ராவணனுடன் போருக்குச் செல்லும் முன்,ராமன் வெற்றி பெறுவதற்காக வன்னி மரத்தைவலம் வந்து அம்பிகையை வழிபட்டார். இதன் அடிப்படையில் மராட்டிய வீரர்கள் வன்னி மரத்தை வழிபட்டு அதன் இலைகளைப் பிரசாதமாகப் பெற்று போருக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். பாண்டவர்கள் வனத்தில் மறைந்து வாழ்ந்த காலத்தில், தங்களின் ஆயுதங்களை வன்னி மரப்பொந்தில் ஒளித்து வைத்ததாகவும், பின்னர் விஜயதசமி நாளில் அவற்றைப் பூஜித்து போருக்கு பயன்படுத்தியதாகவும் தகவல் உண்டு. விஜயதசமி நாளில் வன்னி மரத்தைதலமரமாகக் கொண்ட கோயில்களில்21 தடவை வலம் வந்து வழிபட்டால்நினைத்தது நிறைவேறும்.