துர்க்கைக்கு தமிழில்கொற்றவை என்று பெயர். இளங்கோவடிகள்சிலப்பதிகாரத்தில் கொற்றவை வடிவம் பற்றி கூறியுள்ளார். கொற்றவையின் நீண்ட சடைமுடியில் பாம்புக்குட்டி போல அமைந்த தங்கக் கயிறு சுற்றியிருக்கும். பிறைநிலவு போல பன்றியின் பல்லினை சூடியிருப்பாள். நெற்றியில் இமைக்காத கண் கொண்டு இருப்பாள். அவளின் பவள வாயில் முத்து போல பற்கள் பிரகாசிக்கும். கரிய கழுத்தில் புலிப்பல் தாலி சூடியிருப்பாள். வில், திரிசூலம், வாள், சங்கு, சக்கரம், தாமரை ஏந்தியிருக்கும் அவள் யானை, புலி, சிங்கம் ஆகியவற்றின் தோலினைப் போர்த்தியிருப்பாள். மகிஷசுரனாகிய எருமையின் தலை மீது ஏறி நிற்பாள். சிங்கத்தைக் கொடியாகவும், வாகனமாகவும் கொண்டிருப்பாள். வெற்றி தேவதையான இவளைபறையடித்தும், மணி ஒலித்தும், வீரர்கள் போரில் வெற்றிஅருளும்படி வேண்டிக் கொள்வர். நம் செயல்பாடுகளில் வெற்றி பெற துர்க்கையின் அருள் நிச்சயம் தேவை.