Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி ஐயப்பன் கோவில் திருப்பணி ... கடல் நீரை மாசுபடுத்தாத சிலைகள்... : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உஷார்! கடல் நீரை மாசுபடுத்தாத சிலைகள்... : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் குங்குமம், விபூதி தயாரிப்புக்கு தமிழக அரசு அனுமதி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 ஆக
2014
12:08

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட, தமிழகத்தில் உள்ள நான்கு முக்கிய கோவில்கள் சார்பில், குங்குமம் தயாரித்து விற்பனை செய்ய, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள, முக்கிய கோவில்கள் சார்பில், நியாய விலை அர்ச்சனை பொருட்கள் விற்பனை, சமீபத்தில் துவக்கப்பட்டது.

நியாய விலை : இதற்கு, பக்தர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதையடுத்து, பெண் தெய்வங்கள் குடிகொண்டுள்ள கோவில்கள் சார்பில், மஞ்சள், குங்குமம் தயாரித்து, நியாய விலையில், பாக்கெட் வடிவில் விற்கவும், இலவசமாக குங்குமப் பிரசாதம் வழங்கவும், அரசு அனுமதி வழங்கிஉள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில்; ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோவில்; திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில்; திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் ஆகியவற்றில், மஞ்சள், குங்குமம் தயாரித்து விற்பனை செய்ய, ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இவை, தரமானதாக, சுண்ணாம்பு கலப்படம் இல்லாமல் இருக்கும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். குங்குமம் தயாரிக்க, ஒவ்வொரு கோவிலுக்கும், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரம், வழங்கப்பட உள்ளது.

ஜவ்வாது விபூதி : தமிழகம் முழுவதும், மாதம், 25 லட்சம் ரூபாய் வருமானம் உள்ள சிவன் மற்றும் சைவ சமய வழிபாட்டு கோவில்களில், ஜவ்வாது வாசனையுடன், தரமான விபூதி தயாரிக்கவும், விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளது. சில கோவில்களில், கழிவு சங்குகளை பவுடராக்கி, விபூதியாக வழங்கப்படுகிறது. இது, ஆகம விதிமுறைக்கு எதிரானது என, சிவனடியார்கள் கருதுகின்றனர். எனவே, கோவில்களின் பசுமடத்தின் எருவாட்டியை, மூலப்பொருளாக, ஜவ்வாது கலவையில் விபூதி தயாரிக்கப் பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar