விழுப்புரம்; நவராத்திரி விழாவையொட்டி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது. நேற்று முன்தினம் நவராத்திரி ஐந்தாம் நாளையொட்டி, அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. மாலை 6 :00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 8 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.