மயிலம்: மயிலத்திலுள்ள கருப்பண்ண சுவாமிக் கோவிலில் ஆடிமாத உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. மாலை 4 மணிக்கு கிராம பெண்கள் பொங்கல் வைத்து சுவாமிக்கு படையலிட்டனர். பக்தர்கள் அலகுகள் குத்திக் கொண்டும், முதுகில் கொக்கிகள் மூலம் மினிலாரிகளை இழுத்து வந்து நேர்த்தி கடனை செலுக்தினர். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.