மயிலாடுதுறை: கங்காதேவி முதலான அனைத்து நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழி செய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது பாவங்களை போக்க ஐப்பசிமாதம் முழுவதும் மயிலாடுதுறை காவிரி நதியி ல் நீராடினால் உங்கள் பாவச்சுமைகள் குறையும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியி ல் ஐப்பசி 30 நாட்கள் புனித நீராடினால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். அதனால் காசிக்கு இணையான தலமாக மயிலாடுதுறை விளங்கி வருகிறது.பெருமை மிக்க துலா உற்சவம் மயிலாடுதுறையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களுக்கும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீஅபயாம்பிகை சமேத மாயூரநாத சுவாமி, ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர்,அறம் வளர்த்தநாய கி சமேதஅய்யாறப்பர் சுவாமி,பரிமளரங்கநாதர் சுவாமி ஆகிய ஐந்து சுவாமிகளும் காவிரியின் இருகரை களிலும் எழுந்தருளி காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசிமாதம் 30 நாட்களும் தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கிய நிகழ்வாக ஐப்பசி பிறப்பு முதல்நாள் தீர்த்தவாரி, அமாவாசை தீர்த்தவாரி, ஐப்பசி மாதம் கடைசி நாள் துலா உற்சவ தீர்த்தவாரி மிகவும் முக்கியமான விழாவாகும். கடைசி நாள் தீர்த்தவாரியில் உலகின் பலபகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் நீராடுவதுவழக்கம். சிறப்புவாய்ந்த துலாஉற்சவம் இன்று (18ம்தேதி) தொடங்குகிறது.அதனை முன்னிட்டு அபயாம்பிகை சமேத மாயூர நாதர் சுவாமி உட்பட ஐந்து சுவாமிகளும் சிறப்பு அலங்காரத்தி ல் முக்கிய வீதிகள்வழியாக காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி மதியம் 1.35மணியளவில் தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து 30 நாட்கள் நடைபெறும் துலா உற்சவத்தில் முக்கி ய நிகழ்வாக வரும் 23ம் தேதி அமாவாசை தீர்த்தவாரியும், நவம்பர் 7ம் தேதி திருக்கொடியேற்றமும்,13ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 15ம் தேதி திருத்தேரோட்டமும்,நவம்பர் 16ம்தேதி கடைமுக தீர்த்தவா ரி உற்சவமும் நடைபெறுகிறது.