பதிவு செய்த நாள்
03
செப்
2014
11:09
நகரி: கனுமகுண்டா கிராமத்தில் தீமிதி திருவிழா நடந்து வருகிறது. இதில், நேற்று முன்தினம் அர்ச்சுனன் – திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. சித்துார் மாவட்டம், பாலசமுத்திரம் வட்டம், பலிஜகண்டிகை அடுத்துள்ள கனுமகுண்டா கிராமத்தில், கடந்த மாதம் 28ம் தேதி, தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு தெருக்கூத்தும் நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் அர்ச்சுனன் – திரவுபதி திருக்கல்யாணம் நடந்தது. இன்று (செப்., 3) காலை 10:00 மணிக்கு, அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சியும், வரும் வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு, மாடு பிடி சண்டையும் நடைபெற உள்ளது. சனிக்கிழமை இரவு 8:00 மணிக்கு, இலாவந்தி பலி, நிகழ்ச்சி நடைபெறும். வரும் 7ம் தேதி, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் வதம் செய்யப்படுகிறான். மாலை 6:00 மணியளவில், அக்னி குண்ட பிரவேசம் நடைபெறும். இதில், காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.