கடலூர்: ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருமூல நட்சத்திர பிறந்த நாளையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீமணவாள மாமுனிகள் அவதரித்த ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத வரதராஜப்பெருமாளுக்கும், ஸ்ரீமத்மணவாள மாமுனிகளுக்கும், சிறப்பு தி ருமஞ்சனமும், மாலை 6 மணிக்கு ஸ்ரீமத்மணவாளமாமுனிகள் சேஷ வாகனத்தில் புறப்பாடும் நடந்தது. விழா ஏற்பாடுகளை ராதாகிருஷ்ணன் நாயுடு குடும்பத்தினர், செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், தக்கார் கோவிந்தசாமி செய்திருந்தனர்.