவாரி நீராழி மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மாலை 4:00 மணிக்கு புறப்பாடு செய்து கோவில் வந்தடைகிறார்.அதனால் கொள்ளிடக்கரையில் நீராழி மண்டபம் 30 ஆண்டுகளுக்கு பின்னர் சீரமைக்கும் பணி நடக்கிறது.