திண்டிவனம்: சுப்ரமணியசுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா நடந்தது. திண்டிவனம் ராஜாங்குளக்கரையில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 24 ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் 6 வது நாளான கந்த சஷ்டியை முன்னிட்டு மூலவருக்கு மகா அபிஷேகம் நடந்தது. வெள்ளிகாப்பு மற்றும் மலர் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் விரதமிருந்து, அங்கபிரதட்சணம், அடி பிரதட்சணம், 108 சுற்று வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்தி, சூரனும் வீதியுலா வந்தனர். இரவு 10 மணிக்கு கோவில் முன்பு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் விழா நடந்தது. பூஜைகளை ராதாகுருக்கள், கணேசன், முகேஷ் குருக்கள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இரவு 8 மணிக்கு முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.