பதிவு செய்த நாள்
19
ஆக
2014
11:08
கம்மாபுரம்: தேவங்குடி கோதண்டராம சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சிகள் நடந்தன. கம்மாபுரம் அடுத்த தேவங்குடி கோதண்டராம சுவாமி கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி, காலை 7:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, பகல் 12:00 முதல் 2:00 மணி வரை மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, சந்தனக்காப்பு அலங்காரம், கண்ணன் பிறப்பு கதை பாட்டு மற்றும் பஜனை நடந்தது. மாலை 4:30 மணியளவில் நடந்த உறியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், ஏராளமான சிறுவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். தொடர்ந்து கோதண்டராம சுவாமிக்கு அன்னப்படையல் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இ@த@பால், வி ருத்தாசலம் சாத்துக்கூடல் சாலை, வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலை பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் உறியடி திருவிழா நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.