நகரி : அம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழாவை முன்னிட்டு கங்கையம்மன் - சேதம்மன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சித்துார் மாவட்டம், நகரி அடுத்த, புதுப்பேட்டை கிராமத்தில் உள்ள, சிவகங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை திருவிழா நேற்று நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை 8:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. மதியம் பூகரகம் ஊர்வலம் நடந்தது. மாலை, திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் இரவு, கும்பம் கொட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.முன்னதாக, உற்சவர் கங்கையம்மன் - தேசம்மன் மலரால் அலங்கரிக்கப்பட்டு, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு நாடகம் நடந்தது. இந்த விழாவில் நகரி, புதுப்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.