பாகூர்: பாகூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டு பெருவிழாவையொட்டி, ஆடம்பர தேர்பவனி நடந்தது. பாகூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலய 148ம் ஆண்டு பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் மாலை 6:00 மணிக்கு சிறிய தேர் பவனி நடந்து வந்தது. ஆண்டு பெருவிழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு, கடலுார் புனித வளனார் தொழிற்பள்ளி பங்குதந்தை தனம் தலைமையில், ஆடம்பர தேர்பவனி நடந்தது. பூக்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஜெயராக்கினி அன்னை எழுந்தருள மாட வீதிககள் வழியாக பவனி நடந்தது. தேர்பவனியில் ஏராளமான பொதுமக்கள் கையில் மெழுகு வர்த்திகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். ஏற்பாடுகளை ஜார்ஜ், போஸ், ஜெயராஜ் உள்ளிட்ட ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.