திருவாரூருக்கு 14 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் திருநெல்லிக் காவல். இங்குள்ள நெல்லிவன நாதர் இறைவனாக இருந்து அருள்புரிகிறார். நவகிரகங்களில் சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகிய கிரகங்கள் இவரை வழிபட்டனர். இந்த ஊரில் சூரியன் ஒரு தீர்த்தத்தை அமைத்திருக்கிறான். அந்த தீர்த்தத்தில் முறைப்படி நீராடினால் எல்லா நோய்களும் நீங்கும். சூரியன் அமைத்த இந்தத் தீர்த்தத்துக்கு ரோக நிவாரண தீர்த்தம் என்று பெயர்.