ராசிபுரம் :ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், நவம்பர், 6ம் தேதி அன்னாபிஷேக விழா நடக்கிறது.அன்று காலை, மூலவரான கைலாசநாதருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து, மாலை 5 மணிக்கு, 100 கிலோ அன்னத்தால் ஸ்வாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதையடுத்து அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்ட சாதம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.இதற்கான ஏற்பாடுகளை, அன்னாபிஷேக நிரந்திர கட்டளைதாரர் சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.